twitter


இலங்கையில் ஒரு வருடத்துக்கு முன்னர் பொலிஸாரின் ஆதிக்கமே கையோங்கி காணப்பட்டது. இவர்கள் என்ன செய்தாலும் அவர்களை திருப்பி கேள்வி கேட்க முடியாது. அது மட்டும் அல்ல எங்கள் கேள்விகளையும் கேட்கவும் முடியாது. பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் கைது செய்வதும், மக்களை பரிசோதனை செய்வதும், அடையாள அட்டைகளை பார்ப்பதும், பின்னர் அதனை வேண்டி வைத்து விட்டு பொலிஸ் நிலையத்திற்கு வரும்படி கூறுவதும், முன்னுக்கு பின் முரணான கேள்விகள் கேட்பதும், சந்தேகம் எனும் பெயரில் கைது செய்வதும் அவர்களது கடமைகளாக காணப்பட்டது.

இப்போது அவர்கள் என்ன செய்கின்றனர் என என் கண்ணால் தெரிந்ததையும் காதால் கேட்டவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவை யாவும் உங்கள் கண்ணுக்கும் புலப்பட்டு இருக்கும் என நம்புகிறேன்.

பொலிஸாரினால் இலங்கையின் பல பாகங்களிலும் போதைவஸ்துக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளினை தடை செய்வதை மிகவும் மும்முரமாக செயல்பட்டு வருவதனை நாம் ஊடகங்கள் மூலம் அவதானிக்க கூடியதாக உள்ளது. அதில் அவர்கள் வெற்றி பெற்று வருவதையும் காணக்கூடியதாக உள்ளது. பொலிஸின் இந்த நடவடிக்கைகளினால் போதைப் பொருட்களிற்கு மக்கள் அடிமைப்படுவதனை ஓரளவேனும் தடுக்கக் கூடியதாக உள்ளது. எனினும் சில மக்களின் அன்றாட பாவனைகளில் போதைப்பொருட்களும் பாவனையில் எடுப்பதை காணக்கூடியதாக உள்ளது.

அது மட்டும் அல்லாது அங்கீகாரம் பெறப்படாத கருச்சிதைவு மையங்கள் பல பொலிஸாரின் புலனாய்வுப் பிரிவால் கண்டு பிடிக்கப்பட்டு அவற்றிற்கு சீலும் வைக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்ககப்படாத எத்தனையோ கருச்சிதைவு மையங்களை நிறுவுவதனை தடுத்து நிறுத்துகின்றனர். (உ-ம்)(அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு முற்றுகை) அங்கீகரிக்கப்படாத கருச்சிதைவு நிலையங்கள் நிறுவுவதனால் முறையான சிகிச்சை முறை இல்லாது செய்யும் சிகிச்சை முறையினால பல உயிர்கள் இறக்க நேரிடுகின்றன. தகாத முறைகளில் உறவுகளினை வைத்திருப்பதற்கு துணிவுடன் இறங்கி விடுவார்கள்.. இவை எதுவும் நேர விடாமலும் கலாசார சீரழிவுகள் ஏற்படாமலும் நல்லொழுக்கங்களை கட்டி காப்பாற்றுவதிலும் கவனம் செலுத்தி அதனை வளரவிடாது அவற்றினை பொலிஸார் முற்றுகையிடுவது வரவேற்கப்பட வேண்டியவை.

ஆறுகள், கடல்கள் நிறைந்த இடங்களில் அனுமதி இல்லாது மண் அகழ்வுகளினை மேற்கொண்டு வருகின்றனர். இதனையும் பொலிஸ் தடுத்து நிறுத்துகின்றனர். ஆறுகளில் கடல்களில் மணல்களை அகழ்கின்;றார்கள் எனின் சுற்றிவர உள்ள மக்களிற்குத்தான் பாதிப்பு. அந்த பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் வளங்களை காப்பாற்றி வருகின்றனர். இவையும் வரவேற்கப்பட வேண்டியவைதான்.

நாட்டின் பல பாகங்களிலும் காதல் ஜோடிகளை கைது செய்கின்றார்கள். பொது இடத்தில் கட்டிப்பிடிப்பதோ, முத்தமிடுவதோ தவறு எனக் கூறுகிறார்கள். இன்னொரு பக்கத்தில் “எங்களுக்கு இதற்கு கூடச் சுதந்திரமில்லையா?” என காதலர்கள் புலம்புகின்றனர்.

இவ்வாறு நல்ல பக்கங்கள் இருந்தாலும் இவர்கட்கு இன்னொரு முகமும் உள்ளது. அதனையும் பார்த்து விடலாம். (அண்மையில் வெளிவந்த குற்றப்பிரிவு படம் போல்த்தான்)

வெள்ளவத்தையில் பொதுவாக சனநெருக்கடி அதிகம். இதனால் ரஃபிக் பொலிஸினை அதிகளவாக அங்கேதான் குவித்தும் உள்ளனர். இதற்குள் பொலிஸார் ஒரு மோட்டபைக்கை கொண்டு அங்கும் இங்கும் ஓடித்திரிவார்கள்.

