twitter


ட்ரிப் போயிருக்கீன்களா? எடுத்தவுடனே ட்ரிப் போனிங்களா என கேட்கிறேன் என பார்க்கிறீன்களா? இதில தானே விடயமே இருக்கு. என்ன வில்லங்கம் என கேட்கிறீர்களா? ஒரு வில்லங்கமும் இல்லை வாங்க சேர்ந்து வாசித்து உங்க ட்ரிப் அனுபவங்களையும் சொல்லுங்க. (யாழ்ப்பாணத்தில் வசித்தவர்களுக்கு அதிகளவாக ஒத்து வரும் என நினைக்கிறன்)

அதிகமாக அஞ்சாங் கிளாசில ஒரு ட்ரிப் ஒன்னு போயிருப்பீங்க என நினைக்கிறன். அதுவும் பாடசாலையால தான் கூட்டி கொண்டு போயிருப்பாங்கள். ஸ்கொலசிப் எக்ஸாம் எடுத்த மாணவர்களுக்காக ஒரு ட்ரிப். ஐஞ்சு நாள் பத்து நாள் இல்லைங்க. அது ஒரு நாள் ட்ரிப் தான்.

அந்த ட்ரிப்பை நினைத்து எத்னையோ நாள் தூங்காமல் அந்த நாள் எப்போ வரும் என எதிர்பார்த்து காத்து இருந்த காலமும்; உண்டு. அந்த நேரத்தில ஒரு நாள் ட்ரிப் எனின் ஏதோ லண்டன், கனடா போற மாதிரி.

ட்ரிப் அன்று காலையில அம்மா எழுவதற்கு முதல் எழும்பி அம்மாவையே நாங்கள் எழுப்பி விடுவோம். மற்றும்படி எவ்வளவு மல்லுக்கட்டி அம்மா எங்களை எழுப்பினாலும் ம்கூம்…. எழும்பவே மாட்டோம்.

அம்மா சாப்பாடு செய்து டிபன்பொக்ஸில சாப்பாட்டினை வைத்து யூஸ் கரைத்து மிக்ஸர், பகோடா என எவ்வளவு தின் பண்டம் தேவையோ அவ்வளவையும் வைத்து பத்தாக்குறைக்கு 2 பணிஸையும் பாக்குக்குள்ள அடைந்து வடிவா சாப்பிடு பிள்ளை என தந்து விடுவினம ஏதோ பத்து பதினஞ்சு நாள் பிரிந்து இருக்கிற மாதிரி)

அதுமட்டும் அல்ல 50ரூபா காசும் எங்கட கையில தருவாங்கள். பெரிய சந்தோஸம். நான் படிக்கிற காலத்தில 50ரூபா என்பது எனக்கு பெரிய காசு மாதிரித்தானுங்க. எல்லா பெத்தவர்களும் எங்களிடம் கூட வரும் வகுப்பாசிரியர்கிட்ட பிள்ளை ஏதாவது ஆசைப்பட்டால் வாங்கி குடுங்க என அவரிடம் சிறியளவிலான பணத்தினை கொடுத்து விடுவார்கள். சிறிது மனக்கஷ்டம் இருக்கும்தான் எங்களிடம் தராமல் வகுப்பாசிரியரிடம் கொடுப்பது. அந்த நேரத்தில அதுவா முக்கியம்? ட்ரிப் போனால்சரி……….

யாழ்ப்பானத்தில ட்ரிப் எனின் எங்கையங்க கூட்டிக்கொண்டு போவினம்? வல்லிபுரக்கோவில,; சந்நிதி கோயில் கீரிமலை இப்படியான பிரதேசங்களுக்குதானுங்க. இந்த இடங்களுக்கு போறதுக்கு தானுங்க ஒரு மாதமாக ஆர்ப்பாட்டம் செய்வது.

அவ்வளவு கஸ்ரப்பட்டு வெளிக்கிட்டு பஸ்சுக்குள்ள சத்தி எடுத்து களைத்து தூங்கி விடுவார்கள் சில பேர். பஸ்காரனுக்கு “சீ” என்று போய் விடும். அந்த சின்ன வயசில பஸ்சிலை எல்லாம் பயணம் செய்வது புதுசுதானே. பஸ் முன் பக்கம் சென்று கொண்டிருக்க மரங்கள் வாகனம் எல்லாம் பின்னோக்கி செல்வது போல இருக்கும். “இங்க பாரேன் எங்கட இடத்தில மரம் எல்லாம் நிக்கும். ஆனால் இங்க மரம் எல்லாம் ஓடுது. என மற்றவர்கட்கு விளக்கம் வேற வைப்போம். அந்த நேரத்தில அதுதானுங்க அறிவு.

