twitter


ஏனைய பதிவர்களுக்கு எப்படி கடந்த இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு போனது என தெரியவில்லை. ஆனால் நான் உட்பட அதிகமான பதிவர்கள் என்ஜோய் பண்ணி இருப்பார்கள் என்று மட்டும் எனக்கு நம்பிக்கை.

தெரியாத முகங்கள் அனைவரையும் சந்திப்பில் நேரில் பார்க்கக்கூடியவாறு இருந்தது. பதிவர்கள் சிலரை பெயர் மூலமே அறிந்து வைத்திருத்தேன். ஆனால் இங்கு அனைத்து பதிவர்களும் கண்களிலே சிக்கி விட்டனர். அனைத்து நண்பர்களுக்கும் 'ஹலோ' சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

என்னடாப்பா நேரிலே கண்டு காணாதது போல நின்ற இந்தப் பிள்ளை ப்ளாக்கரில வந்து ஹலோ சொல்லுகின்றாளே என பார்க்கின்றீர்களா? எல்லாமே வெட்க சுபாவம் தானுங்க. (அப்படீன்னா?)

முதலாவது காரணம் எல்லோரும் பழக்கப்பட்டவங்கள் இல்ல. அடுத்தது பெண்களின் வருகை குறைவாக காணப்பட்டது. மூன்றாவது கிளாசுக்கு போக வேணும் என்ற அவசரம். பதிவர்களில் அதிகமானவர்கள் ஆண்கள். அவர்களுடன் நானாகச் சென்று கதைப்பதற்குத் தயக்கமாக இருந்தது. பெண்களை விட ஆண்கள் தான் கூச்ச சுபாவம் உள்ளவர்கள் போலும். ஏனெனில் யாருமே வநது எங்களுடன் கதைக்கவில்லை. இவற்றையெல்லாம் விட காரணங்களும் இல்லாமல் இல்லை...

முதலிலே நாங்கள் எப்படி சென்று கதைப்பது என்றதொரு பிரச்சினை. அப்படி இருந்தும் மருதமூரான் அண்ணா, கூல்போய் கிருத்திகன், தாருஹாஷினி, ஜனா அண்ணா போன்றவர்கள் ஒரு நிமிடமோ இரு நிமிடமோ வந்து உரையாடி விட்டு சென்றார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி. வதிசசும், நிரூயாவும் ஒரு தடவையேனும் போட்டோ எடுத்து விட்டு செல்லுங்கள் என்றதொரு வார்த்தையாவது சொல்லி வைத்தார்கள். அவர்களுக்கும் நன்றி.

பதிவர் சந்திப்பும் சரியாகத்தான் சென்றது பெரிய பிரச்சினை என்று ஒன்றும் வந்ததாகத் தெரியவில்லை. கருத்து முரன்பாடுகள் இருந்தது உண்மைதான். அக் கருத்து முரண்பாடு எங்கேயும் ஒன்று இருக்கத்தான் செய்யும். ஏனெனில் எல்லோருடைய மன நிலையும் ஒரே மாதிரியானது இல்லையே!

ஆழகான விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தார் மு.மயூரன். அவருடைய பெரும்பாலான கருத்துக்கள் எனக்கு சரியாகவே தோன்றியது. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது. லோஸன் அண்ணா கடந்த சந்திப்புக்களில் கதைத்த அளவிற்கு கதைக்கவில்லை. அமைதியாக அவதானித்துக் கொண்டிருந்தார். அருண் அண்ணாவும் தன் பங்கிற்கு விளக்கம் தந்தார்.

ஆனால் ஒன்று பதிவர்களே! புல்லட் அண்ணாவிற்கு ஒரு பெரிய கவலை பதிவர்கள் எல்லாரும் சேர்ந்து ஓய்வூதியம் கொடுக்கவில்லை என. புறவாயில்லை அடுத்த தடைவை இதை பற்றி யோசிக்கலாம் என்று இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதனால் கவலை வேண்டாம் புல்லட் அண்ணா.

நிரூஜாவும் நன்றாகவே தொகுத்து நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். குழுமத்தினை எவ்வாறு கையாளுவது என கௌபோய் மது கூறியிருந்தார். என்னுடைய நண்பி ஒருவர் இன்னமும் குழுமத்தில் இணையாமல் உள்ளார். அவவும் குழுமத்தில் இணைவதற்கு மது ரொம்பவே உதவி புரிந்துள்ளதாக கூறினார். கடனை வாங்குவது போல் பயந்து பயந்து காசைச் சேகரித்தார் பவன். நிறையவே புதியவர்கள் வந்திருக்கிறார்கள்.

கோபி வாங்கி வந்த வடை தூள் தூளாகி விட்டது என நினைக்கிறன் . மன்னிக்கனும் அது பகோடா என பின்னர் தான் தெரிந்து கொண்டேன். (ஹீ ஹீ) அது நன்றாக இருந்தது. ஆனால் அனுதினன் வீட்டில் செய்த றோல் பெஸ்ட். அவங்க அம்மாவுக்கும் நன்றிகள். கேசரி நிரூஜா வீட்டிலிருந்தாம் வந்தது. ட்ரிங்ஸ் வரோ கரைச்சது போல.. அது தான் ஒழுங்கா இல்ல. இடைவேளை சிற்றுண்டி அனைத்தும் நன்றாக இருந்தது.

பதிவர்கள் பதிவுலகைத்தாண்டி என்ன செய்யலாம் என ஆராயப்பட்டிருந்தது. நிச்சயமாக எதையாவது செய்ய வேண்டும். அதுவும் ஒற்றுமையாக.. நானும் ஒத்துழைப்பு வழங்கத் தயார்.
டிஸ்கி : என்னங்க தலைப்பினை பார்த்தவுடன் பயந்திட்டீங்களா? அப்படிச் சொன்னால்தானே இந்தப்பக்கம் வர்ரீங்க. வாங்க வந்துட்டீங்களா.? உங்க கருத்தையும், வாக்கையும் மறக்காமல் பதிவு செய்யுங்களன்.


சரியாக நான்கு மாதங்களின் பின் ஒரு பதிவுடன் சந்திக்கின்றேன். அதுவும் 3ஆவது இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு நெருங்கும் வேளையில். (நானும் இலங்கைப் பதிவர் எண்டு காட்டோணும் எல்லோ!). அதிகரித்த வேலைப்பழுக்களால் பதிவுலகத்தை மறந்து விட்டேன்.

தமிழ்ச் சங்கத்தில் நடந்த முதலாவது சந்திப்பில் கலந்து கொண்டேன். 2ஆவது சந்திப்பில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கவில்லை. மூன்றாவது சந்திப்பில் கலந்து கொள்வேனா என்பது 50 - 50 வாய்ப்பிலேயே இருக்கின்றது. அதனால் வருகையை உறுதி செய்யவில்லை. சந்திப்பு மாலையில் இடம்பெற்றால் எனக்கு வசதியாக இருந்திருக்கும். (ஒவ்வொரு பதிவர்களின் நேரத்தையும் தனித்தனியே கேட்க முடியாது தானே!) அதனால் சந்திப்பு சிறப்பாக இடம்பெற மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன். ஏற்பாட்டாளர்களினால் வழங்கப்பட்டிருக்கும் நிகழ்வு பற்றிய அறிவிப்பு கீழே...


நிகழ்வு: பதிவர் சந்திப்பு 2010
திகதி: 19-12-2010
நேரம்: காலை 09:31
இடம்: கைலாசபதி அரங்கு, தேசிய கலை இலக்கியப்பேரவை(ரொக்சி திரையரங்குக்கு எதிரில்),
காலிவீதி, வெள்ளவத்தை, கொழும்பு –06

நிகழ்ச்சி நிரல்

  • அறிமுகவுரை
  • பதிவர்கள் அறிமுகம்
  • கலந்துரையாடல் 1 – கூகுல் குழுமத்தை வினைத்திறனுடன் பயன்படுத்தல் மற்றும் ஏனைய தொழிநுட்பப் பிரச்சினைகள் பற்றி ஆராய்தல்.
  • கலந்துரையாடல் 2 – தமிழ் தட்டச்சு கருவிகளும், அவற்றைப் பற்றிய ஆய்வுகளும் கருத்துக்களும்.
  • இடைவேளையில் இன்னிசை.
  • கலந்துரையாடல் 3 – பதிவுலகைத் தாண்டி பதிவர்கள் வழங்ககூடிய பங்களிப்புகளை ஆராய்தல்.
  • கலந்துரையாடல் 4 – பதிவர்களிடையே பதிவுலகம் சார் போட்டித் தன்மையை ஏற்படுத்தலும், அண்மைக்கால பதிவுலகில் உள்ள தொய்வுநிலை பற்றிய கருத்துப் பரிமாற்றமும்.
  • பதிவர்கள் தங்களுக்கிடையேயான கருத்து பரிமாற்றம்.
  • நன்றியுரை.

எனவே பதிவர்கள், பதிவு எழுத விரும்புபவர்கள், பதிவுலக வாசகர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் சந்திப்பில் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் வரவேற்கின்றோம்.

