twitter


இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர் குழு ஒன்றினை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர்களை பான் கீ மூன் நியமித்துள்ளார்.

இந்தோனேசியாவின் மர்சுகி டாருஸ்மன் தலைமையிலான இந்தக் குழுவில் தென் ஆபிரிக்காவின் யஸ்மின் சூக்கா மற்றும் அமெரிக்காவின் ஸ்டீவன் ரட்னர் ஆகியோர்; இடம் பெற்றுள்ளனர். இந்த நிபுணர் குழு 2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனுக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கூட்டு அறிக்கையில் உள்ள மனித உரிமைகள் தொடர்பில் ஆராயவுள்ளது. இலங்கையில் இடம் பெற்ற வன்முறைகள் தொடர்பிலான விசாரணைகளின்போது சர்வதேச சட்டங்கள் பின்பற்றப்பட்டனவா? என்பது தொடர்பாகவும் இந்தக்குழு ஆராயவுள்ளது.

வெட்ட வெளிச்சமாக தெரியும் சூரியனை கண்டு பிடிப்பதற்கு எதற்கு கொள்ளிக்கட்டை? மனித உரிமைகள் மீறப்பட்டவையா? அல்லது மீறப்படவில்லையா? என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். எனினும் அதனை சட்ட மூலம் நிறுவ வேண்டும் அல்லவா? அதற்குத்தானாம் இந்த ஏற்பாடு.

இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட முனையும் இந்தக்குழு அதன் பணிகளை 4 மாதங்களுக்குள் நிறைவு செய்து கொள்ளும் தேவை ஏற்படின் இந்தக்குழுவின் காலம் நீடிக்கப்படும் எனறு நெசிர்சி குறிப்பிட்டுள்ளார். “தேவை ஏற்படின்” என அவர் குறிப்பிடும்போதே புரிந்து கொள்ள வேணும் இதற்கான தீர்வு இப்போதைக்கு கிடையாது என. எனினும் பரவாயில்லை உலக நாடுகளுக்கு இலங்கை செல்வதாக காட்டி கொள்ள வேண்டும் தானே!.

தமது அறிக்கையின் எந்த விடயங்களை பொது மக்களுக்கு வெளியிடுவது? எந்த விடயங்களை செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு தெரிவிப்பது என்பது தொடர்பாக இந்தக் குழுவே தீர்மாகிக்கும் என பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


பிறகென்ன உண்மைகள் வெளிவந்த மாதிரித் தான்! வந்து ஆராய்ந்து உடனே தீர்வு கண்டு விட்டுத்தான போவார்கள் போல இருக்கு. நல்ல தீர்வு வரும் எனஇ இக்குழுவை நம்பி இருக்கலாம். இந்தக் குழு இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட விரும்புகிறது. இந்நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்யும் நோக்கம் அதற்கு இல்லை என நெசிர்கி குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் என்ன நடைபெற்றது என்பது தொடர்பாக விசாரணை செய்ய வேண்டியது இலங்கையின் பொறுப்பு என்பதே பான் கீ மூனின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவத்துள்ளார். அப்படி எனின் முழுப் பொறுப்பையும் இலங்கை அதிகாரிகளிடம்; கொடுத்து விட்டு அவர்களுடைய நாட்டினிலேயே தங்கப்போகின்றனரா? அவ்வாறு எனின் 4 மாதங்கள் தேவை இல்லையே! பத்து நாட்களே போதுமானது. உடனே தீர்;வினை முன்வைத்து விடுவார்களே இலங்கை அரச தரப்புக்கள்.

இவ்வாறான எண்ணத்துடன் இவர்கள் இலங்கைக்கு வருவார்கள் எனின் இவர்கள் இலங்கை வருவதே பிரயோசனம் இல்லை என மக்களின்; கருத்து இருக்கின்றது. அவ்வாறு இவர்கள் இங்கு வந்தாலும் ஒழுங்கான முடிவு நமக்கு கிடைக்காது என்பதுதான். நாங்கள் எதிர்பார்க்கக்கூடிய தீர்வு. இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமை சட்டங்கள மீறப்படவில்லை மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள மீறப்படவில்லை என்பதுதான் முடிவாக இருக்கும். இல்லை எனின் இது பல வருடங்களுக்கு இழுத்து அடிக்கப்படும்.

கடந்த மே மாதம் இலங்கைக்கு வருகை தந்த போது முட்கம்பிக்குள் அடைபட்ட மகளை தனக்காக பாடல் பாடச் சொல்லி கேட்டவர்தானே பான் கீ மூன். இவ்வாறு உணர்வு கொண்ட பான் கீ; மூனை நம்பி எவ்வாறு பொறுப்பான பதவியை வழங்கலாமா என்ற கேள்வி எழுகிறது?

பொறுப்பாளிகள் பதில் சொல்வதில் தான் இருக்கிறது அதற்கான தீர்வு. அழுத்தங்கள் காரணமாக நாட்டுக்கு நாடு பயணம் செய்வது காரியமில்லை. உண்மையைக் கண்டறியப் போகிறோமா என்பதில் தான் இருக்கிறது உறுதியான தீர்வு.

கிளிப்பிள்ளை மாதிரி சொன்னபடி கேட்டால் வெளி உலகிற்கு பதில் சொல்வது கடினமானதே!

6 comments:

  1. yellam kanthudaippu....


    உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
    தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
    http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html

  1. rk guru//

    Thanks

  1. யார் வந்தும் இங்கை ஒன்னும் பண்ணேலாது தெரியும் தானே! (Srilankala)

  1. VAAZHKA TAMIL Pattru

  1. தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...

  1. "யோவ்"

    வாழ்த்துக்கு நன்றி

Post a Comment