பின்னர் 9ஆம் ஆண்டில ரியூசனால் ஒரு ட்ரிப் ஒன்னு போயிருப்பீன்களே. அதில சில பேர் போயிருக்கமாட்டார்கள். ஏனெனில் வீட்டில அனுமதி கிடைக்காது. எல்லாரும் சேர்ந்து போறது (ஆண்கள், பெண்கள்) போக வேணாம் என ஒரு பூகம்பம் தோணும். தேவை எனின் அந்த இடத்துக்கு நாங்கள் கூட்டிக்கொண்டு போறம் என்பார்கள். இவையளுடன் போனால் எங்கே என்ஜோய் பண்ணுவது? சொன்னால் புரியவா போகுது? தலையை ஆட்டி விட்டு பேசாமல் இருப்போம்.

சில பேருக்கு வீட்டில இலகுவாக அனுமதி கிடைத்து விடும். அவர்கள் ட்ரிப்புக்கு செல்ல ஆயத்தமாவார்கள். திரும்பவும் அதே இடங்கள்தான். என்ன இன்னும் ஒரு இடம் வித்தியாசமாக இருக்கும். அது கடற்கரை தான். போய் வந்தவர்கள் அதைப்பற்றி கூறும்போது போகாதவர்கட்கு ஒரு மாதிரித்தான் இருக்கும்.

யாழ்ப்பாணத்தில நிறைய இடங்களுக்கு செல்வதற்கு அந்த நேரத்தில தடை விதித்து (அனுமதி இல்லை) இருந்தார்கள். அதனால் பல இடங்களுக்கு செல்ல முடியாது இருந்தது. அந்த நேரத்தில அனுமதி கிடைத்து இருப்பின் சந்தர்ப்பங்கள் கிடைத்த வேளை பயன்படுத்தி இருக்கலாம். அந்த நேரத்தில் சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டு…………..
“இப்போ யாழ்ப்பாணத்துக்கு ட்ரிப் ஒன்னு அரேஞ் பண்ணுவோமா” என பலர் பலரிடம் கேட்க வேண்டிய தேவை இல்லாமல் இருந்து இருக்கும்.

அதன் பிறகு பாடசாலைக்கல்வி முடித்ததும் அடுத்த கல்விக்காகவோ அல்லது வேலை வாய்ப்புக்காகவோ வேறு இடங்களுக்கு சென்று இருப்பீர்கள். அந்த நேரம் நீங்கள் சின்ன பிள்ளைகளாக இருந்து இருப்பீங்க இப்போ……..
இப்போது செல்வது ட்றிப்புக்காக இருந்தாலும் ஒவ்வொரு பிரதேசங்களும் அவர்களது வாழ்க்கை முறைகளும் எப்படி இருக்கும் என வித்தியசமான வியூகத்தில பார்ப்பீர்கள் என நினைக்கிறன்.

நாங்களும் கல்விக்காகத்தான் ஒரு ட்ரிப் சென்றோம். அது ஒரு நாள் ட்ரிப் இல்லைங்க நாலு ஐந்து நாள் ட்ரிப்புங்க. சின்ன வயசில போன ட்ரிப் மாதிரி இல்லைங்க. வளர்ந்தவுடன் போவோம் பாருங்க அதிலதானுங்க இருந்தது ஒரு சந்தோஷம்.

யாழ்ப்பாணத்திலையே எத்தனையோ இடங்கள் இருக்கு அதை எல்லாம் பார்க்காமல் விட்டு விட்டு இப்போ பிற இடங்களுக்கு சுற்றுலா மேற்கொள்கின்றோம். நாம் பிறந்து வளர்ந்த இடங்களுக்கு பக்கத்தில உள்ள ஊர் கூட சிலருக்கு ஒழுங்காக தெரியாது.
ட்ரிப்பை பற்றி எழுத வந்ததற்கு காரணம் இருக்குங்க. ஒன்று நான் வேலை செய்யும் இடத்தில் ட்ரிப் ஒன்னு அரேஞ் பண்ணுகின்றார்கள். இரண்டாவது விடயம் இன்றைய செய்தி தானுங்க.. வடக்கு மாணவர்களுக்கு இலவசமாக சுற்றுலா மேற்கொள்ள உள்ளதாக வடமாகான ஆளுனர் மேஜர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்து இருந்தார்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 500பேரை இவ்வாறு அழைத்து செல்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இவர்கட்காக 16 இலட்சம் ரூபா நிதியை கீழ் 8 நாளைக்கு வெளி மாவட்டங்களுக்கு அழைத்து செல்ல உள்ளனர்.

முதல் கட்டமாக 250 மாணவர்களும் 20 ஆசிரியர்களும் தமது முதலாவது சுற்றுலா பயணத்தை இன்று ஆரம்பிக்கவுள்ளனர். தரம் 8 முதல் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களே இந்த இலவச சுற்றுலாவிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ம்….. என்ன செய்வது? அதில நான் இல்லையே……

சுற்றுலாவின் போது மாணவர்கள் பாராளுமன்றம், நூதனசாலை, உயர் கல்லூரிகள், அனுராதபுரம், காலி, மாத்தறை, கதிர்காமம், கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு செல்ல உள்ளனர்.


எதற்காக அழைத்து செல்கின்றார்கள் இதற்கான பின்புலம் என்ன என்பது எல்லாம் வேறு. ஆனால ட்ரிப் போகிறார்கள்.

