twitter






















நூலகத்தில் இருந்து படிப்பது எப்படி? என்று நமக்கு எல்லோருக்கும் தெரியும்தானே! நான் படிக்கிற காலத்திலை எல்லாம் எனக்கு தெரிஞ்ச நூலகம் என்றால் அது பள்ளிக்கூட நூலகம் தானுங்க…

ஊருகளில் எல்லாம் நூலகம் இருக்குது. ஆனால் அங்கை எல்லாம் போய் படிப்பது இல்லை. ஏனென்னறால் அங்கு போனால் பொடியல்மார் சேர்ந்து ஒரே கும்மாளம் போடுவது. கத்திக்கொண்டு கிரிக்கட் அடிப்பது, கிரிக்கட் மட்ச் பார்ப்பது… என ஏகப்பட்ட பிரச்சினையள். பொம்பிளைப் பிள்ளையல் அந்தப்பக்கம் படிக்கிறதிற்கு நினைச்சு கூட பார்க்க மாட்டுதுகள். அதுதான் அங்க நிலமை.
















ஆனால் கொழும்பில அப்படி எல்லாம் இல்லை. ஸ்ரடி லீவு என்றதும் பிள்ளையல் படிக்குதுகளோ இல்லையோ லைபிறரிக்கு ஒரு கட்டு புத்தகத்தையும் கொண்டு போயிடுங்கள்.

அதிலையும் ஸ்கூல் பிள்ளைகள் இருக்குதுகளே கடவுளே! தாங்க முடியாது… ஏனென்றுதானே கேட்கிறீர்கள்?

வெள்ளவத்தையில ஒரு லைபிறரி இருக்குது. அங்கை போய் படிப்பம் என்று முடிவு எடுத்தன். வீட்டில வெளிநாட்டில இருந்து ஆக்கள் வந்து இருக்கினம். வீட்டில நிறைய சனம் வேற வீட்டில படிக்க முடியாது. கத்திக் கொண்டு இருக்குங்கள். லைபிறரிதான் சரியான வழி எங்களுக்கு என கிழம்பினேன். அங்கை போனபின்பு தான் விளையாட்டே…

ஆனால் அந்த லைபிறரி சரியான கட்டுப்பாடு. ஆனால் அதையும் மீறி பள்ளிக்கூட பிள்ளைகளின் அட்டகாசம் இருக்குதே அதுதான் தாங்க முடியல……






















பள்ளிக்கூட பிள்ளைகள் சின்ன பிள்ளைகள்தானே நாங்கள் அவையை விட வயசில ஏழெட்டு வயசு கூடத்தானே……
அவர்கள் கதைப்பதும், நெளிப்பதும், கண்ணைக்காட்டுவதும், செருப்பை தேய்ப்பதும், வேணும் என்றே மேசையை ஆட்டுவதும், அவையின் வகுப்பு பொடியங்கள் பெட்டையளுடன் கொழுவுப்படுவதும், பேனையல் பென்சில்களால் தூக்கி எறிவதும்… என்னைப்போல கொஞ்சம் பெரிய ஆக்கள் நிமிர்ந்து பார்த்தால் சொறி சொல்வது என்று, இப்படியே அன்றைய நாள் போச்சுது.

பத்தாக்குறைக்கு என்னை தட்டி எக்ஸ்கியூஸ்மீ பக்கத்திலை இருக்கிற என்டை பிரெண்டை தட்டி விடுங்கோ…… எனக்கு கடுப்புத்தான் ஏறிச்சுது…… இதுமட்டுமில்லை கண்காணிப்பாளர் வந்தால் நல்ல பிள்ளை மாதிரி இருப்பது எப்படி இருக்கும்…?

லைபிறரியில படிக்க போனால் நாம படிக்கிறமோ இல்லையோ மற்றவையை டிஸ்ரப் பண்ணக்கூடாது. அதிலும் வயது கூடினவை சீரியசா படிப்பினம.; அது மட்டும் அல்ல அவையின்ர படிப்பு பெரிய பெரிய படிப்பு. (எனக்கே தெரியாது அது என்ன என்ன படிப்பு என்று)

எக்ஸாம் என்றால் ஒரு முறைதான் வரும். (அடுத்த முறையும் வரும்) ஆனால் முதல் தடவை எழுதுற மாதிரி வராது அது என்ர அனுபவம். சின்னப்பிள்ளைகளுக்கு இது எல்லாம் விளங்காது.

