twitter

undefined
undefined


யாருக்கும் சவால் விடப் போறனோ எண்டு நினைச்சிடாதீங்க, இது எனக்கு அண்மைக்காலத்தில் மிகவும் பிடித்த பாட்டு.

மணிரத்னம் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த ராவணன் திரைப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவரே அனுபவித்துப் பாடிய பாடல்.

பொதுவாக முன்னைய காலங்களில் படங்களின் எழுத்தோட்டத்தை ஆரம்பத்திலேயே காட்டி விடுவார்கள். இப்பொழுது தமிழ் சினிமாவிலும், ஆங்கிலத் திரைப்படங்களைப் போல படம் முடிந்த பிறகு தான் படத்தின் தூண்களின் பெயர்களைக் காட்டுகிறார்கள். அதை யார் பார்க்கப் போகிறார்கள்.

ராவணன் இறுவட்டில் இல்லாத பாடலொன்று படத்தில் இடம்பெற்றுள்ளது. "நான் வருவேன்.. மீண்டும் வருவேன்.." அதற்காகவே தியேட்டரில் எழுத்தோட்டம் முடியும் வரை நின்று பார்த்தேன்.

இது இயக்குனரின் தந்திரமா?

என்ன செய்வது? நீங்களும் தியேட்டரில் பார்க்காத எழுத்தோட்டத்தை இங்கே பாடலுடன் பாருங்கள்.


0 comments:

Post a Comment