இந்த பதிவர் சந்திப்பை பற்றிய மேலதிக தகவல்களை நிரூஜா, வதீஸ், அனுதினன்,வரோ, அஷ்வின், பவன். ஆகிய ஏற்பாட்டு குழு அங்கதவர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும். வெளியூரிலிருந்து வந்து கலந்து கொள்ள விரும்புவோரில் தங்குவதற்கு இடவசதி தேவைப்பட்டால் 13ம் திகதிக்கு முன்னதாக அஷ்வின்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இலங்கைத் தமிழ் பதிவர் சந்திப்பு 2010 இற்கு Earthlanka நிறுவனத்தினர் அனுசரணை வழங்குகின்றனர் என்பதை நாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.



ட்ரிப் போயிருக்கீன்களா? எடுத்தவுடனே ட்ரிப் போனிங்களா என கேட்கிறேன் என பார்க்கிறீன்களா? இதில தானே விடயமே இருக்கு. என்ன வில்லங்கம் என கேட்கிறீர்களா? ஒரு வில்லங்கமும் இல்லை வாங்க சேர்ந்து வாசித்து உங்க ட்ரிப் அனுபவங்களையும் சொல்லுங்க. (யாழ்ப்பாணத்தில் வசித்தவர்களுக்கு அதிகளவாக ஒத்து வரும் என நினைக்கிறன்)

அதிகமாக அஞ்சாங் கிளாசில ஒரு ட்ரிப் ஒன்னு போயிருப்பீங்க என நினைக்கிறன். அதுவும் பாடசாலையால தான் கூட்டி கொண்டு போயிருப்பாங்கள். ஸ்கொலசிப் எக்ஸாம் எடுத்த மாணவர்களுக்காக ஒரு ட்ரிப். ஐஞ்சு நாள் பத்து நாள் இல்லைங்க. அது ஒரு நாள் ட்ரிப் தான்.

அந்த ட்ரிப்பை நினைத்து எத்னையோ நாள் தூங்காமல் அந்த நாள் எப்போ வரும் என எதிர்பார்த்து காத்து இருந்த காலமும்; உண்டு. அந்த நேரத்தில ஒரு நாள் ட்ரிப் எனின் ஏதோ லண்டன், கனடா போற மாதிரி.

ட்ரிப் அன்று காலையில அம்மா எழுவதற்கு முதல் எழும்பி அம்மாவையே நாங்கள் எழுப்பி விடுவோம். மற்றும்படி எவ்வளவு மல்லுக்கட்டி அம்மா எங்களை எழுப்பினாலும் ம்கூம்…. எழும்பவே மாட்டோம்.

அம்மா சாப்பாடு செய்து டிபன்பொக்ஸில சாப்பாட்டினை வைத்து யூஸ் கரைத்து மிக்ஸர், பகோடா என எவ்வளவு தின் பண்டம் தேவையோ அவ்வளவையும் வைத்து பத்தாக்குறைக்கு 2 பணிஸையும் பாக்குக்குள்ள அடைந்து வடிவா சாப்பிடு பிள்ளை என தந்து விடுவினம ஏதோ பத்து பதினஞ்சு நாள் பிரிந்து இருக்கிற மாதிரி)

அதுமட்டும் அல்ல 50ரூபா காசும் எங்கட கையில தருவாங்கள். பெரிய சந்தோஸம். நான் படிக்கிற காலத்தில 50ரூபா என்பது எனக்கு பெரிய காசு மாதிரித்தானுங்க. எல்லா பெத்தவர்களும் எங்களிடம் கூட வரும் வகுப்பாசிரியர்கிட்ட பிள்ளை ஏதாவது ஆசைப்பட்டால் வாங்கி குடுங்க என அவரிடம் சிறியளவிலான பணத்தினை கொடுத்து விடுவார்கள். சிறிது மனக்கஷ்டம் இருக்கும்தான் எங்களிடம் தராமல் வகுப்பாசிரியரிடம் கொடுப்பது. அந்த நேரத்தில அதுவா முக்கியம்? ட்ரிப் போனால்சரி……….

யாழ்ப்பானத்தில ட்ரிப் எனின் எங்கையங்க கூட்டிக்கொண்டு போவினம்? வல்லிபுரக்கோவில,; சந்நிதி கோயில் கீரிமலை இப்படியான பிரதேசங்களுக்குதானுங்க. இந்த இடங்களுக்கு போறதுக்கு தானுங்க ஒரு மாதமாக ஆர்ப்பாட்டம் செய்வது.

அவ்வளவு கஸ்ரப்பட்டு வெளிக்கிட்டு பஸ்சுக்குள்ள சத்தி எடுத்து களைத்து தூங்கி விடுவார்கள் சில பேர். பஸ்காரனுக்கு “சீ” என்று போய் விடும். அந்த சின்ன வயசில பஸ்சிலை எல்லாம் பயணம் செய்வது புதுசுதானே. பஸ் முன் பக்கம் சென்று கொண்டிருக்க மரங்கள் வாகனம் எல்லாம் பின்னோக்கி செல்வது போல இருக்கும். “இங்க பாரேன் எங்கட இடத்தில மரம் எல்லாம் நிக்கும். ஆனால் இங்க மரம் எல்லாம் ஓடுது. என மற்றவர்கட்கு விளக்கம் வேற வைப்போம். அந்த நேரத்தில அதுதானுங்க அறிவு.

பின்னர் 9ஆம் ஆண்டில ரியூசனால் ஒரு ட்ரிப் ஒன்னு போயிருப்பீன்களே. அதில சில பேர் போயிருக்கமாட்டார்கள். ஏனெனில் வீட்டில அனுமதி கிடைக்காது. எல்லாரும் சேர்ந்து போறது (ஆண்கள், பெண்கள்) போக வேணாம் என ஒரு பூகம்பம் தோணும். தேவை எனின் அந்த இடத்துக்கு நாங்கள் கூட்டிக்கொண்டு போறம் என்பார்கள். இவையளுடன் போனால் எங்கே என்ஜோய் பண்ணுவது? சொன்னால் புரியவா போகுது? தலையை ஆட்டி விட்டு பேசாமல் இருப்போம்.

சில பேருக்கு வீட்டில இலகுவாக அனுமதி கிடைத்து விடும். அவர்கள் ட்ரிப்புக்கு செல்ல ஆயத்தமாவார்கள். திரும்பவும் அதே இடங்கள்தான். என்ன இன்னும் ஒரு இடம் வித்தியாசமாக இருக்கும். அது கடற்கரை தான். போய் வந்தவர்கள் அதைப்பற்றி கூறும்போது போகாதவர்கட்கு ஒரு மாதிரித்தான் இருக்கும்.

யாழ்ப்பாணத்தில நிறைய இடங்களுக்கு செல்வதற்கு அந்த நேரத்தில தடை விதித்து (அனுமதி இல்லை) இருந்தார்கள். அதனால் பல இடங்களுக்கு செல்ல முடியாது இருந்தது. அந்த நேரத்தில அனுமதி கிடைத்து இருப்பின் சந்தர்ப்பங்கள் கிடைத்த வேளை பயன்படுத்தி இருக்கலாம். அந்த நேரத்தில் சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டு…………..
“இப்போ யாழ்ப்பாணத்துக்கு ட்ரிப் ஒன்னு அரேஞ் பண்ணுவோமா” என பலர் பலரிடம் கேட்க வேண்டிய தேவை இல்லாமல் இருந்து இருக்கும்.

அதன் பிறகு பாடசாலைக்கல்வி முடித்ததும் அடுத்த கல்விக்காகவோ அல்லது வேலை வாய்ப்புக்காகவோ வேறு இடங்களுக்கு சென்று இருப்பீர்கள். அந்த நேரம் நீங்கள் சின்ன பிள்ளைகளாக இருந்து இருப்பீங்க இப்போ……..
இப்போது செல்வது ட்றிப்புக்காக இருந்தாலும் ஒவ்வொரு பிரதேசங்களும் அவர்களது வாழ்க்கை முறைகளும் எப்படி இருக்கும் என வித்தியசமான வியூகத்தில பார்ப்பீர்கள் என நினைக்கிறன்.

நாங்களும் கல்விக்காகத்தான் ஒரு ட்ரிப் சென்றோம். அது ஒரு நாள் ட்ரிப் இல்லைங்க நாலு ஐந்து நாள் ட்ரிப்புங்க. சின்ன வயசில போன ட்ரிப் மாதிரி இல்லைங்க. வளர்ந்தவுடன் போவோம் பாருங்க அதிலதானுங்க இருந்தது ஒரு சந்தோஷம்.

யாழ்ப்பாணத்திலையே எத்தனையோ இடங்கள் இருக்கு அதை எல்லாம் பார்க்காமல் விட்டு விட்டு இப்போ பிற இடங்களுக்கு சுற்றுலா மேற்கொள்கின்றோம். நாம் பிறந்து வளர்ந்த இடங்களுக்கு பக்கத்தில உள்ள ஊர் கூட சிலருக்கு ஒழுங்காக தெரியாது.
ட்ரிப்பை பற்றி எழுத வந்ததற்கு காரணம் இருக்குங்க. ஒன்று நான் வேலை செய்யும் இடத்தில் ட்ரிப் ஒன்னு அரேஞ் பண்ணுகின்றார்கள். இரண்டாவது விடயம் இன்றைய செய்தி தானுங்க.. வடக்கு மாணவர்களுக்கு இலவசமாக சுற்றுலா மேற்கொள்ள உள்ளதாக வடமாகான ஆளுனர் மேஜர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்து இருந்தார்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 500பேரை இவ்வாறு அழைத்து செல்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இவர்கட்காக 16 இலட்சம் ரூபா நிதியை கீழ் 8 நாளைக்கு வெளி மாவட்டங்களுக்கு அழைத்து செல்ல உள்ளனர்.

