twitter















"நான் ரேஸுக்கு போன மாதிரி எஸ் ஜே சூர்யா நடிக்க போட்டார்" என நக்கலாக அஜித் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தார். காரணம் இருவரும் தங்கள் பாதையை மாற்றியதால் இழப்புக்கள் தான் அதிகம், வெற்றி இயக்குனராக வலம் வந்த சூரியா தோல்வி பட நடிகரானார். அஜித்துக்கு ஜனா, ஆஞ்சநேயா என வரிசையாக தோல்விப்படங்கள். 'ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது' எண்டுவினம்.

சென்னையில் நடந்த கார் ரேஸ் போட்டியில் பங்கேற்ற நடிகர் அஜித் தோல்வியை தழுவினார். எம்.ஆர்.எப். ரேஸிங் சேலஞ்ச் 2010 போட்டியின் 3வது மற்றும் கடைசி சுற்று பந்தயம் சென்னையை அடுத்த இருங்காட்டுகோட்டையில் நடந்தது. இதன் எம்.ஆர்.எப். பார்முலா 1600 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் உள்பட 10 பேர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கடைசி 2 கட்ட பந்தயங்கள் நேற்று நடந்தது. தலா 15 சுற்று கொண்ட இந்த பந்தயத்தில் காலையில் நடந்த போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித் குமார், கடைசி நிமிடத்தில் காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பந்தயத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஏமாற்றத்துடன் நடிகர் அஜித் குமார் ஷெட்டுக்கு திரும்பினார். இருப்பினும் பின்னர் அவர் போட்டிக்கு மத்தியில் சில ரவுண்டுகள் வலம் வந்தார்.




















முன்னதாக அஜித் கார் ரேஸில் பங்கேற்கும் ‌தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் இருங்காட்டுகோட்டையில் திரண்டிருந்தனர். அஜித் ஓட்டிய கார் பழுதானதால் அவர் பந்தயத்தில் இருந்து விலக நேரிட்டதை பார்த்த ரசிகர்கள் ஆவேசமடைந்தனர். "தல தோற்க மாட்டார். அவர் எப்பவும் ஜெயிக்கக் கூடியவர்" என்று ரசிகர்கள் கூச்சலிட்டனர். சில ரசிகர்கள் அங்கு கட்டப்பட்டிருந்த விளம்பர பேனர்களை கிழித்து எரிந்து ரகளையில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனை சமாளிக்க முடியாமல் போட்டி அமைப்பாளர்கள் திணறினார்கள். இதை தொடர்ந்து நடிகர் அஜித் குமார், போட்டி சுமூகமாக நடைபெற ரசிகர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மைக் மூலம் வேண்டுகோள் விடுத்தார். அஜித்தின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள், அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் இயல்பு நிலை திரும்பியது.




















கல்கத்தாவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்டில் சேவாக், சச்சின் சதமடித்து தூள் கிளப்பினார்கள் .
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. இதன்மூலம் தென் ஆப்ரிக்க அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.
















முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த சேவக், சச்சின் ஜோடி, தென் ஆப்ரிக்க பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. பொறுப்புடன் ஆடிய சேவாக் , டெஸ்ட் அரங்கில் தனது 19வது சதமடித்தார். மறுமுனையில் அசத்திய நச்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின், 47வது சதம் கடந்தார். இந்திய அணி தற்போது 5 விக்கட்டுக்களை இழந்து 342 ஓட்டங்களை பெற்றுள்ளது.
















எங்கும் ஒழிக்கப்பட வேண்டியது தீவிரவாதமே! அருமையான மணல் சிற்பம்

0 comments:

Post a Comment