நீண்டதூர பயண வாகனங்களை மட்டும் அல்லாது மோட்டபைக் மற்றும் சிலர் வீதி விதிகளை மாறி பயணித்தால் கூட நிறுத்தி லஞ்சம் வாங்குவதனை கண்கூடாக பார்க்கக்கூடியதாக உள்ளது. முன்னர் லஞ்சம் வாங்குவது லைசன்ஸ் புத்தகங்களிற்கு உள்ளே வைத்து கொடுப்பார்கள் ஆனால் தற்போது அப்படி ஒன்னும் இல்லை. நேரடியாகவே எல்லா மக்களும் பார்க்கக்கூடிய விதத்தில் பணத்தினை வாங்குகின்றனர்.

வாகன ஓட்டுனர்களும் சிறிது நேரம் பேரம் பேசி (சந்தையில் பேரம் பேசுவது போல) பின்னர் திருப்திப்படாமல் பணத்தினை வழங்கி விடுகின்றனர். அவர்களிடம் சென்று ஏன் இப்படி அநியாயமாக பணத்தினை வழங்குகிறீர்கள் என கேட்டால் “பொலிஸ் ஸ்ரேசனும் போஸ்ட் ஒபீசுமா அலைய வைப்பான்கள் வேலைக்கும் போக முடியாது இழுபட்டு கொண்டே இருக்க வேணும் அதைவிட அவன்கள் கேட்கும் பணத்தினை குடுத்திட்டம் எனின் ஓடுப்பட வேண்டிய அவசியமும் இல்லை வேறு பிரச்சினை வராது.” என்கின்றனர் பல பேர். மக்களின் இந்த அலட்சிய போக்கே நாட்டிலே லஞ்சம் வளர்வதற்கு அடிப்படை காரணமாக உள்ளது. மக்கள் உஷார் நிலையில் இருந்தார்கள் எனின் லஞ்சத்தினை ஒழிக்கலாம் பொலிஸ் எனின் லஞ்சம் என முத்திரை குத்துவதை விட அம் முத்திரையை உடைக்க வேண்டும் எனின் மக்களாகிய நாங்கள் தான் லஞ்சம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறான இடங்களில் மட்டும் அல்ல எந்தவொரு வேலையும் பொலிஸ் மூலம் நடைபெற வேண்டும் எனின் அதிகளவானோர் (98மூ) பணத்தினை கொடுத்துதான் காரியங்களை செய்கின்றனர். இதில் எந்த விதமான மாற்றமும் இல்லை. இதற்கு காரணம் (அதிகளவானோரின் கருத்துப்படி) “உடனே காரியம் ஆகவேண்டும் பணத்தினை வழங்கினால் உடனே செய்து முடித்து விடலாம். இழுபட்டுக் கொண்டு இருக்காது. பிரச்சினையும் வராது என எண்ணுகின்றனர்.” இவ்வாறு மக்களின் சிந்தனை சென்று கொண்டு இருந்தால், நாடு லஞ்சத்தினால் முன்னேறி விடும்.

பொலிஸ் என்ற தற்துணிவை பயன்படுத்தி எதுவும் சாதிக்கலாம் என எண்ணுகின்றனர். மருதமலை படம் எல்லோரும் பார்த்து இருப்பீர்கள் அதில் பிச்சைக்காரனுக்கு நிகராக வடிவேல் லஞ்சம் வாங்குவார். (அப்போது எல்லோரும் சிரித்து இருப்போம் ஆனால் நிஜத்தில் அவ்வாறு நடந்து இருக்கும் எனின்) லஞ்சம் வாங்கும் பொலிஸினை பிச்சைகாரனுடன் ஒப்பிடப்படுகின்றார்கள். அவ்வாறு எனின் பொலிஸ்காரர்கள் எல்லாம் அவர்களா?

இலங்கையிலே ஐந்து தொழில்கள் மிகவும் உன்னதமானது. அதிலே பொலிஸ் வேலையும் உள்ளடங்கலாக. மருத்துவர்கள், வக்கீல்கள்… இவர்கட்கு சமனானதுதான் பொலிஸ் தொழிலும். ஆனால் அத் தொழிலை பல பொலிஸ்காரர்களால் தவறான வழியில் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறான சில காரணங்களினால்தான் இத் தொழிலிற்கு மதிப்பு இல்லாமல் போகுது. வெளிநாடுகளில் பொலிஸ் வேலை எனின் நல்ல மதிப்பு. ஆனால் இலங்கையில்……..

இவ்வளவு காலமும் பொலிஸ் தொழில்தான் லஞ்சம் பெறுவதில் முதலிடம் வகித்து வந்தது. இப்போ அது கல்வியை முன்னுக்கு தள்ளி விட்டு தான் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது.

1 comments:

  1. இவ்வளவு காலமும் பொலிஸ் தொழில்தான் லஞ்சம் பெறுவதில் முதலிடம் வகித்து வந்தது. இப்போ அது கல்வியை முன்னுக்கு தள்ளி விட்டு தான் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது

Post a Comment