முதல் கட்டமாக 250 மாணவர்களும் 20 ஆசிரியர்களும் தமது முதலாவது சுற்றுலா பயணத்தை இன்று ஆரம்பிக்கவுள்ளனர். தரம் 8 முதல் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களே இந்த இலவச சுற்றுலாவிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ம்….. என்ன செய்வது? அதில நான் இல்லையே……

சுற்றுலாவின் போது மாணவர்கள் பாராளுமன்றம், நூதனசாலை, உயர் கல்லூரிகள், அனுராதபுரம், காலி, மாத்தறை, கதிர்காமம், கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு செல்ல உள்ளனர்.


எதற்காக அழைத்து செல்கின்றார்கள் இதற்கான பின்புலம் என்ன என்பது எல்லாம் வேறு. ஆனால ட்ரிப் போகிறார்கள்.

இப்படி எல்லோரும் ட்ரிப் என வெளிக்கிடும்போது பதிவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு நாள் ட்ரிப்பினை அரேஞ் பண்ணி நல்ல இடத்தினை தெரிவு செய்து ஏன் ட்ரிப் ஒன்று போகக்கூhது…………? முடிந்தால் ட்ரைய் பண்ணி பாருங்க பதிவர்களே………


பதிவை வாசிக்க வரும் வாசகர்கள் எல்லாரும் உயர்தரப் பரீட்சை எழுதி இருப்பீங்க என நினைக்கிறன். அல்லது ஏதோ ஒரு பரீட்சை எழுதியிருப்பீங்க தானே! அந்த நேரத்தில எப்படி இருந்தீங்க என சும்மா ஒரு தடவை கற்பனை பண்ணி பார்ப்போமா? எக்ஸாம் எடுக்கும் நேரத்தில் அழுதீங்களா அல்லது சிரித்தீங்களா? ஹஹ ஹா ஹா.. பயத்தில் சும்மா சும்மா எல்லாம் உளறினீர்களா? நித்திரையில் கூட படித்ததை பாடமாக்கி இருப்பீங்களே! ஒரு தடவை பின்னோக்கி பயணிப்போமா……ம் வாருங்கள் நண்பர்களே........

உயர்தரத்திற்கு வந்து 2 வருடங்கள் இருக்கும் ஆனால் எக்ஸாமுக்கு முதல் நாள் நினைப்போம். இன்னமும் இரண்டு நாட்கள் இருந்தால் எப்படி இருக்கும் என (ஏதோ அந்த இரண்டு நாளில் படித்து 3யு எடுப்பது போல) அந்த இரண்டு நாட்கள் இருந்தால் தேவையான அனைத்தையும் படித்து முடித்து விடலாம் என்ற சிந்தனை. ஆனால் இரண்டு நாள் இருந்தால் என்ன? நாலு நாள் இருந்தால் என்ன? அந்த இடைவெளியில் எம்மால் படித்து விட முடியாது.

அதிஷ்ட வசமாகக்கூட அப்படி ஒரு நாள் நம்மளுக்கு கிடைத்தால் ஒரு தடவையும் கிடைக்காது. அப்படி கிடைத்தால் கூட இன்னமும் ஒரு நாள் இருந்தால் எப்படி இருக்கும் என சிந்திக்கும் நமது மனம் அதுதான் மனித மனம்……….

கடவுளில் நம்பிக்கை இல்லாத அத்தனை பேருக்கும் கடவுளில் நம்பிக்கை வந்து இருக்கும். அந்த நேரத்தில் எத்தனை பேர் கோயிலில் நேத்தி வைத்த அனுபவம் இருக்கும்? கோயிலுக்கே சென்று இருக்கமாட்டீர்கள் ஆனால் ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு சென்று இருப்பீர்களே.

சேர்ச்சில் எத்தனை பேர் முட்டி தேய தேய முழந்தாளில் நடந்து இருப்பீர்கள்? கண்ணை மூடி மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி முழந்தாளில் எவ்வளவு நேரம் தொடர்ச்சியாக நின்று இருப்பீர்கள். (இவை அனைத்தும் நான் கண்ணால் கண்டதுங்க ஏனைய சமயத்தை எழுதவில்லை என குறை நினைக்காதீங்க) இப்படி எல்லாம் கஸ்ரப்பட்டது உண்மை தானே.

எக்ஸாம் அன்று நாங்கள் தானே ஹீரோ எங்களை சுற்றி உள்ள நண்பர்கள் உறவுகள் வாழ்த்து சொல்ல எங்களை சுற்றி அனைத்து கூட்டமும் நின்று வழி அனுப்பி விடும். அதுக்குள்ள முழிவியளம் எல்லாம் பார்த்து பாடசாலைக்கு வந்தால்………….

அங்கே ஆசிரியர் நல்ல எழுதுங்க என்னுடைய மானத்தை காப்பாத்தி போடுங்க யோசிச்சு கவனமா எழுதுங்க (யோசிக்கிறதுக்கு எங்க நேரம் தர்றாங்க) என வாத்தியார் கஸ்ரப்பட்டு கத்த(அட்வைசாம்) மண்டையை மட்டும் ஆட்டி விட்டு புத்தாக்குறைக்கு தங்யூ என கூறி விட்டு வருவோம். வாத்தியாரை பாத்து உங்க மானத்தை நான் காப்பாற்றுகிறேன் என யாரும் கூறமாட்டார்கள். அது வாத்தியாருக்கும் பழக்கப்பட்டு போயிட்டுது. ஒவ்வொரு வருடமும் வாத்தியார் இதைத்தானே (அற்வைசையும் நன்றியையும்) செய்தும் கேட்டும் வருகிறார்.

எக்ஸாம் ஹோலுக்கு போனதும் கை பதற கால் நடுங்க மிச்சத்துக்கு வியர்த்து கொட்டும். கடவுளிடம் தான் நம்மளுடைய முறைப்பாட்டையும் வைத்து விட்டு வந்து இருக்கோமே பிறகு எதுக்கு பயப்பிட வேணும்? என நம்மை நாமே தேற்றி கொண்டு இருப்போம். அந்த நேரம் பார்த்து சுப்பவைஸர் எங்களையே நோட்டம் விடுவார். இந்தப் பிள்ளை வந்ததில் இருந்து முழுசிக்கொண்டே இருக்குது என டவுட் பட்டுவிடும். அதில் இருந்து ஸ்பெஷலாய் கவனிக்கும் அந்த ஆள். இந்த ரென்ஸன் எல்லாத்தையும் விட்டு விட்டு எக்ஸாம் எழுதுவம் என கையை நீட்டி வினாத்தாளையும் வேண்டி விடுவோம்.

பேப்பரை வேண்டியது தான் தாமதம் மேலோட்டமாக ஒரு தடைவ பார்த்து விட்டு எழுத ஆரம்பித்து விடுவோம். எழுதிக்கொண்டு இருக்கும்போது முன்னுக்கோ அல்லது பக்கத்திலையோ பார்வை போய் விட்டது எனின் அவ்வளவு தான். நாங்க எழுதிக் கொண்விருந்த விடை கூட மறந்து போய் விடும். முன்னுக்கு பின்னுக்கு பார்க்காவிட்டால் உயிரே போகிற மாதிரி இருக்கும்.

பெல்லை அடிக்க பேப்பரை குடுத்துவிட்டு சும்மா இருப்போமா? ஹேய் சுகமாடீ? பறவாயில்லை….. ஏதோ செய்தேன் என பக்கத்தில இருந்து பதில் வர. இப்படி ஒருவரா கேட்பது? எக்ஸாம் எழுதின அத்தனை பேரும் கதைக்க தொடங்க………. சூப்பவைசர்கள் சத்தம் போடக் கூடாது என கத்த….. அதையும் மீறி கதைத்து பேச்சு வாங்கிய பின் ஒரு மாதிரி அவர்களின் அனுமதியுடன் வெளியில வந்த விடுவோம்.

வெளியில வந்த உடன் கூட்டம் கூட்டமா உவ்வொரு நிழலில் கீழ் நின்று ஏதோ நாங்கள் தான் பேப்பர் திருத்துற ஆக்கள் மாதிரி எது சரி எது பிழை என பெரிய ஒரு ஆராச்சி செய்வோம். அதில திருப்தி படாமல் எழுதினது பிழை என தெரிந்தாலும் பாடசாலை கோயிலுக்கோ சேர்ச்சுக்கோ போய் சென்று நீளமான முறைப்பாடு ஒன்றை வைத்து விட்டு எப்படியாவது “ஏ” வர வேணும் என மண்டாடி விட்டு வருவோம்.

எத்தினை பேர் விடையை மாறி எழுதி விட்டோம் என கண்ணை கசக்கி கொண்டு வந்து இருப்பீங்க….? எத்தனை பேர் மற்றய நாள் எக்ஸாமுக்கு படிக்காமல் இதையே நினைத்து கவலைப்பட்டு கொண்டு இருந்தீர்கள்? வாத்தியார் தெரிவு செய்த (சொய்ஸ்) கேள்வி வரவில்லை என்றதும் எத்தனை பேர் வாத்தியாரை திட்டி தீர்த்து இருப்பீங்க?

