twitter


பதிவை வாசிக்க வரும் வாசகர்கள் எல்லாரும் உயர்தரப் பரீட்சை எழுதி இருப்பீங்க என நினைக்கிறன். அல்லது ஏதோ ஒரு பரீட்சை எழுதியிருப்பீங்க தானே! அந்த நேரத்தில எப்படி இருந்தீங்க என சும்மா ஒரு தடவை கற்பனை பண்ணி பார்ப்போமா? எக்ஸாம் எடுக்கும் நேரத்தில் அழுதீங்களா அல்லது சிரித்தீங்களா? ஹஹ ஹா ஹா.. பயத்தில் சும்மா சும்மா எல்லாம் உளறினீர்களா? நித்திரையில் கூட படித்ததை பாடமாக்கி இருப்பீங்களே! ஒரு தடவை பின்னோக்கி பயணிப்போமா……ம் வாருங்கள் நண்பர்களே........

உயர்தரத்திற்கு வந்து 2 வருடங்கள் இருக்கும் ஆனால் எக்ஸாமுக்கு முதல் நாள் நினைப்போம். இன்னமும் இரண்டு நாட்கள் இருந்தால் எப்படி இருக்கும் என (ஏதோ அந்த இரண்டு நாளில் படித்து 3யு எடுப்பது போல) அந்த இரண்டு நாட்கள் இருந்தால் தேவையான அனைத்தையும் படித்து முடித்து விடலாம் என்ற சிந்தனை. ஆனால் இரண்டு நாள் இருந்தால் என்ன? நாலு நாள் இருந்தால் என்ன? அந்த இடைவெளியில் எம்மால் படித்து விட முடியாது.

அதிஷ்ட வசமாகக்கூட அப்படி ஒரு நாள் நம்மளுக்கு கிடைத்தால் ஒரு தடவையும் கிடைக்காது. அப்படி கிடைத்தால் கூட இன்னமும் ஒரு நாள் இருந்தால் எப்படி இருக்கும் என சிந்திக்கும் நமது மனம் அதுதான் மனித மனம்……….

கடவுளில் நம்பிக்கை இல்லாத அத்தனை பேருக்கும் கடவுளில் நம்பிக்கை வந்து இருக்கும். அந்த நேரத்தில் எத்தனை பேர் கோயிலில் நேத்தி வைத்த அனுபவம் இருக்கும்? கோயிலுக்கே சென்று இருக்கமாட்டீர்கள் ஆனால் ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு சென்று இருப்பீர்களே.

சேர்ச்சில் எத்தனை பேர் முட்டி தேய தேய முழந்தாளில் நடந்து இருப்பீர்கள்? கண்ணை மூடி மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி முழந்தாளில் எவ்வளவு நேரம் தொடர்ச்சியாக நின்று இருப்பீர்கள். (இவை அனைத்தும் நான் கண்ணால் கண்டதுங்க ஏனைய சமயத்தை எழுதவில்லை என குறை நினைக்காதீங்க) இப்படி எல்லாம் கஸ்ரப்பட்டது உண்மை தானே.

எக்ஸாம் அன்று நாங்கள் தானே ஹீரோ எங்களை சுற்றி உள்ள நண்பர்கள் உறவுகள் வாழ்த்து சொல்ல எங்களை சுற்றி அனைத்து கூட்டமும் நின்று வழி அனுப்பி விடும். அதுக்குள்ள முழிவியளம் எல்லாம் பார்த்து பாடசாலைக்கு வந்தால்………….

அங்கே ஆசிரியர் நல்ல எழுதுங்க என்னுடைய மானத்தை காப்பாத்தி போடுங்க யோசிச்சு கவனமா எழுதுங்க (யோசிக்கிறதுக்கு எங்க நேரம் தர்றாங்க) என வாத்தியார் கஸ்ரப்பட்டு கத்த(அட்வைசாம்) மண்டையை மட்டும் ஆட்டி விட்டு புத்தாக்குறைக்கு தங்யூ என கூறி விட்டு வருவோம். வாத்தியாரை பாத்து உங்க மானத்தை நான் காப்பாற்றுகிறேன் என யாரும் கூறமாட்டார்கள். அது வாத்தியாருக்கும் பழக்கப்பட்டு போயிட்டுது. ஒவ்வொரு வருடமும் வாத்தியார் இதைத்தானே (அற்வைசையும் நன்றியையும்) செய்தும் கேட்டும் வருகிறார்.

எக்ஸாம் ஹோலுக்கு போனதும் கை பதற கால் நடுங்க மிச்சத்துக்கு வியர்த்து கொட்டும். கடவுளிடம் தான் நம்மளுடைய முறைப்பாட்டையும் வைத்து விட்டு வந்து இருக்கோமே பிறகு எதுக்கு பயப்பிட வேணும்? என நம்மை நாமே தேற்றி கொண்டு இருப்போம். அந்த நேரம் பார்த்து சுப்பவைஸர் எங்களையே நோட்டம் விடுவார். இந்தப் பிள்ளை வந்ததில் இருந்து முழுசிக்கொண்டே இருக்குது என டவுட் பட்டுவிடும். அதில் இருந்து ஸ்பெஷலாய் கவனிக்கும் அந்த ஆள். இந்த ரென்ஸன் எல்லாத்தையும் விட்டு விட்டு எக்ஸாம் எழுதுவம் என கையை நீட்டி வினாத்தாளையும் வேண்டி விடுவோம்.

