twitter




















என்ர பிரண்ட் வேலைக்கு போறாள் இதை பெருமையாக கூறப்போகிறேன் என நினைக்காதீர்கள். அவள் வேலைக்கு போய் சம்பாதிக்கிறாளோ இல்லையோ ஆனால் நிறைய முரண்பாடுகளையும் எதிர்கணிய கருத்துக்களையும்தான் சம்பாதிக்கிறாள்.



காலையில எழும்பி பஸ்சுக்கு வெளிக்கிடுறதில இருந்து வீட்டுக்கு வந்து சேருமட்டும் இவள் மற்றவைக்கு பேசிக்கொண்டு இருப்பாள். தனக்கு தானே பேசினால் பறவாயில்லை போனை எடுத்து என்னிடம் வாசிக்க தொடங்குவாள் ஒரு அளவு கணக்கு இல்லை.



என்ன செய்வது நண்பியாக போய் விட்டாள். தன்னுடைய மற்ற நண்பியை வெளிக்கிட்டு பஸ்சுக்கு வரச் சொல்லி விட்டு…… பிறகு அதை தனியா சொல்றன்… என்ன அவளைப்பற்றி தான் வேற என்ன சொல்ல போறன்…….



நபர் தமிழன்தான் அவருடன் தமிழ் கதைப்பது என்பது கல்லில் நார் உரிப்பது மாதிரித்தானாம். இன்னொரு பிரச்சினை அவளுக்கு சிங்களம் தெரியாது. ஆனால் அங்கே ஒப்பீஸில் கூட்டம் நடைபெறும் அங்கு என்ன நடைபெறுகிறது என தமிழில் கூறுங்கள் எனின் வாயே திறக்க மாட்டாராம். இப்படியும் ஒரு பிறப்பு இருக்குது என கண்டபடி பேசுவாள். என்ன ஒரு கொடுமை எனின் அவள் இனி அவருடன்தான் வேலை செய்ய வேண்டுமாம்.






















அது மட்டும் அல்ல ஏதாவது விசேஷம் எனின் சிற்றுண்டி வழங்குவதிலும் அதே நிலைதான். ஒரு நாள் யாற்றையோ கலியான வீடாம் என்று கேக் கொண்டு வந்து தந்தவையாம். அப்ப கேக் குடுத்துக் கொண்டு வரேக்க பிரண்ட் தான் முதல் வரிசையில் இருந்தவளாம். கேக் குடுத்துக் கொண்டு வந்தவ தமிழ் தான். இருந்தாலும் அவளுக்கு கேக் குடுத்தது கடைசியாத்தான்.




பாருங்கோவன் இதிலையும் பெரும்பான்மையா?
ஒபீஸ்ல எல்லோருக்கும் தனிதனி போன் குடுத்தவையாம்…….
ஆனால் இவளுக்கு ஒரு போன் கூட குடுக்கல்லயாம். பிறகு வேலையை ஒழுங்கா செய்யல்ல எண்டு பேச்சாம்… ஓழுங்கா குடுத்திருந்தா அவள் வேலை செய்திருப்பாள் தானே…..
அவயள் தட்டிக் கழித்தால் நாங்களும் விட்டுடுவமா???



தலைவர் சொல்லியிருக்கிறார் நாட்டில பெரும்பான்மை இல்லை என்று ஆனால் நடப்பது வேறு தானே …



என்னத்ததான் கதைத்துப் பேசினாலும் அவன் அவன் தன்ர வேலையைத் தான் செய்வாங்கள்…சும்மா போங்கோ...
கேக் குடுக்கிறதிலயே இப்பிடி எண்டா……. உரிமை குடுக்கிறது எண்டால் எப்பிடி??? ஐயோ நினைகவே தேவையில்ல.
நாங்கள் சாகும் வரை கத்த வேணும் அவங்கள் கேட்டுக் கேட்டே சகாகட்டும். இழவு விழுந்தவை….



4 comments:

  1. அன்புள்ள நண்பியே ..
    இது எல்லா ளையும் நடக்குது .எல்லாருக்கும் தெரிந்ததுதான் .நீங்கள் துணிவோட வெளிப்படையா சொல்லியிருக்கிங்க .......ம்ம்ம் ம்ம்ம் என்ன செய்யுறது பொறுத்துதான் ஆகவேண்டும்

  1. என்னத்த பொறுக்கிறது .....இப்படியே நீண்டு கொண்டு போக முடியாது .அவங்கள் குரங்குகள் தான் சரியாய் சொனிங்க

  1. அடி! உனக்கு என்ன ஆச்சு? என்ன எழுதுறாய்? ஓன்ணுமே புரியல. ஏதோ விவகாரம் இருக்கு எண்டு மட்டும் புரியுது.. வேலை பிடிக்கலயா? விட்டுட்டு வா! அங்க ஒரு கிழமை, பொங்க ஒரு நாள்… இதெல்லாம் நமக்கு சகஜமப்பா..

    ஆனா ஓன்றை மட்டும் ஞாபகம் வைச்சிரு. தொப்பி, பேனை, பேப்பர் எல்லாம் யார் தருவா?!!!! மம்ம்…

  1. நீங்களும் அந்த வகையா?அதுவின் செயல் அதுக்குதான் புரியுமாம் .....................ஐயோ குரங்கு இப்ப என்னில பாயுது ........ஊ ஊ ஊ ஆ ஆ ஈ ஈ

Post a Comment