இன்னுமொரு ஜோக் உங்களுக்கு எல்லாம் ஏற்பட்டதோ தெரியாது. எங்கட பாடசாலையில் நடந்ததுங்க. ஆங்கில பாடம் எக்ஸாம் அன்று யாருமே கோயிலுக்கும் போகவில்லை சேர்ச்சுக்கும் போகவில்லை. வினாத்தாள் தந்த ஒரு மணி நேரத்துக்குள் அதிகளவானோர்கள் செய்து முடித்து விட்டார்கள். நானும்தான் சூப்பவைஸர்களுக்கு ஒரே அதிசயம் “செய்து முடித்து விட்டீர்களா?” என்றார்கள் அதிகளவானோர்கள் “ஓம்” என பதில் வழங்கினார்கள். “விடைத்தாளை வாங்கப் போறீர்களா?” என ஒரு கேள்வி. “இல்லை இல்லை செய்ததை திருப்பி பாருங்க” என்றார்கள்.

என்ன கொடுமை அந்த பேப்பரில விடை எழுதினால் தானே திருப்பி பார்த்து சரியா பிழையா என திருத்துவதற்கு. இதை எல்லாம் தெரிந்து கொள்ளத் தெரியாதவர்கள் எல்லாம் சுப்பவைஸ் பண்ண வந்து விட்டார்கள். என மனதுக்குள் நினைத்து கொண்டோம்.

சும்மா எப்படீங்க மிகுதி நேரத்தை போக்குவது? கண்ணை காட்டி கையை காட்டி சிரித்து இப்படியே போய் கொண்டு இருக்க சுப்பவைஸர்கள் சூடாகி நல்ல ஏச்சு தந்தார்கள். அதை யாருங்க பொருட்படுத்தினது? ஏ.எல் மாணவர்கள் எலலோரும் ஒன்று கூடினால் கேட்கவா வேணும்? ஆங்கில பாடத்தில் மட்டும் தானுங்க பண்ணா (கரn) போச்சுது. ஒரு டென்ஸனும் இல்லாமல் தவணைப்பரீட்சை எடுதுவது போல எழுதினோம்.

தற்பொழுது உயர்தரப்பரீட்சை நடைபெறுகிறது. மாணவர்கள் எல்லாரும் நாங்க எக்ஸாம் எழுதின மாதிரித்தான் எழுதுவார்களோ? அல்லது சிம்பிளா எழுதி விட்டு 3பாஸ் இருந்தால் போதும். வேறை எதுவும் படிப்பம் என எண்ணுகிறார்களோ தெரியவில்லை.

பணம் இருக்கிறவன் எப்படியும் கல்வி கற்பான். பணம் இல்லாதவர்கள் எப்படியாவது பல்கலைக்கழகத்துக்கோ அல்லது கல்வியற் கல்லூரிக்கோ போக வேணும் என துடிப்பான் இதுதான் இன்றைய கல்வி..


“பள்ளிக்கூடத்திற்கு வருவது விளையாடுவதற்காகவா? ஓடுங்கோ ஓடிப்போய் வகுப்பறையில் இருங்கோ. சோடி சோடியாய் கதைப்பதற்கும் அலம்பி திரிவதற்கும் பள்ளிக்கூடமா உங்களுக்கு கிடைத்தது?” என சிலாபம் சென் பெனடிக் பாடசாலை அதிபர் பெனடிக் அன்ரனி ரொஜர் மிரான்டர் தடி எடுத்து கலைத்துக் கொண்டிருந்தார்.

பாடசாலை எனின் கற்றல் கற்பித்தல் போன்றன நடை பெற வேண்டிய இடமாகத்தான் அமைய வேண்டும். இப் பாடசாலைகளில் கல்வியை வழங்குவது மட்டும் அல்லாது இன்றைய காலங்களிற்கு ஏற்ப பொருந்தி வாழ்வதற்கும் அறிவினை வளர்ப்பதற்காகவும் சமூகத்துடன் ஒன்றுபடுவதற்கும் தகுதிப்பாட்டினை வழங்குவது இப்பாடசாலைகளே. அது மட்டுமல்லாது இந்த நாட்டில் நற்பிரஜையாக வாழ்வதற்கு ஒவ்வொரு இளம் தலை முறைகளையும் வளர்த்த விடுவதற்கான உத்தரவாதத்தினை வழங்கி நிற்கிறது.

“அண்மை காலங்களில் அன்றாடம் பத்திரி;கைகளில் மாணவர்களே கொலை செய்வதாகவும் கப்பம் கோருவதாகவும் தான் பத்திரிகைகளில் அன்றாடம் செய்தி வருகிறது. இவ்வாறான சம்பவங்களிற்கு மாணவர்களே பொறுப்பு எனும்போது பாடசாலைகள் மாணவர்களை எந்த அளவிற்கு வளர்த்து விடுகிறது? அவ்வாறு எனின் மாணவர்களை வளர்த்த எடுப்பதில் பாடசாலைகள் தோல்வி கண்டுள்ளதா?” என கேள்வி எழுப்பகிறார் மீனவத் தொழிலாளியான ராஜபவன்.

இதற்கு பெனடிக் கல்லுரி ஆசிரியர் அன்னவாகினி “பாடசாலை மாணவர் சமூகத்தை ஓரளவேனும் நல்ல பழக்க வழக்கத்துடன் வளர்த்து விடுகிறது. கல்வியை முடித்து விட்டு சிறிது காலம் பெறுபேறிற்காக காத்து இருக்கும் போதுதான் தீய பழக்க வழக்கத்திற்க்கு உள்வாங்கப் படுகின்றார்கள் பாடசாலைகசளில் கல்விதான் முக்கியமாக வழங்கப்படுகின்றது.” இவ்வாறு முக்கியம ;பெறும் கல்வியானது சிலாபத்தில் வீழ்ச்சி அடைந்து காணப்படுவதை நாம் செய்த ஆய்வின் மூலம் தெரிய வந்தது.

“பாடசாலைகளுக்கு தேவையான உட்ககட்டுமான வசதிகள் பலவீனமாக் காணப்படுகின்றது. கற்ப்பித்தலை மேற்க கொள்வதற்க்கான வகுப்பறைகள். தளபாட வசதிகள் இல்லை உயர்தர மாணவர்கள் ஐந்தாம் ஆண்டு படிக்கும் பிள்ளைகளின் தளபாடங்களிள் இருந்துதான் தமது கல்வியை மேற்க்கொள்கின்றனர். ஒரு சிறு பிள்ளையின் மேசையில் உயர்தர மாணவர் இருந்து படித்தால் எவ்வாறு இருக்கும்?” என்கிறார் கல்லூரி ஆசிரியரான எலிசபெத் பாடசலையில் உட்க்கட்டுமான வசதிகள் இல்லை எனின் அங்கு கற்ப்பித்தலை மேற்க்கொள்வது எப்படி?. மாணவர்களின் மனநிலையும் எந்தளவு தூரத்திற்க்கு மாறிவிடும்.

சிலாப தமிழ் பாடசாலைகளிலே சென்பெனடிக் அதன் அதிபர் பெனடிக்ற் அன்ரனி ரொஜர் மிராண்டாவின் கருத்தானது “ ஆசிரியர் பற்றாக்குறை என்பது அதிகளவாகக் காணப்படுகின்றது. பள்ளைகளின் முழு எண்ணிக்கையாக 639 மாணவர்கள் காணப்படுகின்றார்கள். இதலே 319 மாணவிகளும் 320 மாணவர்களும் காணப்படுகின்றனர். மொத்தமாக 22 ஆசிரியர்கள்தான் காணப்படுகின்றார்கள். ஆனால் எமது பாடசாலைக்கு இன்னமும் 13 ஆசிரியர்கள் தேவை. அதிலும்
தொண்டர் ஆசிரியர்கள் 07 பேர்தான் உள்ளார்கள். அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட ஆசிரியர்கள் 15 பேர்தான் அரசினது ஒத்துழைப்பு சறிது கூட எமது பாடசாலைக்கு இல்லை. இது பெரிய கவலைக்குரிய விடயமாக உள்ளது.

போதிய ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் கல்வி கற்றாலும் சென்ற முறை உயர்தரப் பரீட்சையின் ஊடாக பல்கலைக் கழகத்திற்க்கு 06 மாணவர்களுமஇ; கல்வியியற் கல்லூரிக்கு 03 மாணர்களும் சென்றுள்ளார்கள். சிறிதளவேனும் மாணவர்களை மேற் படிப்பிற்க்காக அனுப்பி வைக்கினறோம் என்பதில் சந்தோசம் அடைகின்றோம். அதுமட்டும் அல்லாது வருகின்ற புலமைப் பரிட்ச்சையிலும் 05 மாணவர்கள் சித்தி எய்வார்கள் என எதிர்பார்க்கின்றேன். 10 -15 வருடங்களாக எந்த மாணவர்களும் பல்கலைக்கழகம் சென்றதும் இல்லை. ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்ச்சையில் சித்தி அடைந்ததும் இல்லை. சென்ற வருடத்தில் இருந்துதான் ஓரளவு இப்பாடசாலை முன்னேறி உள்ளது.