ஏனெனில் அதுகளின் வயது அப்படி…… எதைக் கண்டாலும் வெருளுகின்ற வயது அதுகளுக்கு……
ஏதோ தங்களைத்தான் எல்லோரும் பார்க்கின்றார்கள் என்ற நினைப்பு வேற……… ஆனால் யாரும் அவர்களை பார்க்க மாட்டார்கள். ‘இதுகள் வேற தலையிடி..’ என்று மனசில சொல்லுவினம்.
ஏனெனின் அந்த வயதை கடந்துதான் நாங்களும் வந்தோம்…………

லைபிறரி என்பது சொறிச்சேட்டை விடுகிற இடமல்ல. அங்கு சென்றால் அனுபவித்து ரசித்து விளங்கி கல்வி கற்கின்ற இடம். இதனை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். தலைநகரில் றோட்டு, பார்க்கு, பீச்சு, தியேட்டர் எண்டு எல்லா இடத்திலயும் தானே டாவடிக்கிறீங்க. இதில லைப்றரியையாவது விட்டு வையுங்களன். அங்கேயும் கடலையா?...

16 comments:

  1. நீங்க மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்கினதில்லை. இதில நூலகம் வேறையா?

  1. நூலகங்களைக் குறைசொல்வது தவறு - அந்த நிர்வாகிகளை குறை சொல்லலாம். அங்கு வருபவர்கள்தான் குறையானவர்கள். இதற்கு உதாரணம் இப்போது யாழ்ப்பாணப் பொது நூலகம்!

  1. நானும் இப்படி நிறைய தடவை அனுபவப்பட்டேன் . அதை நீங்க தெளிவா எழுதி உள்ளீர்கள்

  1. ஸ்ரடி லீவு என்றதும் பிள்ளையல் படிக்குதுகளோ இல்லையோ லைபிறரிக்கு ஒரு கட்டு புத்தகத்தையும் கொண்டு போயிடுங்கள்.-//

    படிக்கிற பிள்ளை எங்கு இருந்தாலும் படிக்கும் . பிறகு எதுக்கு பறந்து அடித்து கொண்டு வேறு இடத்துக்கு ஓடுவான்? .

  1. லைபிறரியில படிக்க போனால் நாம படிக்கிறமோ இல்லையோ மற்றவையை டிஸ்ரப் பண்ணக்கூடாது.

    நல்ல அட்வைஸ் |
    பொருந்துகிறதா உங்களுக்கு?

  1. ///அவர்கள் கதைப்பதும், நெளிப்பதும், கண்ணைக்காட்டுவதும், செருப்பை தேய்ப்பதும், வேணும் என்றே மேசையை ஆட்டுவதும், அவையின் வகுப்பு பொடியங்கள் பெட்டையளுடன் கொழுவுப்படுவதும், பேனையல் பென்சில்களால் தூக்கி எறிவதும்… என்னைப்போல கொஞ்சம் பெரிய ஆக்கள் நிமிர்ந்து பார்த்தால் சொறி சொல்வது ,///

    இது எல்லா இடத்திலும் நடக்குது .
    இப்ப இது எல்லாம் சகஜமப்பா .......
    கண்டு கொள்ளக்கூடாது

  1. படிக்கிறது என்றாலே போர்தான் பிறகு எதுக்கு லைபிரரி ?

  1. VARO said...
    நீங்க மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்கினதில்லை. இதில நூலகம் வேறையா

    //////////வரோ எனையா இமேஜை குறைக்க என்றே பின்னூட்டம் கொடுக்கிறீர்கள் ?///////////

  1. தங்க முகுந்தன் said...
    நூலகங்களைக் குறைசொல்வது தவறு - அந்த நிர்வாகிகளை குறை சொல்லலாம். அங்கு வருபவர்கள்தான் குறையானவர்கள். இதற்கு உதாரணம் இப்போது யாழ்ப்பாணப் பொது நூலகம்

    ////நூலகத்தை குறை சொல்லவே கூடாதுதான் ..................
    ஆனால் அங்கு நடைபெறும் விடயங்களை பார்க்கும்போது ............
    கடுப்புத்தான் வருது/////

  1. Gnanalingam said...
    நானும் இப்படி நிறைய தடவை அனுபவப்பட்டேன் . அதை நீங்க தெளிவா எழுதி உள்ளீர்கள்

    //////////அனுபவப்பட்டு விட்டீர்களா?
    வெரி குட்/////////////

  1. lavanja said...
    ஸ்ரடி லீவு என்றதும் பிள்ளையல் படிக்குதுகளோ இல்லையோ லைபிறரிக்கு ஒரு கட்டு புத்தகத்தையும் கொண்டு போயிடுங்கள்.-//

    படிக்கிற பிள்ளை எங்கு இருந்தாலும் படிக்கும் . பிறகு எதுக்கு பறந்து அடித்து கொண்டு வேறு இடத்துக்கு ஓடுவான்? .