இப்படி எல்லோரும் ட்ரிப் என வெளிக்கிடும்போது பதிவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு நாள் ட்ரிப்பினை அரேஞ் பண்ணி நல்ல இடத்தினை தெரிவு செய்து ஏன் ட்ரிப் ஒன்று போகக்கூhது…………? முடிந்தால் ட்ரைய் பண்ணி பாருங்க பதிவர்களே………


பதிவை வாசிக்க வரும் வாசகர்கள் எல்லாரும் உயர்தரப் பரீட்சை எழுதி இருப்பீங்க என நினைக்கிறன். அல்லது ஏதோ ஒரு பரீட்சை எழுதியிருப்பீங்க தானே! அந்த நேரத்தில எப்படி இருந்தீங்க என சும்மா ஒரு தடவை கற்பனை பண்ணி பார்ப்போமா? எக்ஸாம் எடுக்கும் நேரத்தில் அழுதீங்களா அல்லது சிரித்தீங்களா? ஹஹ ஹா ஹா.. பயத்தில் சும்மா சும்மா எல்லாம் உளறினீர்களா? நித்திரையில் கூட படித்ததை பாடமாக்கி இருப்பீங்களே! ஒரு தடவை பின்னோக்கி பயணிப்போமா……ம் வாருங்கள் நண்பர்களே........

உயர்தரத்திற்கு வந்து 2 வருடங்கள் இருக்கும் ஆனால் எக்ஸாமுக்கு முதல் நாள் நினைப்போம். இன்னமும் இரண்டு நாட்கள் இருந்தால் எப்படி இருக்கும் என (ஏதோ அந்த இரண்டு நாளில் படித்து 3யு எடுப்பது போல) அந்த இரண்டு நாட்கள் இருந்தால் தேவையான அனைத்தையும் படித்து முடித்து விடலாம் என்ற சிந்தனை. ஆனால் இரண்டு நாள் இருந்தால் என்ன? நாலு நாள் இருந்தால் என்ன? அந்த இடைவெளியில் எம்மால் படித்து விட முடியாது.

அதிஷ்ட வசமாகக்கூட அப்படி ஒரு நாள் நம்மளுக்கு கிடைத்தால் ஒரு தடவையும் கிடைக்காது. அப்படி கிடைத்தால் கூட இன்னமும் ஒரு நாள் இருந்தால் எப்படி இருக்கும் என சிந்திக்கும் நமது மனம் அதுதான் மனித மனம்……….

கடவுளில் நம்பிக்கை இல்லாத அத்தனை பேருக்கும் கடவுளில் நம்பிக்கை வந்து இருக்கும். அந்த நேரத்தில் எத்தனை பேர் கோயிலில் நேத்தி வைத்த அனுபவம் இருக்கும்? கோயிலுக்கே சென்று இருக்கமாட்டீர்கள் ஆனால் ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு சென்று இருப்பீர்களே.

சேர்ச்சில் எத்தனை பேர் முட்டி தேய தேய முழந்தாளில் நடந்து இருப்பீர்கள்? கண்ணை மூடி மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி முழந்தாளில் எவ்வளவு நேரம் தொடர்ச்சியாக நின்று இருப்பீர்கள். (இவை அனைத்தும் நான் கண்ணால் கண்டதுங்க ஏனைய சமயத்தை எழுதவில்லை என குறை நினைக்காதீங்க) இப்படி எல்லாம் கஸ்ரப்பட்டது உண்மை தானே.

எக்ஸாம் அன்று நாங்கள் தானே ஹீரோ எங்களை சுற்றி உள்ள நண்பர்கள் உறவுகள் வாழ்த்து சொல்ல எங்களை சுற்றி அனைத்து கூட்டமும் நின்று வழி அனுப்பி விடும். அதுக்குள்ள முழிவியளம் எல்லாம் பார்த்து பாடசாலைக்கு வந்தால்………….

அங்கே ஆசிரியர் நல்ல எழுதுங்க என்னுடைய மானத்தை காப்பாத்தி போடுங்க யோசிச்சு கவனமா எழுதுங்க (யோசிக்கிறதுக்கு எங்க நேரம் தர்றாங்க) என வாத்தியார் கஸ்ரப்பட்டு கத்த(அட்வைசாம்) மண்டையை மட்டும் ஆட்டி விட்டு புத்தாக்குறைக்கு தங்யூ என கூறி விட்டு வருவோம். வாத்தியாரை பாத்து உங்க மானத்தை நான் காப்பாற்றுகிறேன் என யாரும் கூறமாட்டார்கள். அது வாத்தியாருக்கும் பழக்கப்பட்டு போயிட்டுது. ஒவ்வொரு வருடமும் வாத்தியார் இதைத்தானே (அற்வைசையும் நன்றியையும்) செய்தும் கேட்டும் வருகிறார்.