பாடசாலையில் ஆசிரியர்கள் இல்லை எனினும் மாணவர்களின் செயற்ப்பாட்டிற்க்கு எவ்வித குறைபாடும் இல்லாமல் அவர்களுக்குத் தேவையானவற்றை எம்மால் முடிந்தளவு அவர்களுடைய செயற்ப்பாடுகளை வளர்த்துள்ளோம். மேலதிகமாக நாமும் ஆசிரியர் மூலமும் அதனை பூர்த்தி செய்து வருகின்றோம். ஆனால் எல்லா மாணவர்களுக்கும் உரிய தேவைகளை எம்மால் பூர்த்தி செய்ய முடியாது உள்ளதாக இருப்பினும் ஓரளவாவது எம்மால் சமாளித்துச் செல்லக்கூடியதாக உள்ளது எனகிறார் அதிபர்.

“அதிபர் ஆசிரியர் கூட 40 வருடங்களுக்கு முன்னர் அக்கறை காட்டிய மாதிரி இன்றைய கால கட்டத்தில் காட்டவில்லை கல்வியை கட்டி எழுப்புவதற்க்காகவே அக்கறையாகவும் ஆழுமையாகவும் பாடசாலைகளுடனே நேரம் செலவிட்டு பாடசாலைகளின் குறை நிறைகளை ஆராய்ந்து குறைகளுக்கு தீர்வு கண்டு பாடசாலைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டினார்கள். இன்று வாய் பேச்சளவில்தான் எல்லாம் காணப்படுகின்றதே ஒழிய செயற்ப்பாட்டளவில் எதுவும் இல்லை. மாணவர்களிற்க்கு செயற்ப்பாடுகளை வழங்குகின்றோம் என கூறுகின்றார்கள் ஆனால் அதில் போதிய அளவு திருப்தி இல்லை” எனகிறார் பாடசாலை நலன் விரும்பி தோமஸ் அல்விஸ்.

பாடசாலை கணித பாட ஆசிரியர் இதனை முற்றிலும் மறுக்கின்றார் “05 வருடங்களுக்கு முன்னர் தோமஸ் கூறியது உன்மையாக இருக்கலாம். தற்ப்பொழுது எதுவிதமான குறைபாடுகளும் இல்லை. இப்பாடசாலையில் கணணிகள் உன்டு. அதற்க்கான ஆசரியர்கள் இல்லை ஆனால் நாம் அப்படியே விட்டு விடவில்லை கணணி ஆசரியரை வெளியில் இருந்து எடுத்த படிப்பிக்கின்றோம். மாகாண சபை அமைச்சர்கள் மூலம் பாடசாலைக்கு சிறு சிறு உதவிகள் கிடைத்து உள்ளது. அவ் உதவியிலேயே எமது பாடசாலைக்கு நிரந்தரமான 02தமிழ் ஆசிரியர்களாக உள்ளனர். எமது பாடசாலையை அரசாஙகம் பாராமுகமாக இருப்பதையிட்டு நாம் கவலை அடைகின்றோம்.



எமது பாடசாலையில் வளப்பற்றாக் குறையும் ஆசிரியர் பற்றாக்குறையும் பூர்த்தி செய்வதாக இருப்பின் எமது பாடசாலை கல்வியில் உயர்ந்து காணப்படும்.” ஒரு பாடசாலைஇ ல்வி அறிவில் முன்னேற வேண்டும் எனின் ஆசிரியர்களே முழுமையாக பாடுபட வேண்டும் அவ் ஆசிரியர்களில்தான் ஒவ்வொரு மாணவர்களினது கல்வியும் பழக்க விழக்கங்களிலும் தங்கியள்ளது. இவ்வாறு முக்கியம் வகிக்கும் பாடசாலைகளிலே ஆசிரியர்கள் தமிழ் பாடசாலைகளிள் இல்லை எனின் அங்கே கல்விக்கு ஏது முன்னேற்றம்.? ஆசிரியர்கள் போதியளவில் இல்லை எனபது தமிழ் முஸ்லிம் பாடசாலைகளிலே பெரியதொரு பிரைச்சினையாகக் காணப்படுகின்றது.”

“கடந்த 10 -15 வருடங்களில் சிலாப கல்வி அபிவிருத்தியினை மைய்யமாகக் கொண்டு ஆசிரியர் இடமாற்றக் கொள்கைகள் ஆசிரியர் நியமனம் ஆசிரியர் ஒதுக்கீடு என்பன சரியான அடிப்படையில் இடம் பெறவி ல்லை. இதையே மேல் மாகாணத்துடனேயும் வட மாகாணத்துடனேயும் இவ் ஆசிரியர் தொகையை ஒப்பீட்டுப் பார்த்தால் மிகப் பெரியதொரு சரிவை காணலாம். அத்துடன் ஆசிரியர் தொகையும் வித்தியாசமாகவும் காணப்படும். நகரத்தில் ஆசரியர் தொழில் செய்தால்தான் பிரபல்யமாக இருக்கும் அபிவிருத்தி இல்லாத பாடசாலைகளில் கடமை ஆற்றினால் மதிப்புக் குறைவாக இருக்கும் என ஆசரியர்கள் எம்மிடம் கூறுகின்றார்கள்.

இவ்வாறு ஆசிரியர்கள் காணப்படும் போது இதற்;கு அரசாங்கமும் ஆதரவாக உள்ளது. முகமன் பார்த்து செயற்படுகின்றது. ஆரமபத்தில் ஆசிரியராக கடமை செய்ய வருபவரை வெளி மாவட்டங்களிலே 05 வருடங்கள் கடமையாற்ற வைக்க வேண்டும். அதிலும் பின் தங்கிய பாடசாலைகில் கற்ப்பித்தலை மேற்க்கொள்ள வைக்க வேண்டும். எந்த விதமான பாரரபட்சமும் பரர்க்கக்கூடாது அரசாஙகம்” எனக் கூறுகின்றார் பாடசரலை அபிவிருத்தி சங்க அங்கத்தவரான டேவிட் றொஸான்.


குறிப்பாக மேல் மாகாணத்துடன் தமிழ் கல்வியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பாரியதொரு வித்தியாசத்தை காணக் கூடியதாக உள்ளது. கொழும்பு கல்வி என்பது விசேசமான கல்வியாகத்தான் உள்ளது. சிலாப சமூகத்தில் இருக்கக்கூடிய புத்திஜீவிகள் கல்வி மான்கள் வலுவானவர்களாக இல்லை ஏனோ தானோ என வாழக்கூடியவர்களாகத்தான் உள்ளனர். அதுமட்டும் அல்லாது மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்க்கு சென்றுள்ளவர்கள் மக்களது தேவைகளை மக்களது பிரைச்சினைகளை பகிரங்கப்படுத்தி அதற்;கொரு தீர்வு கொண்டு வந்து பாடசாலை சிறுவர்களை சாதனை படைக்கக்கூடிய முதுகெழும்பு இல்லாத அமைச்ச ர்கள்தான் சிலாபத்தில் உள்ளார்கள எந்தவித வசதிகளும் பாடசாலையில் இல்லை” என்கிறார் பாடசாலை அபிவிருத்தி சங்க அங்கத்தவரான ஜெயா.

சிலாபத்தில் இன்று தமிழ் கல்வியில் பின்னோக்கி நிற்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறையே காரணம். நான் படிக்கும் காலத்தில் எல்லாம் தேவையான அளவு ஆசிரியர்கள்காணப்பட்டார்கள்.இன்று தமிழ் ஆசிரியர்கள் இல்லை. வகுப்பறையில் பாடம் நடக்காது விடின் ஏன் பாடம் நடக்கவில்லை எனக் கேட்டால் அந்த பாடத்துக்கு ஆசிரியர் இல்லை. இவ்வாறு கற்கின்ற பாடங்களுக்கு ஆசிரியர் அறவே இல்லை எனின் மாணவர்களது கல்வி நிலை பின்னோக்காமல் முன்னோக்கியா செல்லும். புpன்னர் கல்வியின் தரம் எப்படி முன்னேறுவது” என கூறுகின்றார்.

பழைய மாணவியான 40 வயதுடைய ஜென்ஸிகா மரியதாஸ்“கல்வி வீழ்ச்சி தமிழில் கல்வி கற்க்கும் மாணவர்கள் படித்து முடிந்ததும் பழய மாணவர்கள் என்று சிறிதும் சிந்திப்பத இல்லை பாடசாலைகளில் தேவையான வசதிகளோ அல்லது மாணவர்களது முன்னேற்றம் கருதி அவர்களுடைய செயற் ;பாட்டிற்க்கு இயன்ற அளவு உதவிகளை பங்கேற்ப்பதுஇல்லை பாடசலைக்குத்தேவையான பிரச்சினைகளை ஒனறாகக்கூடி கதைத்து அப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது இல்லை. பழய மாணவர்களே ஒன்றும் செய்யாத போது வேறு யார் தமிழ் பாடசாலைகலை முன்னேற்றுவதற்க்கு முன்வருவார்கள். எல்லா பழய மாணவர்களும் வாயால்தான் எதையும் சொல்வார்களே தவிர செயளால் எதையும் செய்யமாட்டர்கள்” எனகிறார் 48 வயதுடைய கல்வியாளரான அன்ரோனி.

