twitter


















சின்ன வயதிலே எத்தனையோ பேர் காலை காட்சி, மாலைகாட்சி என எழுதி இருப்பீர்கள்? எத்தனையோ பேர் வீட்டில் அம்மா, அப்பா, சித்தி, மாமி என எல்லோரிடமும் கெஞ்சி, பேச்சுவாங்கி மாலை காட்சியைப்பற்றி எழுதி மனப்பாடம் செய்து அதை ரீச்சர் முன் கொண்டு சென்று ஒப்புவித்தோ அல்லது முதலாவதாக எழுதியோ காட்டி இருப்பீர்கள்?


மாலைகாட்சி என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது எது என்று கூறுங்கள் பார்ப்போம்…? சூரியன் மறைவதும், பறவைகள் கூடுகளிற்கு செல்வதும், விவசாயிகள் வீடு செல்வதும், சிறுவர்கள் விளையாடுவதும், ஆலய மணி ஒலிப்பதும், அம்மா கோயிலுக்கு விளக்கேற்றி விட்டு வீடு வருவதும்தான் தெரியும்.


எனினும் இவற்றை எல்லாம் தாண்டி அந்த வயதில் வித்தியாசமாக எழுத வேண்டும் என அதிகளவான மாணவர்களிற்கு தோன்றியும் இருக்காது, சிந்தித்தும் இருக்க மாட்டார்கள். ஏதோ ரீச்சர் சொல்லி விட்டா அதை முதலில் நான் செய்து முடிக்க வேண்டும் என்ற நினைப்பு மட்டும்தான். மாலை காட்சியை அவ்வாறுதான் சிறார்கள் இப்பவும் எழுதியும் வருகிறார்கள்.

மாலை காட்சியை ரீச்சர் படம் வரையுங்கள் என்றால் என்ன எடுத்தவுடன் கடலையும் மலையையும் விவசாயிகளையும் பறவைகளையும் ஓடி விளையாடும் மாணவர்களையும் தான் வரைவோம். அதற்கு பெரும்பாடு படுவோம். வரைவதும் அழிப்பதும் பக்கத்து கொப்பியை பார்ப்பதும் என்னை விட அழகாக யாராவது வரைகின்றார்களா? என பார்ப்பதிலே நேரத்தினை போக்கி விடுவோம்.










ஆனால் கொழும்பில் இன்று அவ்வாறு இல்லை. மாலை என்றதும் றஃவிக் நிறைந்த றோடும், பீச் நிறைய காதல் ஜோடிகளும், இன்னொரு பகுதியில் குடும்பமாக பீச்சை நிறைத்துக் கொண்டு குந்தைகளுடன் நிற்பார்கள். அது மட்டும் அல்ல அவசர அவசரமாக வீடு செல்லும் மக்களும், ரீயுசனில் இருந்து பிள்ளைகளை இழுத்து கொண்டு ஓடும் பெற்றோரையும்தான் காணலாம்.


அன்று நாம் மாலைக்காட்சி எழுத எவ்வளவு கஸ்ரப்பட்டோம். ஆனால் இன்று ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்;றவுடன் சரியோ பிழையோ எழுதி தள்ளி விடுகின்றோம். யாருடைய விமர்சனமாக இருப்பினும் அது பிடித்த மாதிரியான விமர்சனமோ அல்லது பிடிக்காத விமர்சனமோ எதையும் ஏற்க தயாராக உள்ள மனநிலையில் உள்ளோம்.

1 comments:

  1. அட! கலக்கிறீங்க போங்க…

Post a Comment