எக்ஸாம் ஹோலுக்கு போனதும் கை பதற கால் நடுங்க மிச்சத்துக்கு வியர்த்து கொட்டும். கடவுளிடம் தான் நம்மளுடைய முறைப்பாட்டையும் வைத்து விட்டு வந்து இருக்கோமே பிறகு எதுக்கு பயப்பிட வேணும்? என நம்மை நாமே தேற்றி கொண்டு இருப்போம். அந்த நேரம் பார்த்து சுப்பவைஸர் எங்களையே நோட்டம் விடுவார். இந்தப் பிள்ளை வந்ததில் இருந்து முழுசிக்கொண்டே இருக்குது என டவுட் பட்டுவிடும். அதில் இருந்து ஸ்பெஷலாய் கவனிக்கும் அந்த ஆள். இந்த ரென்ஸன் எல்லாத்தையும் விட்டு விட்டு எக்ஸாம் எழுதுவம் என கையை நீட்டி வினாத்தாளையும் வேண்டி விடுவோம்.

பேப்பரை வேண்டியது தான் தாமதம் மேலோட்டமாக ஒரு தடைவ பார்த்து விட்டு எழுத ஆரம்பித்து விடுவோம். எழுதிக்கொண்டு இருக்கும்போது முன்னுக்கோ அல்லது பக்கத்திலையோ பார்வை போய் விட்டது எனின் அவ்வளவு தான். நாங்க எழுதிக் கொண்விருந்த விடை கூட மறந்து போய் விடும். முன்னுக்கு பின்னுக்கு பார்க்காவிட்டால் உயிரே போகிற மாதிரி இருக்கும்.

பெல்லை அடிக்க பேப்பரை குடுத்துவிட்டு சும்மா இருப்போமா? ஹேய் சுகமாடீ? பறவாயில்லை….. ஏதோ செய்தேன் என பக்கத்தில இருந்து பதில் வர. இப்படி ஒருவரா கேட்பது? எக்ஸாம் எழுதின அத்தனை பேரும் கதைக்க தொடங்க………. சூப்பவைசர்கள் சத்தம் போடக் கூடாது என கத்த….. அதையும் மீறி கதைத்து பேச்சு வாங்கிய பின் ஒரு மாதிரி அவர்களின் அனுமதியுடன் வெளியில வந்த விடுவோம்.

வெளியில வந்த உடன் கூட்டம் கூட்டமா உவ்வொரு நிழலில் கீழ் நின்று ஏதோ நாங்கள் தான் பேப்பர் திருத்துற ஆக்கள் மாதிரி எது சரி எது பிழை என பெரிய ஒரு ஆராச்சி செய்வோம். அதில திருப்தி படாமல் எழுதினது பிழை என தெரிந்தாலும் பாடசாலை கோயிலுக்கோ சேர்ச்சுக்கோ போய் சென்று நீளமான முறைப்பாடு ஒன்றை வைத்து விட்டு எப்படியாவது “ஏ” வர வேணும் என மண்டாடி விட்டு வருவோம்.

எத்தினை பேர் விடையை மாறி எழுதி விட்டோம் என கண்ணை கசக்கி கொண்டு வந்து இருப்பீங்க….? எத்தனை பேர் மற்றய நாள் எக்ஸாமுக்கு படிக்காமல் இதையே நினைத்து கவலைப்பட்டு கொண்டு இருந்தீர்கள்? வாத்தியார் தெரிவு செய்த (சொய்ஸ்) கேள்வி வரவில்லை என்றதும் எத்தனை பேர் வாத்தியாரை திட்டி தீர்த்து இருப்பீங்க?

இன்னுமொரு ஜோக் உங்களுக்கு எல்லாம் ஏற்பட்டதோ தெரியாது. எங்கட பாடசாலையில் நடந்ததுங்க. ஆங்கில பாடம் எக்ஸாம் அன்று யாருமே கோயிலுக்கும் போகவில்லை சேர்ச்சுக்கும் போகவில்லை. வினாத்தாள் தந்த ஒரு மணி நேரத்துக்குள் அதிகளவானோர்கள் செய்து முடித்து விட்டார்கள். நானும்தான் சூப்பவைஸர்களுக்கு ஒரே அதிசயம் “செய்து முடித்து விட்டீர்களா?” என்றார்கள் அதிகளவானோர்கள் “ஓம்” என பதில் வழங்கினார்கள். “விடைத்தாளை வாங்கப் போறீர்களா?” என ஒரு கேள்வி. “இல்லை இல்லை செய்ததை திருப்பி பாருங்க” என்றார்கள்.

என்ன கொடுமை அந்த பேப்பரில விடை எழுதினால் தானே திருப்பி பார்த்து சரியா பிழையா என திருத்துவதற்கு. இதை எல்லாம் தெரிந்து கொள்ளத் தெரியாதவர்கள் எல்லாம் சுப்பவைஸ் பண்ண வந்து விட்டார்கள். என மனதுக்குள் நினைத்து கொண்டோம்.