“சிலாபத்திலிருக்கும் மூன்று மதங்களையுடைய பாடசாலைகளும் ஒற்றுமை இல்லை. சுமுகமான உறவுகளை வைத்துக் கொளவது இல்லை. மூன்று பாடசாலைகளும் தனித்தனியே இயங்குகிறது. ஒருவருடைய கருத்தை ஒருவர் ஏற்பது இல்லை. அதே மாதிரி அவருக்கு எதிராக மாற்று கருத்துக்களை கொண்டு வருவது. இவ்வாறான நிலையில் எவ்வாறு கல்வியில் வளர்ச்சி ஏற்படுவது? ஆனால் என்றுமே 3 பாடசாலைகளும் நேருக்கு நேராக முரண்பட்டது கிடையாது” என்று ஆசிரியர் ஆலோசகர் கந்தசாமி. கூறினார்.

சிலாப பிரதேசத்திற்கு தமிழ் ஆசிரியர்கள் குறைவாக காணப்படுகின்றார்கள் .விஷேசமாக உயர் தரத்திற்கு ஆசிரியர்கள் இல்லை என்றே கூறலாம். ஆவ்வாறு உயர்தரத்திற்கு ஆசிரியர்கள் உள்ளார்கள் எனின் அவரது முழு ;தகவல்களையும் அதிபர் தந்தார் எனின் அவ ஆசிரியரை நியமிக்க ஏற்பாடு செய்கின்றோம். எம்மிடம் ஆசிரியர்கள் இல்லை. இல்லாதபோது ஆசிரியரை எவ்வாறு வழங்குவது?” என்கிறார் சிலாப கோட்டக் கல்வி அதிகாரி.

சிலாப பிரதேசமானது அசமத்துவமான வளர்ச்சியாக தான் காணப்படுகிறது. இது தமிழ் கல்வியிலும் அதிகளவான செல்வாக்குச் செலுத்துகிறது. இதை நிவர்த்தி செய்வதற்காக பல தீர்வுத்திட்டங்களை அரசாங்கம் கொண்டு வரலாம். 5 ஆண்டு அல்லது 10 ஆண்டு கல்வித்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் பல மாணவர்களை பல்கலை கழகத்திற்கும் கல்வியற் கல்லுரிக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இளம் தலைமுறைகளிற்கு இவர்களை முன் மாதிரியாக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாது ஆசிரியர்கள் மீதும் அதிகளவு அக்கறை கொள்ள வேண்டும் பின் தங்கிய கிராமங்களில் வேலை செய்யும் ஆசிரியர் களுக்கு சம்பளம் சிறிதளவேனும் அதிகமாக கொடுக்க வேண்டும். அவர்களுடைய சிறிய செயற்பாட்டையும் பெரிதாக எடுத்து பாராட்ட வேண்டும். கல்வித்தகுதி உடைய அதிபர்களை நியமிக்க வேண்டும். ஒரே பாடசாலையில் கல்வி கற்று அதே பாடசாலையில் கல்வி கற்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பு கொடுத்து அவரை உற்சாகப்படுத்த வேண்டும். ஆரசியல் வாதிகளை சிலாப பிரதேசம் மீது திசை திருப்பி கல்வி வளர்ச்சியைக் கட்டியெழுப்பினால் அப்பிரதேசம் கல்வியில் சிறந்து விளங்கும்.


இந்தப் பதிவும் கடந்த வருடம் கல்லூரி ‘களச் செய்திச் சேகரிப்பின்’ போது எழுதப்பட்டது.

இப்போது எங்கு பார்த்தாலும் பாஸ்ட் பூட்ஸ்! நாவுக்கு சுவையான உடனடி உணவு! அதே போல பாஷன் எடியுகேஷன் கேள்விப் பட்டிருக்கின்றீர்களா? “எல்லோரும் சாதரண தரம் படிக்கின்றார்கள். உயர்தரம் படிக்கின்றார்கள். எனக்கு எல்லாம் அவ்வாறு அதிக காலத்தினை வீணாக்க முடியாது. குறைந்த காலங்களில் கல்வி கற்று வேலை பெறுவதே எனது நோக்கு” என்றான் 15 வயதை உடைய றமணன். அதே வயதுடைய மாணவர்களை சந்தித்த போது எட்வேட் எனும் மாணவனும் றமணனது வார்த்தையை வழிமொழிவது போல் கூறினான்.

பொருள் உற்பத்தியிலும் நீண்ட கால பாவனையை விட குறுகிய கால பாவனைக்கு ஏற்ற வகையில் தரமான பொருளாக இருப்பின் ஏற்றுக் கொள்ள கூடியதாக உள்ளது. அவ்வாறே கல்வி முறையிலும் மாற்றங்கள் உருவாகி விட்டன. ஒரு வயதுத் தரவளியான மாணவர்களை சந்தித்த போது இது சார்பாக கருத்துகள் தெரிவித்தனர்.

காலங்கள் மாறி உள்ள வேளை அதற்கேற்ப சமூகங்களும் மாறியுள்ளன. மனிதர்களது தேவைக்கு ஏற்ப குறுகிய கால தொழில் கல்வி பெறக்கூடிய கல்வி நிறுவனங்கள் பல தோற்றம் கண்டுள்ளன. எவை எவ்வாறு செயல்படுகிறது. என நோக்கிய போது சில உண்மைகள் தெரிய வந்தன. இவை குடிசை கைத்தொழிலிற்கு நிகராக இயங்குவதை காணலாம். அன்றைய குடிசை கைத்தொழிலும் சிறு சிறு வீடுகளில் சிறிய சிறிய இடங்களில் கைத்தொழில் இடம் பெற்றது. அதேபோல இன்று சிறு சிறு இடங்களில் கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல தொழிற் பயிற்சி கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறான இடங்களில் கணனி, ஆங்கிலம், சட்டம், தாதி, முகாமைத்துவம், கணக்கியல், பொருளியல், வைத்தியம் மற்றும் மொழிக்கல்வி என பல கல்விகள் கற்றுக் கொடுக்கின்றனர். கணனி கல்வியிலும் ஆங்கில கல்வியிலும் எண்ணில் அடங்காத கல்வி நிலையங்கள் அதிகமாகவே உள்ளன. “தொழிற் கல்வி நிலையங்கள் எவ்வாறு அதிகரித்துள்ளது எனின் இளம் தலை முறையினர்களுக்கு கல்வி அறிவினை வழங்கி வாழ்விலே முன்னேற்றுவதற்கான ஒரு களமே இந் நிறுவனங்கள்” என்கிறார் கணனி ஆசிரியர் பிரதாப். இன்னும் ஒரு நிறுவனம் அதிகாரியான டேவிட் (பெயர் மாற்றப்பட்டுள்ளது வயது 44) “முதலில் வருமானம் பின்னர் தான் மாணவரது செயல்பாடு அனைத்திற்கும் முன்னுரிமை”. “லாப நோக்கோடு கூடிய மாணவனது கல்வி நிலைக்கு முன்னுரிமை அளிக்கின்றோம். மாணவர்கட்கு நாம் கேட்கும் பணத்தொகை பெரிது அல்ல. அவர்கள் வெளிநாடு சென்று சில கால வேளைகளிலே எமக்குத் தரும் பணத்தினை சம்பாதித்து விடுவார்கள்” என்கிறார் இன்னொரு நிறுவன இயக்குனர் கிருஸ்ணவேணி.

“ஏதோ சில காரணங்களுக்காக சில மாணவர்களது பாடசாலைப் பருவத்திலே கல்வி குழம்பி விடுகின்றது. அதற்காக அவருடைய வாழ்க்கை பாதிப்படைந்து விட்டது என விட்டு விடுவதா? அவர்களை நல்லதொரு கல்வியாளனாக ஆக்க வேண்டும். நான் கூடத் தான் உயர்தரம் மட்டும் படித்தேன் ஆனால் இப்போழுது எனது நிலை எங்கே இருக்கின்றது. நான் இப்போ ‘கோட், சூட்’ போடுகிறேன் எனின் எனக்கு அந்நாளில் நல்லதொரு நிறுவனம் கல்வி கற்க அனுமதித்ததால் தான் இப்போது கௌரவமாக உள்ளேன்”. என்கிறார் 40 வயதையுடைய காசிஸ் ஆங்கில ஆசிரியர்.

“மாணவர்களுடைய கல்வித் தகைமை முக்கியமில்லை. அவர்களுக்கு வேண்டிய சகல சான்றிதழ்களும் நாமே செய்து கொடுக்கின்றோம். எங்களுக்கு மாணவர்கள் பணம் மட்டும் தந்தால் போதுமானது” என்கிறார் வெளிநாட்டிற்கு பயிற்சிக்காக அனுப்பும் 78 வயதையுடைய கல்வி ஆசிரியர். “சான்றிதழ் என்பது காலனித்துவ நாடுகளில் தான் முக்கியம் பெறுகிறது. சான்றிதழ் ஒரு வைரஸ் நோய்” என்கிறார் கணனி ஆசிரியர். பாடசாலை அதிபர் ஒருவர் இதனை முற்றாக மறுக்கிறார். “ஓர் உத்தியோக ப+ர்வமாக மாணவனது திறமைக்கு வழங்குவது தான் சான்றிதழ். திறமையல்லாத மாணவர்கட்கு சான்றிதழ் வழங்கினால் திறமையுள்ள மாணவனிற்கு திறமையில்லாத மாணவன் நிகராகி விடுவானா?” என்கிறார் 56 வயதையுடைய வெள்ளவத்தை பாடசாலை அதிபர்.