    ///அப்படி எல்லாம் சொல்லப்படாது ..........///

  1. லைபிறரியில படிக்க போனால் நாம படிக்கிறமோ இல்லையோ மற்றவையை டிஸ்ரப் பண்ணக்கூடாது.

    நல்ல அட்வைஸ் |
    பொருந்துகிறதா உங்களுக்கு?

    //////////வரோவை விட நீங்க பரவாயில்லை .
    நீங்களாவது கூறுகிறீர்களே
    நான் அந்த பக்கம் போய் இருக்கேன் என்று///////

  1. colombo said...
    ///அவர்கள் கதைப்பதும், நெளிப்பதும், கண்ணைக்காட்டுவதும், செருப்பை தேய்ப்பதும், வேணும் என்றே மேசையை ஆட்டுவதும், அவையின் வகுப்பு பொடியங்கள் பெட்டையளுடன் கொழுவுப்படுவதும், பேனையல் பென்சில்களால் தூக்கி எறிவதும்… என்னைப்போல கொஞ்சம் பெரிய ஆக்கள் நிமிர்ந்து பார்த்தால் சொறி சொல்வது ,///

    இது எல்லா இடத்திலும் நடக்குது .
    இப்ப இது எல்லாம் சகஜமப்பா .......
    கண்டு கொள்ளக்கூடாது

    ///கண்டு கொள்ள வேணும் என்பதற்காகத்தான் எழுதி உள்ளேன்////

  1. hisbul fathhu said...
    படிக்கிறது என்றாலே போர்தான் பிறகு எதுக்கு லைபிரரி ?
    உங்களுக்கா ?
    அல்லது..............

  1. அருமையான கருத்து...
    எங்கட சனம் திருந்தாதுகள்...

    ஆனா ஒரு விசயம் என்னெண்டா கட்டுப்பாடுகள் அதிகரிக்கத்தான் அதனை மீறுற அளவும் கூடும்.
    உவங்கள் நிறையக் கட்டுப்பாடு வைக்கத்தான் எங்கட பெடியங்கள் கூடக் குழப்படி விடுறாங்கள் எண்டு நினைக்கிறன், அன்பான வார்த்தைகள் இதை விட சிறப்பான விளைவைத்தருமெண்டு நான் சொல்லுறன்....

    எனக்கு எல்லாமே விளங்கிச்சு,
    //ஏனெனில் அதுகளின் வயது அப்படி…… எதைக் கண்டாலும் வெருளுகின்ற வயது அதுகளுக்கு……
    ஏதோ தங்களைத்தான் எல்லோரும் பார்க்கின்றார்கள் என்ற நினைப்பு வேற……… ஆனால் யாரும் அவர்களை பார்க்க மாட்டார்கள். ‘இதுகள் வேற தலையிடி..’ என்று மனசில சொல்லுவினம்.
    ஏனெனின் அந்த வயதை கடந்துதான் நாங்களும் வந்தோம்………//

    இது மட்டும் விளங்கேல...
    எனக்குத் தெரிஞ்சு அங்க உயர்தரப் பிள்ளையள் தான் கூட வாறது...
    எல்லாத்தையும் கடந்து எண்டு நீங்கள் சொல்லுறது உங்களுக்கு 40, 50 வயசிருக்கும் எண்ட மாதிரி இருக்கு...
    அப்பிடியா? :P

  1. ஆனா ஒரு விசயம் என்னெண்டா கட்டுப்பாடுகள் அதிகரிக்கத்தான் அதனை மீறுற அளவும் கூடும்.
    உவங்கள் நிறையக் கட்டுப்பாடு வைக்கத்தான் எங்கட பெடியங்கள் கூடக் குழப்படி விடுறாங்கள் எண்டு நினைக்கிறன்,

    /////இப்பத்தைய பொடியளுக்கு அன்பான வார்த்தைகளால் கட்டுப்படுத்த முடியாது .
    அதுகள் தலைக்கு மேல ஏறி நிக்குங்கள் கட்டுப்பாட இருக்கத்தான் வேணும்
    முக்கியமா நூலகத்தில் கட்டுப்பாடு இருக்கத்தான் வேணும் என நான் நினைக்கிறன்/////

    என்ன கன் கொன் என்னுடைய வயதா உங்களுக்கு முக்கியம் .........
    கிட்டத்தட்ட நீங்க கணக்கு போட்டு விட்டீர்களே பிறகு என்ன?

Post a Comment