undefined
undefined
undefined
போக்கிரி படத்தில நெப்போலியன் கமிசனரா பொறுப்பேற்றதும் என்கௌன்டரில ரௌடிகளை போட்டு தள்ளுவர். இதே போல ஒரு விஷால் படமும் ஸ்டார்ட் பண்ணும். இந்த என்கௌன்டர் மாட்டரை நாங்க சினிமாவில தான் பார்த்திருக்கம், தமிழ் நாட்டில நேற்று முன்தினம் ஒரு ஸ்பெஷல் என்கௌன்டர் நடந்திருக்கு, படத்தில ஹீரோ செய்யுற வேலையை உண்மையா ஒரு போலீஸ் அதிகாரி செய்திருக்கிறார். இந்த இடத்தில் சில வாரங்களுக்கு முன் ரௌடிகளால் வெட்டி கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரையும் மறக்கேலாது, எதனையும் செய்ய துணிவு வேணும், படத்தில் விஜயகாந்த் , அர்ஜுன் மாதிரி சும்மா போட்டு தல்லேலாது.

குற்றவாளிகளான கவியரசு, முருகன் ஆகியோரை, உதவி போலீஸ் அத்தியட்சகர் வெள்ளைதுரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகளின் அதிரடியால், ரவுடிகள் கலக்கம் அடைந்துள்ளனர். நேற்றைய இந்திய ஊடகங்களின் முக்கிய செய்தி, மதுரை நோக்கி பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவரை, போலிஸார்கலான தென்னரசு, கணேசன் மறித்தனர். அவர்கள் பைக்கை நிறுத்துவது போல் போக்குக்காட்டி, அவர்களை கத்தியால் குத்தி விட்டு, தப்ப முயன்றனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, வெள்ளைதுரை கைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஓடிவந்தார். பைக்கில் தப்ப முயன்ற இருவரையும் அவர் , துப்பாக்கியால் சுட்டார். படுகாயமடைந்த இருவரையும், ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழியில் இருவரும் இறந்தனர். காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கி "செஞ்சுரி' போட்ட கவியரசுவும், முருகனும் தற்போது மதுரையில் உதவி கமிஷனராக உள்ள வெள்ளைதுரையின் தோட்டாக்களுக்கு இரையாகியுள்ளனர்.
இதேவேளை மணல் திருட்டை தடுக்கச் சென்றபோலீசாரை, மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதப்படை போலீசார் நான்குபேர் மணல் திருட்டு வண்டிகளை கண்காணிக்க சென்றனர். இவர்கள் சாதாரண உடையில் இரண்டு மோட்டார் சைக்கிள் களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அந்த வழியே மணல் கடத்திச்சென்ற டிராக்டரை மடக்கினர். டிராக்டரில் இருந்த மூன்றுபேர் இறங்கி ஓடினர். டிராக்டரை போலீசார் பிடித்தது குறித்து, அவர்கள் அக்கிராமத்தில் தகவல் கூறினர். சுமார் 50 பேர் அரிவாள், ஆயுதங்களுடன் வந்தனர். ஆயுதங்களுடன் வந்தவர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், நான்கு போலீசாரால் எதுவும் செய்ய முடியவில்லை. கும்பலாக வந்தவர்கள் நான்குபோலீசாரையும் சரமாரியாக தாக்கி, தரையில் உட்கார வைத்தனர். பின், அங்கிருந்த மின்கம்பங்களில் நால்வரையும் கயிற்றால் கட்டி வைத்து,அடித்து உதைத்தனர்.
இப்ப விளங்குதா.. சினிமா வேறு! வாழ்க்கை வேறு!
February 18, 2010 at 7:24 AM
//இப்ப விளங்குதா.. சினிமா வேறு! வாழ்க்கை வேறு!//
ஓம் ஓம் ..