சும்மா எப்படீங்க மிகுதி நேரத்தை போக்குவது? கண்ணை காட்டி கையை காட்டி சிரித்து இப்படியே போய் கொண்டு இருக்க சுப்பவைஸர்கள் சூடாகி நல்ல ஏச்சு தந்தார்கள். அதை யாருங்க பொருட்படுத்தினது? ஏ.எல் மாணவர்கள் எலலோரும் ஒன்று கூடினால் கேட்கவா வேணும்? ஆங்கில பாடத்தில் மட்டும் தானுங்க பண்ணா (கரn) போச்சுது. ஒரு டென்ஸனும் இல்லாமல் தவணைப்பரீட்சை எடுதுவது போல எழுதினோம்.

தற்பொழுது உயர்தரப்பரீட்சை நடைபெறுகிறது. மாணவர்கள் எல்லாரும் நாங்க எக்ஸாம் எழுதின மாதிரித்தான் எழுதுவார்களோ? அல்லது சிம்பிளா எழுதி விட்டு 3பாஸ் இருந்தால் போதும். வேறை எதுவும் படிப்பம் என எண்ணுகிறார்களோ தெரியவில்லை.

பணம் இருக்கிறவன் எப்படியும் கல்வி கற்பான். பணம் இல்லாதவர்கள் எப்படியாவது பல்கலைக்கழகத்துக்கோ அல்லது கல்வியற் கல்லூரிக்கோ போக வேணும் என துடிப்பான் இதுதான் இன்றைய கல்வி..


“பள்ளிக்கூடத்திற்கு வருவது விளையாடுவதற்காகவா? ஓடுங்கோ ஓடிப்போய் வகுப்பறையில் இருங்கோ. சோடி சோடியாய் கதைப்பதற்கும் அலம்பி திரிவதற்கும் பள்ளிக்கூடமா உங்களுக்கு கிடைத்தது?” என சிலாபம் சென் பெனடிக் பாடசாலை அதிபர் பெனடிக் அன்ரனி ரொஜர் மிரான்டர் தடி எடுத்து கலைத்துக் கொண்டிருந்தார்.

பாடசாலை எனின் கற்றல் கற்பித்தல் போன்றன நடை பெற வேண்டிய இடமாகத்தான் அமைய வேண்டும். இப் பாடசாலைகளில் கல்வியை வழங்குவது மட்டும் அல்லாது இன்றைய காலங்களிற்கு ஏற்ப பொருந்தி வாழ்வதற்கும் அறிவினை வளர்ப்பதற்காகவும் சமூகத்துடன் ஒன்றுபடுவதற்கும் தகுதிப்பாட்டினை வழங்குவது இப்பாடசாலைகளே. அது மட்டுமல்லாது இந்த நாட்டில் நற்பிரஜையாக வாழ்வதற்கு ஒவ்வொரு இளம் தலை முறைகளையும் வளர்த்த விடுவதற்கான உத்தரவாதத்தினை வழங்கி நிற்கிறது.

“அண்மை காலங்களில் அன்றாடம் பத்திரி;கைகளில் மாணவர்களே கொலை செய்வதாகவும் கப்பம் கோருவதாகவும் தான் பத்திரிகைகளில் அன்றாடம் செய்தி வருகிறது. இவ்வாறான சம்பவங்களிற்கு மாணவர்களே பொறுப்பு எனும்போது பாடசாலைகள் மாணவர்களை எந்த அளவிற்கு வளர்த்து விடுகிறது? அவ்வாறு எனின் மாணவர்களை வளர்த்த எடுப்பதில் பாடசாலைகள் தோல்வி கண்டுள்ளதா?” என கேள்வி எழுப்பகிறார் மீனவத் தொழிலாளியான ராஜபவன்.

இதற்கு பெனடிக் கல்லுரி ஆசிரியர் அன்னவாகினி “பாடசாலை மாணவர் சமூகத்தை ஓரளவேனும் நல்ல பழக்க வழக்கத்துடன் வளர்த்து விடுகிறது. கல்வியை முடித்து விட்டு சிறிது காலம் பெறுபேறிற்காக காத்து இருக்கும் போதுதான் தீய பழக்க வழக்கத்திற்க்கு உள்வாங்கப் படுகின்றார்கள் பாடசாலைகசளில் கல்விதான் முக்கியமாக வழங்கப்படுகின்றது.” இவ்வாறு முக்கியம ;பெறும் கல்வியானது சிலாபத்தில் வீழ்ச்சி அடைந்து காணப்படுவதை நாம் செய்த ஆய்வின் மூலம் தெரிய வந்தது.

“பாடசாலைகளுக்கு தேவையான உட்ககட்டுமான வசதிகள் பலவீனமாக் காணப்படுகின்றது. கற்ப்பித்தலை மேற்க கொள்வதற்க்கான வகுப்பறைகள். தளபாட வசதிகள் இல்லை உயர்தர மாணவர்கள் ஐந்தாம் ஆண்டு படிக்கும் பிள்ளைகளின் தளபாடங்களிள் இருந்துதான் தமது கல்வியை மேற்க்கொள்கின்றனர். ஒரு சிறு பிள்ளையின் மேசையில் உயர்தர மாணவர் இருந்து படித்தால் எவ்வாறு இருக்கும்?” என்கிறார் கல்லூரி ஆசிரியரான எலிசபெத் பாடசலையில் உட்க்கட்டுமான வசதிகள் இல்லை எனின் அங்கு கற்ப்பித்தலை மேற்க்கொள்வது எப்படி?. மாணவர்களின் மனநிலையும் எந்தளவு தூரத்திற்க்கு மாறிவிடும்.

