twitter


நம்மளுக்கு உள்ள பிரச்சினையையே தீர்க்க காணல, இதில புதுசா வேற பிரச்சினை வந்தா?

எப்ப நம்ப 'மெயில்' பறிபோகும்... 'பேஸ்புக்' பறிபோகும்... 'புளொக்கர்' பறி போகும்... எண்டு யோசிக்கிறதிலையே அரைவாசி நேரம் போயிடுது.

'நெற்வேர்க் கனெக்ஸன்' பிரச்சினையால, 'மெயில் ஓப்பன்' பண்ணுறதில சிக்கல் வந்ததாலும், கொஞ்ச நேரத்தில மனசு பதறிடுது. அப்பிடி 'மெயில் ஹக்' பண்ணுப்பட்டாத் தான் என்ன? உயிரா போச்சுது? எண்டு நினைச்சு பதறாமலும் இருக்கேலாமல் கிடக்கு. எதைக் கொண்டு வந்தோம் அதை இழப்பதற்கு? என யோசிச்சாவது மனசை ஆசுவாசப்படுத்தலாமெண்டா, பாழாய்ப் போன அது கேக்குதில்லை.

எங்களைப் போல ஆக்களின்டை 'எக்கவுண்டுகளை ஹக்' பண்ணுறதால என்ன லாபம்? நாங்க என்ன பில்கேடஸ்ஸோட ஒண்ணு விட்ட சகோதரமா? அல்லது அம்பானியோட அக்கா பிள்ளைகளா? அட! அவ்வளவு ஏன், பொன்சேகாவோட சொந்தக்காரங்களா?

பின்ன ஏன் 'ஹக்' பண்ண வெளிக்கிடுறாங்க? "நீ எழுதக் கூடாது...!", அதுக்கேனய்யா முளையைக் கசக்கி 'ஹக்' பண்ணுவான். நானே எழுதாமப் போறனே! நீ சந்தோஷப்படு.

என்னோட நண்பர் ஒருத்தர் அடிக்கடி சொல்லுவார், "அட! நாசமாப்போன யாராவது என் புளொக்கரை ஹக் பண்ணுங்களண்டா... இதால எவ்வளவு தொல்லை. நீங்களும் ஹக் பண்ணுறீங்க இல்ல. நானும் எழுதுறதை நிறுத்திறன் இல்ல. ஏதாவது ஒண்டு நடந்தாக் கூட மற்றவன் பேசாமல் இருக்கலாம்".

இப்பிடி ஒவ்வொரு ஆட்களும் பலவிதம்.

இந்தியப் பதிவர் ஒருவரான சூர்யா கண்ணனின் வலைப்பதிவு 'ஹக்' பண்ணுப்பட்டதை அறிந்தேன்.
ஒட்டு மொத்தமாக அவரது பல கணக்குகள் பறிபோய் விட்டனவாம். எனவே பதிவர்கள் விழிப்பாகவும் உஷாராகவும் இருங்கள்.

என்னோட புளொக்கர் 'ஹக்' பண்ண முதல் சொல்லுங்க, நானே எழுதாமல் விடுறன். உங்களுக்கேன் வீண் சிரமம்.

1 comments:

  1. ஹஹஹா, நல்ல சொன்னீங்க.

Post a Comment