கண்டிப்பாக எல்லோரும் படிக்க வேண்டும் அதுவும் பல்கலைக்கழகம் வரை சென்று படிக்க வேண்டும் அப்படிப் படித்தால் தான் கௌரவம் எனின் நமது நாட்டிலே அனைத்து மாணவர்களும் கல்வி கற்று பல்கலைக்கழகம் செல்ல முடியாது. ஏனெனில் அனைத்து மாணவர்களையும் பல்கலைக்கழகம் ஏற்க மாட்டாது. ஏனைய மாணவர்கள் ஏதாவதொரு துறையில் முன்னேற வேண்டும் அதற்கு எந்;தத் துறை தனக்கு ஏற்ற வகையில் அமைகின்றது என தேடுகின்றான். அதற்கேற்ற வகையில் கல்வி கற்கவும் முனைகின்றார்கள் இன்றைய மாணவர்கள். “ஜப்பானில் கல்விகளை பாடமாகவும், தொழிற் பயிற்சியாகவும் கற்றுக்கொடுக்கின்றனர். அதே முறையினைத்தான் நாமும் இங்கு கடைப்பிடிக்கின்றோம். அதில் வெற்றியும் பெறுகின்றோம். மாணவர்கட்கும் அவ்வாறு கற்பதில் தான் ஆர்வம் உள்ளது”. என்கிறார் 65 வயதையுடைய கல்லூரி பணிப்பாளர்.

“வீதியில் ஏனோ தானோ எனத் திரிபவர்களும், விணான சண்டை சச்சரவிற்குள் உள்ளாகுபவர்களும் இவ்வாறு திரிந்து மதுபானைக்கும், போதை வஸ்துகளுக்கும் அடிமையாகாமல் வேறு தீய பழக்கத்திற்கும் உள்ளாகாமல் இருப்பதற்கும் இவ்வாறான கல்விகள் பயன்படுகின்றன. தொழிற்கல்வியிலே காலம் செல்வதனால் இவ்வாறான தீய வழிக்கு செல்லாது தடுக்கக் கூடியதாக உள்ளது” என சமூகத்தின்; ஆர்வலரான கணபதி கூறுகின்றார்.

“வகுப்பில் அந்த பையனைக் கண்டாலே எனக்கு கோபம் தான் வரும். கல்வி கற்று கொடுத்தாலும் கூட அவன் மண்டையில் எதுவும் ஏற்றிக் கொள்ள மாட்டான். நான் அவனுக்கு எத்தனை அடி அடித்துள்ளேன். முன்னேறவே இல்லை. இப்போ நான் ஒய்வு பெற்று விட்டேன். எனது கல்வி நிலையத்திலேயே பெரியதொரு பதவியை பெற்றுள்ளான் அம் மாணவன். அவனுக்கு தொழில் நுட்பத்திலேயே அக்கறை இருந்துள்ளது. தொழில் கல்வி நிறுவனம் சந்தர்ப்பம் வழங்கியதால் அம் மாணவனிற்கு நல்லதொரு வாழ்வு கிடைத்தது” என்கிறார் 65 வயதை உடைய ஞானசாரியார் பாடசாலை ஆசிரியர் நாராயணசாமி.

பாடசாலை கல்வி கற்று பல்கலை கழகம் செல்ல வேண்டும். அவ்வாறு கல்வி கற்றால் தான் ஒரு படிப்பு என அன்றைய காலத்தில் எண்ணினார்கள் ஏன் இன்று கூட அவ்வாறு தான் கிராமங்களில் எண்ணுகின்றனர். கல்வி என்பது ஒரு நேர்கோடு இல்லை. அது பல கிளை விட்டு செல்லும் ஆலமரமாகும் ஆகவே கல்வியினை பலவிதமாகவும் கல்வித் தன்மைக்கு ஏற்ற வகையியலும் கல்வி பயிலலாம் என தொழிற் கலவி நிலையங்கள் காட்டி நிற்கின்றன. எல்லோரும் அரசாங்க உத்தியோகம்தான் பார்க்க வேண்டும் என்பது இல்லை. பல்வேறு பட்ட தொழில் கல்வி நிறுவனங்கள் தோன்றி உள்ளன அதன் மூலம் பல்வேறு தொழில் வாய்ப்பினை பெற்று தன்னையும் வளர்த்து சூழ உள்ளவர்களையும் வளர்க்க முடியும.;

தொழிற்கல்வி நிலையங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பெரிய ஒரு நிறுவனத்தின் அதிகாரியான தயாநிதிமாறன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகின்றார். “நவீன முறையுடனாக அமைந்திருக்க வேண்டும். அதாவது கணனி வசதிகள் நிறைந்த பாட வசதிக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்க வேண்டும். அது மட்டும் அல்லாது புதுப் புது தேவைகளை நிறைவேற்றும் வகையில் அமைந்திருக்க வேண்டும். முக்கியமாக இட வசதி போதுமானதாக அமைந்திருத்தல்”. “அத்தியாவசிய தேவை என்ன எனின் சாதாரண உயர்தரம் படித்து விட்டு பெறுபேறிற்காக சிறிது காலம் காத்திருக்கும் சமயத்தில் அவர்கட்கு ஆலோசனை வழங்கும் ஆலோசகர்கள் நிறுவனங்களிலே இருக்க வேண்டும். அவ்வாறெனின் மாணவர்கள் எக்கல்வியினை எவ்வாறு படித்தால் மாணவருக்கு உதவியாக இருக்குமென ஆலோசகர்களை நிறுவனத்தில் வைத்திருத்தல் வேண்டும்” என்கிறார் பாடசலை விஞ்ஞான ஆசிரியர் தயானந்தன்.

“எமது நிறுவனத்திற்கு தொழிற்கல்வி பெறுவதற்கு வந்துவிட்டான் அவனிற்கு ஏதோ கற்றுக்கொடுப்போம் என்று சிந்திக்காது பணத்தினைப் பெற்று விட்டோம் அதற்கேற்றவாறு அவனுக்குத் தேவையான தொழிற் பயிற்சிக் கல்வியினை வழங்குவோம் என சிந்தித்து அம்மாணவர்கட்கு மகிழ்சிசியுடன் கற்பித்தலை அழிக்க வேண்டும் மாணவனையும் மகிழ்ச்சியுடன் கல்வியில் ஈடுபட வைக்க வேண்டும்” என்கிறார் 32 வயதையுடைய சுரேஸ்;.

“இதே நிலையில் கல்வியை கை விட்டவர்கள் வாழ்க்கையில் உச்சம் பெறுவதற்கும் அவர்களது குறுகிய காலத்திற்கு தொழிற்பயிற்சிக் கல்வி வழங்குவது நன்மையானதும் கட்டாயமானதும். ஆரம்பத்தில் சாதனை படைப்பதாக எண்ணும் தொழிற் கல்வி நிலையங்கள் தோன்றுகின்றன ஆனால் காலப்போக்கில் ஏனோ தானோ என செயல்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது” என சமூகத்தில் அக்கறை கொண்ட பெண்ணொருவர் ( பெயர் குறிப்பிட விரும்பாத). மாறி வரும் கல்விக்கும், வேலைக்கும் கல்வி விரிவாக்கம் மாறுவது முக்கியமானது. வாழ்க்கைக்கு ஏற்ற மாற்றங்களைக் கொண்டு வருதல் மாற்றங்களுக்கு ஏற்ப வாழும் தன்னம்பிக்கை இருத்தல் வேண்டும் இன்றைய வாழ்க்கை கூட மனிதனது ஒவ்வொரு நகர்வும் தனி மனித விருத்திக்கும சமூக விருத்திக்கும் கால் கோலாக அமைய வேண்டும்.


“பிள்ளையள் எங்களுக்காக அனுப்பினம் நாங்கள் செலவளிக்கிறம். இதில என்னத்தைப் பார்க்கிறது” என்று கூறினார் திலகவதி. இப்படித்தான் எத்தனையோ பேர் தங்களை அறியாமல் பணத்தினை செலவளித்து கொண்டு இருக்கின்றார்கள். வெள்ளவத்தை பகுதியில் அதிகமான யாழ்ப்பாணத்தவர்களே வசிக்கின்றார்கள். அதிகமானோர் வெளிநாடு செல்வதற்காகவும் வெளிநாட்டு வருமானத்துடன் வெளிநாட்டையே மையமாக வைத்து வாழ்கின்றார்கள். வருமானமானது அதிகமாகவே கிடைப்பதால் பொருட்களின் விலைகளைப் பொருட்படுத்துவது இல்லை.

நகரத்தை நோக்கி வந்தவர்களில் அதிகமானோர் கிரமவாசிகள் தான். அங்கு அவர்களின் வாழ்க்கை முறையானது முற்று முழுவதாக மாறுபட்டதாகத் தான் இருக்கும். வாழ்க்கைச் செலவானது குறைவாவே காணப்படும். ஒரு புது உடுப்பு எடுக்க வேண்டும் எனின் தைப்பொங்கல் அல்லது வருசம், தீபாவளிக்கு காத்து கொண்டு இருப்பார்கள். ஏதாவது செலவு செய்ய வேண்டிய தேவை இருந்தாலும் ஆயிரம் தடவைகள் யோசிப்பாகள. ஆனால் அவர்களே நகரத்தை நோக்கி நகரும் போது நடைமுறையுடன் இயல்பாகவே ஒன்றி விடுவார்கள். இதற்கு காரணம் ஒன்று புதிய கலாச்சாரங்களின் வருகை மற்றயது அதிகரித்த வெளிநாட்டு பணமும்தான்.