சிலாப தமிழ் பாடசாலைகளிலே சென்பெனடிக் அதன் அதிபர் பெனடிக்ற் அன்ரனி ரொஜர் மிராண்டாவின் கருத்தானது “ ஆசிரியர் பற்றாக்குறை என்பது அதிகளவாகக் காணப்படுகின்றது. பள்ளைகளின் முழு எண்ணிக்கையாக 639 மாணவர்கள் காணப்படுகின்றார்கள். இதலே 319 மாணவிகளும் 320 மாணவர்களும் காணப்படுகின்றனர். மொத்தமாக 22 ஆசிரியர்கள்தான் காணப்படுகின்றார்கள். ஆனால் எமது பாடசாலைக்கு இன்னமும் 13 ஆசிரியர்கள் தேவை. அதிலும்
தொண்டர் ஆசிரியர்கள் 07 பேர்தான் உள்ளார்கள். அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட ஆசிரியர்கள் 15 பேர்தான் அரசினது ஒத்துழைப்பு சறிது கூட எமது பாடசாலைக்கு இல்லை. இது பெரிய கவலைக்குரிய விடயமாக உள்ளது.

போதிய ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் கல்வி கற்றாலும் சென்ற முறை உயர்தரப் பரீட்சையின் ஊடாக பல்கலைக் கழகத்திற்க்கு 06 மாணவர்களுமஇ; கல்வியியற் கல்லூரிக்கு 03 மாணர்களும் சென்றுள்ளார்கள். சிறிதளவேனும் மாணவர்களை மேற் படிப்பிற்க்காக அனுப்பி வைக்கினறோம் என்பதில் சந்தோசம் அடைகின்றோம். அதுமட்டும் அல்லாது வருகின்ற புலமைப் பரிட்ச்சையிலும் 05 மாணவர்கள் சித்தி எய்வார்கள் என எதிர்பார்க்கின்றேன். 10 -15 வருடங்களாக எந்த மாணவர்களும் பல்கலைக்கழகம் சென்றதும் இல்லை. ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்ச்சையில் சித்தி அடைந்ததும் இல்லை. சென்ற வருடத்தில் இருந்துதான் ஓரளவு இப்பாடசாலை முன்னேறி உள்ளது.

பாடசாலையில் ஆசிரியர்கள் இல்லை எனினும் மாணவர்களின் செயற்ப்பாட்டிற்க்கு எவ்வித குறைபாடும் இல்லாமல் அவர்களுக்குத் தேவையானவற்றை எம்மால் முடிந்தளவு அவர்களுடைய செயற்ப்பாடுகளை வளர்த்துள்ளோம். மேலதிகமாக நாமும் ஆசிரியர் மூலமும் அதனை பூர்த்தி செய்து வருகின்றோம். ஆனால் எல்லா மாணவர்களுக்கும் உரிய தேவைகளை எம்மால் பூர்த்தி செய்ய முடியாது உள்ளதாக இருப்பினும் ஓரளவாவது எம்மால் சமாளித்துச் செல்லக்கூடியதாக உள்ளது எனகிறார் அதிபர்.

“அதிபர் ஆசிரியர் கூட 40 வருடங்களுக்கு முன்னர் அக்கறை காட்டிய மாதிரி இன்றைய கால கட்டத்தில் காட்டவில்லை கல்வியை கட்டி எழுப்புவதற்க்காகவே அக்கறையாகவும் ஆழுமையாகவும் பாடசாலைகளுடனே நேரம் செலவிட்டு பாடசாலைகளின் குறை நிறைகளை ஆராய்ந்து குறைகளுக்கு தீர்வு கண்டு பாடசாலைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டினார்கள். இன்று வாய் பேச்சளவில்தான் எல்லாம் காணப்படுகின்றதே ஒழிய செயற்ப்பாட்டளவில் எதுவும் இல்லை. மாணவர்களிற்க்கு செயற்ப்பாடுகளை வழங்குகின்றோம் என கூறுகின்றார்கள் ஆனால் அதில் போதிய அளவு திருப்தி இல்லை” எனகிறார் பாடசாலை நலன் விரும்பி தோமஸ் அல்விஸ்.

பாடசாலை கணித பாட ஆசிரியர் இதனை முற்றிலும் மறுக்கின்றார் “05 வருடங்களுக்கு முன்னர் தோமஸ் கூறியது உன்மையாக இருக்கலாம். தற்ப்பொழுது எதுவிதமான குறைபாடுகளும் இல்லை. இப்பாடசாலையில் கணணிகள் உன்டு. அதற்க்கான ஆசரியர்கள் இல்லை ஆனால் நாம் அப்படியே விட்டு விடவில்லை கணணி ஆசரியரை வெளியில் இருந்து எடுத்த படிப்பிக்கின்றோம். மாகாண சபை அமைச்சர்கள் மூலம் பாடசாலைக்கு சிறு சிறு உதவிகள் கிடைத்து உள்ளது. அவ் உதவியிலேயே எமது பாடசாலைக்கு நிரந்தரமான 02தமிழ் ஆசிரியர்களாக உள்ளனர். எமது பாடசாலையை அரசாஙகம் பாராமுகமாக இருப்பதையிட்டு நாம் கவலை அடைகின்றோம்.



