twitter



ஒரு வாரம் பதிவு எழுதாத பதிவர்களையே ஞாபகம் வைத்திருக்க மாட்டார்கள். ஒரு வருடம் கழித்து வரும் என்னை யார் தான் நினைவில் வைத்துக் கொள்ளப் போகிறார்கள். அதே போல நானும் உங்களில் யாரையும் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. காரணம் நான் பதிவெழுதாக காலப்பகுதியில் பதிவுலகப் பக்கமே வருவதில்லை. திரட்டிகள் கூட மறந்து போய்விட்டது. நிறுவன மாற்றம் - அதிகரித்த வேலைகள் என பதிவுலகப்பக்கமே தலை வைக்க முடியாதளவிற்கு வேலை வேலை வேலை.

பழையவர்களில் ஒரு சிலரைத் தவிர எல்லோருமே புதியவர்களாக இருக்கிறார்கள். நிறைய பதிவர்களின் வரவு பதிவுலகிற்கு ஆரோக்கியமாக இருந்தாலும் பழையவர்களைக் காண முடியவில்லையே என்பது வருத்தமாக உள்ளது. நானே “வேலை” என்பதை முன்னிலைப்படுத்தும் போது மற்றவர்களும் அதைத் தானே கூறுவார்கள். ஆனாலும் எல்லோரும் திரும்பி புதிய பதிவர்கள் - பழையவர்கள் என பதிவுலகைக் கலக்க வேண்டும் என்பது எனது ஆசை.

பதிவுப்பக்கம் மீண்டும் வந்தாகிவிட்டது. எதை(எவற்றை) எழுதுவது என்பது தான் ஒரே குழப்பமாக இருக்கின்றது. முன்பு ஊடகவியல் கல்லூரியில் படிக்கும் போது கொஞ்சம் எழுத்துக்களோடு அடிக்கடி பழக வேண்டியிருந்தது. கல்லூரி பாட விதானத்துக்காக சில விடயங்களைத் தேடி எழுதும் போது அதில் பாதியை ப்ளாக்கில் ஏற்ற முடிந்தது. தற்போது எழுத்துலகுடன் சம்பந்தப்படாத ஒரு உத்தியோகத்தில் இருப்பதால் பேஸ்புக்கிற்காக மட்டும் தான் கணனி விசைப்பலகையை தட்ட முடிகின்றது.

மீண்டும் விரைவில் பதிவுடன் சந்திக்கிறேன். (நம்புங்கப்பா!)


0 comments:

Post a Comment