undefined
undefined
undefined
தமிழ் திரை உலகம் சார்பில் பாசத்தலைவனுக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் அஜித்குமாரின் பேச்சு பலத்த சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது. இவருடன் சேர்ந்து ஜக்குவார் தங்கத்தின் பெயரும் பரவலாக அடிபடுகின்றது. “விழாக்களுக்கு வரும்படி நடிகர்களை மிரட்டுகிறார்கள்” என்று அவர் பேசிய போது சுப்பர் ஸ்டார் எழுந்து கைதட்டியது மட்டுமல்லாது, அவரை நான் பாராட்டுகிறேன் என கூறியிருந்தார்.
இருவரது பேச்சுக்கும் சினிமா “ஸ்டண்ட் மாஸ்டர்” ஜாக்குவார் தங்கம் கண்டனம் தெரிவித்து சில கருத்துக்களை கூறினார். இவர் சிறந்த ஒரு சண்டைப்பயிற்சி இயக்குனராகவும், அவ்வப்போது படங்களில் தலைகாட்டும் நடிகராகவும் இருந்திருக்கின்றார். தனது மகனை வைத்து ஒரு படத்தைக் கூட இயக்கியிருக்கின்றார். ஆண்மைக்காலங்களில் படங்களில் பணியாற்றுவது குறைவு. இறுதியாக விஜய் படத்திற்கு பகவதியில் பணியாற்றியது ஞாபகம். ராமகிருஸ்ணா படத்தில் சண்டைப்பயிற்சியுடன் முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். தமிழைத்தவிர்த்து மலையாலம், தெழுங்கு, ஹிந்தி வரை போயிருக்கின்றார்.
இவரது பேச்சால் ஆத்திரம் அடைந்த ரஜினி, அஜித் ரசிகர்கள் வீட்டை கல்வீசி தாக்கினர். இதில் ஜாக்குவார் தங்கத்தின் மனைவி காயம் அடைந்தார். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாக்குதல் சம்பவங்கள், கண்டன கூட்டங்கள் என தமிழ் திரை உலகம் கடந்த வாரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் சினிமா சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட சமரச பேச்சு வார்த்தைக்கு பின்னர் அமைதியான சூழல் நிலவியது. இந்நிலையில் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஜாக்குவார் தங்கத்தின் வீட்டுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் ரசிகர் ஒருவர் மிரட்டல் கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஜாக்குவார் தனது கவனத்துக்கு,
டேய், ஜாக்குவார் தங்கம், எங்க தலகிட்ட மோதினா, சென்னையில் நீ இருக்க முடியாது. எச்சரிக்கை. உனது மகனை கடத்தி.... கொலை செய்து விடுவோம். அடுத்து தல தாண்டா முதல் அமைச்சர். எங்கள் அல்டிமேட் ஸ்டாரிடம் நீ சரியாக மாட்டிக் கொண்டாய். இனி, நீயும், சரத்குமாரும் நெல்லைக்கு செல்ல வேண்டியதுதான். உன் கதை முடிந்தது என்று நினைத்துக் கொள். இனி உன் குடும்பம்?...
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜாக்குவார் தங்கம் எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரணை நடத்தி வருகிறார். மிரட்டல் கடிதம் அனுப்பிய அஜீத் ரசிகரை பிடிக்க தேடுதல் வேட்டையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனராம்.
ஒரு சண்டைப்பயிற்சி மாஸ்டர் என்பதைத் தவிர இவரது பெயர் பெரிதாக அறியப்படவில்லை. ஆனாலும் இன்று ரஜினி, அஜித் இற்கு நிகராக இவரது பெயர் அடிபடுகின்றது. எவனும் வாய்திறக்காத நேரத்தில் இவரது துள்ளல் சந்தேகத்தை எழுப்புகின்றது. இதன் பின்னணியில் பெரும் தலைகள் உண்டு. (ஏன் பாசத்தலைவனின் வேலையாக கூட இருக்கலாம்.)
February 24, 2010 at 7:37 PM
ஏனம்மா தேவையில்லாத வேலை ?வேற வழியைப்பருங்கோ.பகிர்வு பிரயோசனமாக இருக்கட்டும் .தொடர்வுக்கு நன்றி .