எமது பாடசாலையில் வளப்பற்றாக் குறையும் ஆசிரியர் பற்றாக்குறையும் பூர்த்தி செய்வதாக இருப்பின் எமது பாடசாலை கல்வியில் உயர்ந்து காணப்படும்.” ஒரு பாடசாலைஇ ல்வி அறிவில் முன்னேற வேண்டும் எனின் ஆசிரியர்களே முழுமையாக பாடுபட வேண்டும் அவ் ஆசிரியர்களில்தான் ஒவ்வொரு மாணவர்களினது கல்வியும் பழக்க விழக்கங்களிலும் தங்கியள்ளது. இவ்வாறு முக்கியம் வகிக்கும் பாடசாலைகளிலே ஆசிரியர்கள் தமிழ் பாடசாலைகளிள் இல்லை எனின் அங்கே கல்விக்கு ஏது முன்னேற்றம்.? ஆசிரியர்கள் போதியளவில் இல்லை எனபது தமிழ் முஸ்லிம் பாடசாலைகளிலே பெரியதொரு பிரைச்சினையாகக் காணப்படுகின்றது.”

“கடந்த 10 -15 வருடங்களில் சிலாப கல்வி அபிவிருத்தியினை மைய்யமாகக் கொண்டு ஆசிரியர் இடமாற்றக் கொள்கைகள் ஆசிரியர் நியமனம் ஆசிரியர் ஒதுக்கீடு என்பன சரியான அடிப்படையில் இடம் பெறவி ல்லை. இதையே மேல் மாகாணத்துடனேயும் வட மாகாணத்துடனேயும் இவ் ஆசிரியர் தொகையை ஒப்பீட்டுப் பார்த்தால் மிகப் பெரியதொரு சரிவை காணலாம். அத்துடன் ஆசிரியர் தொகையும் வித்தியாசமாகவும் காணப்படும். நகரத்தில் ஆசரியர் தொழில் செய்தால்தான் பிரபல்யமாக இருக்கும் அபிவிருத்தி இல்லாத பாடசாலைகளில் கடமை ஆற்றினால் மதிப்புக் குறைவாக இருக்கும் என ஆசரியர்கள் எம்மிடம் கூறுகின்றார்கள்.

இவ்வாறு ஆசிரியர்கள் காணப்படும் போது இதற்;கு அரசாங்கமும் ஆதரவாக உள்ளது. முகமன் பார்த்து செயற்படுகின்றது. ஆரமபத்தில் ஆசிரியராக கடமை செய்ய வருபவரை வெளி மாவட்டங்களிலே 05 வருடங்கள் கடமையாற்ற வைக்க வேண்டும். அதிலும் பின் தங்கிய பாடசாலைகில் கற்ப்பித்தலை மேற்க்கொள்ள வைக்க வேண்டும். எந்த விதமான பாரரபட்சமும் பரர்க்கக்கூடாது அரசாஙகம்” எனக் கூறுகின்றார் பாடசரலை அபிவிருத்தி சங்க அங்கத்தவரான டேவிட் றொஸான்.


குறிப்பாக மேல் மாகாணத்துடன் தமிழ் கல்வியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பாரியதொரு வித்தியாசத்தை காணக் கூடியதாக உள்ளது. கொழும்பு கல்வி என்பது விசேசமான கல்வியாகத்தான் உள்ளது. சிலாப சமூகத்தில் இருக்கக்கூடிய புத்திஜீவிகள் கல்வி மான்கள் வலுவானவர்களாக இல்லை ஏனோ தானோ என வாழக்கூடியவர்களாகத்தான் உள்ளனர். அதுமட்டும் அல்லாது மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்க்கு சென்றுள்ளவர்கள் மக்களது தேவைகளை மக்களது பிரைச்சினைகளை பகிரங்கப்படுத்தி அதற்;கொரு தீர்வு கொண்டு வந்து பாடசாலை சிறுவர்களை சாதனை படைக்கக்கூடிய முதுகெழும்பு இல்லாத அமைச்ச ர்கள்தான் சிலாபத்தில் உள்ளார்கள எந்தவித வசதிகளும் பாடசாலையில் இல்லை” என்கிறார் பாடசாலை அபிவிருத்தி சங்க அங்கத்தவரான ஜெயா.