பேப்பரை வேண்டியது தான் தாமதம் மேலோட்டமாக ஒரு தடைவ பார்த்து விட்டு எழுத ஆரம்பித்து விடுவோம். எழுதிக்கொண்டு இருக்கும்போது முன்னுக்கோ அல்லது பக்கத்திலையோ பார்வை போய் விட்டது எனின் அவ்வளவு தான். நாங்க எழுதிக் கொண்விருந்த விடை கூட மறந்து போய் விடும். முன்னுக்கு பின்னுக்கு பார்க்காவிட்டால் உயிரே போகிற மாதிரி இருக்கும்.

பெல்லை அடிக்க பேப்பரை குடுத்துவிட்டு சும்மா இருப்போமா? ஹேய் சுகமாடீ? பறவாயில்லை….. ஏதோ செய்தேன் என பக்கத்தில இருந்து பதில் வர. இப்படி ஒருவரா கேட்பது? எக்ஸாம் எழுதின அத்தனை பேரும் கதைக்க தொடங்க………. சூப்பவைசர்கள் சத்தம் போடக் கூடாது என கத்த….. அதையும் மீறி கதைத்து பேச்சு வாங்கிய பின் ஒரு மாதிரி அவர்களின் அனுமதியுடன் வெளியில வந்த விடுவோம்.

வெளியில வந்த உடன் கூட்டம் கூட்டமா உவ்வொரு நிழலில் கீழ் நின்று ஏதோ நாங்கள் தான் பேப்பர் திருத்துற ஆக்கள் மாதிரி எது சரி எது பிழை என பெரிய ஒரு ஆராச்சி செய்வோம். அதில திருப்தி படாமல் எழுதினது பிழை என தெரிந்தாலும் பாடசாலை கோயிலுக்கோ சேர்ச்சுக்கோ போய் சென்று நீளமான முறைப்பாடு ஒன்றை வைத்து விட்டு எப்படியாவது “ஏ” வர வேணும் என மண்டாடி விட்டு வருவோம்.

எத்தினை பேர் விடையை மாறி எழுதி விட்டோம் என கண்ணை கசக்கி கொண்டு வந்து இருப்பீங்க….? எத்தனை பேர் மற்றய நாள் எக்ஸாமுக்கு படிக்காமல் இதையே நினைத்து கவலைப்பட்டு கொண்டு இருந்தீர்கள்? வாத்தியார் தெரிவு செய்த (சொய்ஸ்) கேள்வி வரவில்லை என்றதும் எத்தனை பேர் வாத்தியாரை திட்டி தீர்த்து இருப்பீங்க?

இன்னுமொரு ஜோக் உங்களுக்கு எல்லாம் ஏற்பட்டதோ தெரியாது. எங்கட பாடசாலையில் நடந்ததுங்க. ஆங்கில பாடம் எக்ஸாம் அன்று யாருமே கோயிலுக்கும் போகவில்லை சேர்ச்சுக்கும் போகவில்லை. வினாத்தாள் தந்த ஒரு மணி நேரத்துக்குள் அதிகளவானோர்கள் செய்து முடித்து விட்டார்கள். நானும்தான் சூப்பவைஸர்களுக்கு ஒரே அதிசயம் “செய்து முடித்து விட்டீர்களா?” என்றார்கள் அதிகளவானோர்கள் “ஓம்” என பதில் வழங்கினார்கள். “விடைத்தாளை வாங்கப் போறீர்களா?” என ஒரு கேள்வி. “இல்லை இல்லை செய்ததை திருப்பி பாருங்க” என்றார்கள்.

என்ன கொடுமை அந்த பேப்பரில விடை எழுதினால் தானே திருப்பி பார்த்து சரியா பிழையா என திருத்துவதற்கு. இதை எல்லாம் தெரிந்து கொள்ளத் தெரியாதவர்கள் எல்லாம் சுப்பவைஸ் பண்ண வந்து விட்டார்கள். என மனதுக்குள் நினைத்து கொண்டோம்.

சும்மா எப்படீங்க மிகுதி நேரத்தை போக்குவது? கண்ணை காட்டி கையை காட்டி சிரித்து இப்படியே போய் கொண்டு இருக்க சுப்பவைஸர்கள் சூடாகி நல்ல ஏச்சு தந்தார்கள். அதை யாருங்க பொருட்படுத்தினது? ஏ.எல் மாணவர்கள் எலலோரும் ஒன்று கூடினால் கேட்கவா வேணும்? ஆங்கில பாடத்தில் மட்டும் தானுங்க பண்ணா (கரn) போச்சுது. ஒரு டென்ஸனும் இல்லாமல் தவணைப்பரீட்சை எடுதுவது போல எழுதினோம்.

தற்பொழுது உயர்தரப்பரீட்சை நடைபெறுகிறது. மாணவர்கள் எல்லாரும் நாங்க எக்ஸாம் எழுதின மாதிரித்தான் எழுதுவார்களோ? அல்லது சிம்பிளா எழுதி விட்டு 3பாஸ் இருந்தால் போதும். வேறை எதுவும் படிப்பம் என எண்ணுகிறார்களோ தெரியவில்லை.

பணம் இருக்கிறவன் எப்படியும் கல்வி கற்பான். பணம் இல்லாதவர்கள் எப்படியாவது பல்கலைக்கழகத்துக்கோ அல்லது கல்வியற் கல்லூரிக்கோ போக வேணும் என துடிப்பான் இதுதான் இன்றைய கல்வி..

2 comments:

  1. எக்ஸாம் ....?

    அப்பிடீன்ன என்ன?

  1. நகரத்தில் பெருமளவு மாணவர்கள் சும்மா பாஸ் வந்தா போதும் என்று படிகிறார்கள் தான் ஆனால் கிராம மாணவர்களுக்கு பல்கலைகழகம் போவதே இலக்கு
    அக்கா எங்கள் அனுபவத்தை திருப்பி பார்க்க முடிந்தது நன்றி.....

Post a Comment