சிலாபத்தில் இன்று தமிழ் கல்வியில் பின்னோக்கி நிற்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறையே காரணம். நான் படிக்கும் காலத்தில் எல்லாம் தேவையான அளவு ஆசிரியர்கள்காணப்பட்டார்கள்.இன்று தமிழ் ஆசிரியர்கள் இல்லை. வகுப்பறையில் பாடம் நடக்காது விடின் ஏன் பாடம் நடக்கவில்லை எனக் கேட்டால் அந்த பாடத்துக்கு ஆசிரியர் இல்லை. இவ்வாறு கற்கின்ற பாடங்களுக்கு ஆசிரியர் அறவே இல்லை எனின் மாணவர்களது கல்வி நிலை பின்னோக்காமல் முன்னோக்கியா செல்லும். புpன்னர் கல்வியின் தரம் எப்படி முன்னேறுவது” என கூறுகின்றார்.

பழைய மாணவியான 40 வயதுடைய ஜென்ஸிகா மரியதாஸ்“கல்வி வீழ்ச்சி தமிழில் கல்வி கற்க்கும் மாணவர்கள் படித்து முடிந்ததும் பழய மாணவர்கள் என்று சிறிதும் சிந்திப்பத இல்லை பாடசாலைகளில் தேவையான வசதிகளோ அல்லது மாணவர்களது முன்னேற்றம் கருதி அவர்களுடைய செயற் ;பாட்டிற்க்கு இயன்ற அளவு உதவிகளை பங்கேற்ப்பதுஇல்லை பாடசலைக்குத்தேவையான பிரச்சினைகளை ஒனறாகக்கூடி கதைத்து அப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது இல்லை. பழய மாணவர்களே ஒன்றும் செய்யாத போது வேறு யார் தமிழ் பாடசாலைகலை முன்னேற்றுவதற்க்கு முன்வருவார்கள். எல்லா பழய மாணவர்களும் வாயால்தான் எதையும் சொல்வார்களே தவிர செயளால் எதையும் செய்யமாட்டர்கள்” எனகிறார் 48 வயதுடைய கல்வியாளரான அன்ரோனி.

“சிலாபத்திலிருக்கும் மூன்று மதங்களையுடைய பாடசாலைகளும் ஒற்றுமை இல்லை. சுமுகமான உறவுகளை வைத்துக் கொளவது இல்லை. மூன்று பாடசாலைகளும் தனித்தனியே இயங்குகிறது. ஒருவருடைய கருத்தை ஒருவர் ஏற்பது இல்லை. அதே மாதிரி அவருக்கு எதிராக மாற்று கருத்துக்களை கொண்டு வருவது. இவ்வாறான நிலையில் எவ்வாறு கல்வியில் வளர்ச்சி ஏற்படுவது? ஆனால் என்றுமே 3 பாடசாலைகளும் நேருக்கு நேராக முரண்பட்டது கிடையாது” என்று ஆசிரியர் ஆலோசகர் கந்தசாமி. கூறினார்.

சிலாப பிரதேசத்திற்கு தமிழ் ஆசிரியர்கள் குறைவாக காணப்படுகின்றார்கள் .விஷேசமாக உயர் தரத்திற்கு ஆசிரியர்கள் இல்லை என்றே கூறலாம். ஆவ்வாறு உயர்தரத்திற்கு ஆசிரியர்கள் உள்ளார்கள் எனின் அவரது முழு ;தகவல்களையும் அதிபர் தந்தார் எனின் அவ ஆசிரியரை நியமிக்க ஏற்பாடு செய்கின்றோம். எம்மிடம் ஆசிரியர்கள் இல்லை. இல்லாதபோது ஆசிரியரை எவ்வாறு வழங்குவது?” என்கிறார் சிலாப கோட்டக் கல்வி அதிகாரி.

சிலாப பிரதேசமானது அசமத்துவமான வளர்ச்சியாக தான் காணப்படுகிறது. இது தமிழ் கல்வியிலும் அதிகளவான செல்வாக்குச் செலுத்துகிறது. இதை நிவர்த்தி செய்வதற்காக பல தீர்வுத்திட்டங்களை அரசாங்கம் கொண்டு வரலாம். 5 ஆண்டு அல்லது 10 ஆண்டு கல்வித்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் பல மாணவர்களை பல்கலை கழகத்திற்கும் கல்வியற் கல்லுரிக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இளம் தலைமுறைகளிற்கு இவர்களை முன் மாதிரியாக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாது ஆசிரியர்கள் மீதும் அதிகளவு அக்கறை கொள்ள வேண்டும் பின் தங்கிய கிராமங்களில் வேலை செய்யும் ஆசிரியர் களுக்கு சம்பளம் சிறிதளவேனும் அதிகமாக கொடுக்க வேண்டும். அவர்களுடைய சிறிய செயற்பாட்டையும் பெரிதாக எடுத்து பாராட்ட வேண்டும். கல்வித்தகுதி உடைய அதிபர்களை நியமிக்க வேண்டும். ஒரே பாடசாலையில் கல்வி கற்று அதே பாடசாலையில் கல்வி கற்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பு கொடுத்து அவரை உற்சாகப்படுத்த வேண்டும். ஆரசியல் வாதிகளை சிலாப பிரதேசம் மீது திசை திருப்பி கல்வி வளர்ச்சியைக் கட்டியெழுப்பினால் அப்பிரதேசம் கல்வியில் சிறந்து விளங்கும்.