சுவாதி கூறுகையில் “என்னுடைய கணவர் எனக்காக காசு அனுப்பும் போது நான் ஒன்றுக்கும் யோசிக்கத் தேவை இல்லை”. இப்படித்தான் எத்தனையோ பேர் செயற்பட்டு கொண்டு இருக்கிறார்கள். நல்லதொரு உதாரணம் வெள்ளவத்தையில் மற்றைய இடங்களுக்களுடன் ஒப்பிடுகையில் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகமாகவே காணப்படுகின்றன. புறக்கோட்டையில் 7 தோடம்பழம் 100 ரூபாய் வெள்வத்தையில் 1 தோடம்பழம் 30ரூபாய். நாரகேன்பிட்டி அரச வணிக சந்தையில் 1 கிலோ கத்தரிக்காய் 20 ரூபாய், வெள்ளவத்தையில் 80 ரூபாய்.

“எங்கட பிள்ளைகள் 4 பேரைப் போல வெளிநாடு போக வேணும் தானே இதுக்கெல்லாம் காசைப்பாக்க ஏலாது. இது ஊரில்லயே” என்கிறார் பிருந்தா. புதிய புதிய நாகரீகங்களின் வருகை அத்தோடு ஒன்றிப் போகும் மக்களும் கலாச்சாரத்திற்கும் முகம் கொடுக்க பணம் தேவை அது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. விலைகளை சரியாக அறிந்து கொள்ள முடியாமல் கேக்கிற பணத்தை கொடுகின்றார்கள். இதற்கு முதல் பிரச்சனையாக இருப்பது மொழிப் பிரச்சனை தான். சிங்களம் தெரியாத காரணத்தால் சரியான முறையில் கொடுக்கல் வாங்கல்களை செய்ய முடியாது உள்ளது.

இன்னொரு பிரச்சனை அவர்கள் பணத்தை கொட்டிக் கொடுப்தால் விற்பனை செய்பவர்களும் இவர்களிடம் பணத்தை கறக்கலாம் என கூட விலைகளைச் சொல்வார்கள். வேறு இடங்களிற்குச் சென்று வாங்குவதற்கும் அவர்களுக்கு போக்குவரத்து பிரச்சனையாகவே உள்ளது. வருமானத்தை விட அதிகமாகவே செலவு செய்கின்றனர். வெளிநாடுகளிலிருந்து உறவுகள் அனுப்பும்; பணத்தை தங்களுடையது என்று சரியாகத் திட்டமிட்டுக் கொள்வதில்லை. இதனால் வரவை விட செலவு அதிகமாகவே உள்ளது. அதிகமாகக் பணம் வருவதால் இவர்களுக்கு அது தெரிவதில்லை. மாதம் 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்பவர்கள் கூட இருக்கின்றார்கள். (ஒருவருக்கான பணம்)

இதற்குக் காரணம் அவர்களுடைய தேவைகளை சரியாக முக்கியத்துவப்படுத்தி செலவு செய்வதில்லை. சொப்பிங் என்று சொல்லி, போய் எல்லாப் பொருட்களையும் வாங்கி வருகின்றார்கள். இவர்கள் கிராமங்களிலிலிருந்து வந்த நடுத்தரவர்க்க வகுப்பு குடும்பங்கள் தான். ஆனால் இன்னொரு வர்கமும்; உள்ளது. அதாவது உயர் வர்க்க வகுப்பினர் தங்கள் வருமானத்திற்கு ஏற்ற மாதிரி விலை கூடிய இடங்களில் கொள்வனவு செய்வார்;கள் அவர்களை இதற்குள் உள்ளடக்க முடியாது. வெள்ளவத்தையில் உள்ள வெளிநாட்டுச் செலாவனியை நம்பியுள்ளோரின் ஒட்டு மொத்த கருத்தாக இருப்பது இது ‘எங்களுடைய பணமல்ல அதனால் எப்படியும் செலவழிக்கலாம்’ இனி வரும் காலத்தில் இது பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக கிருலப்பனையிலுள்ள ஒருரைக் கேட்ட போது அவர் கூறினார் “வெள்ளவத்தையில் வெளிநாட்டுக்காரர் தான் இருக்கின்றார்கள்”; குண்டூசியில் இருந்து குளிரூட்டி வரை எல்லாம் 3 மடங்கு விலையாகத்தான் உள்ளது”. இப்படி ஒரு கருத்து காணப்படும் போது அதை அங்குள்ள மக்கள் தான் கவனத்தில் கொள்ள வேண்டும். வெள்ளவத்தை என்றாலே அது குட்டி யாழ்ப்பாணமாகவே உள்ளது. நுகர்வின் போது நுகர்வோர்கான பொறுப்பு இருக்கின்றது. இதை அவர்கள் சுயமாகவே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

பி.கு : நட்சத்திர வாரத்தில் நான்கு நாள் இடுகை இடாமல் விட்டுவிட்டேன். எல்லாத்துக்கும் அதிகரித்த வேலைப்பளு தான் காரணம். எனவே மன்னியுங்கள். இனியும் பதிவெழுதாமல் ஏமாத்தாமல், இந்தப் பதிவு. கடந்த வருடம் ‘களச் செய்திச் சேகரிப்பின்’ போது கல்லூரிக்காக எழுதப்பட்டது.


பதிவர்களை ஊக்குவிக்கும் யாழ்தேவி திரட்டியின் இவ்வார நட்சத்திரமாக என்னை அறிவித்திருக்கிறார்கள். அதற்கு முதலில் யாழ்தேவிக்கு நன்றிகள். பொழுது போக்காக ஆரம்பித்த வலைப்பதிவில், நாட்கள் செல்லச் செல்ல சில விடயங்களை எழுதியே ஆக வேண்டும் என ஆரம்பிப்பேன். பதிவாக வரும்போது நான் சொல்ல நினைத்ததில் அரைவாசி தான் இருக்கும்.



காரணம், என் பதிவுகளை வலையில் இட முதல் நண்பர்களிடம் காட்டுவேன். "ஊடகத்தணிக்கை" எனும் பெயரில் பல இடங்களை நீக்கி விடுமாறு கூறுவார்கள். மனம் அதற்கு உடன்படாவிடினும், கை உடன்படும். ஊடகவியாலாளனுக்கு முக்கியம் செய்தியல்ல, உயிர். இதனால் இன்று வரை நான் இடும் பதிவுகளில் எனக்கு நூறு வீதத் திருப்தி இல்லை.

நட்சத்திர வாரத்தில் பதிவுகளை தொடர்ச்சியாக இட முயற்சிக்கின்றேன். முடியாது போனால் பொறுத்தருள்க.

மண் குதிரைக்கு சமனான தென்னிந்திய நடிகர் சங்கம்

மண்குதிரையை நம்பி ஆத்தில போனால் என்ன நடக்கும் தெரியும் தானே! அதே மாதிரி தென்னிந்திய நடிகர் சங்கம் (தமிழ்) இருக்குது. நடிகர் சங்கத்தில யார் சொல்லுறது சரி. யார் உண்மையான தீர்மானங்களை எடுப்பவர்.? எவர் சொல்லுறதை நம்பலாம் எண்டு தெரியாமல் கிடக்கு. ஆளாலுக்கு பத்திரிகை காரங்களைக் கூப்பிட்டு பேட்டி குடுக்கிறாங்க. பிறகு எல்லாரும் சேர்ந்து கதைக்கிறாங்க. என்ன நடக்குது உங்கை?

இப்பிடித் தான் புவனேஸ்வரி விவகாரத்திலயும் பொங்கி எழுந்து, பத்திரிகைக் காரங்களுக்கு எதிரா கூட்டம், ஆர்ப்பாட்டம் எண்டு கலக்கினாங்க. பிறகு ரஞ்சிதா விவகாரத்தில பெட்டிப் பாம்பா அடங்கிட்டாங்க. அதே மாதிரி ஐஃபா வை காரணம் காட்டி இந்திய திரையுலகத்தையே புறக்கணிக்கக் கூப்பிட்டாங்க. குறைந்த பட்சம் தமிழ் சினிமாக் காரங்களை தன்னும் தடுத்தாங்க. பிறகு இலங்கைக்கு காலடி வைக்க நினைச்ச லியோனி, சுப்பர் சிங்கர்ஸ் ஜூனியர், சீனியர் எண்டு எல்லாரையும் மடக்கினாங்க. ரத்த சரிதம் படத்தை போடவிடாமல் பண்ணுவாங்க எண்டு நினைக்கும் போது, ஐஃபா செத்துப்போச்சு எண்டாங்க. இப்பிடி பல கதை சொல்லுவாங்க.

கடைசில அம்பிட்டது அசின், ஆளாளுக்கு கருத்து தெரிவிச்சாங்க. தமிழ் சினிமாவே நடிக்க விடமாட்டம் எண்டு துள்ளிக் குதிச்சாங்க. கடைசியா எல்லாரும் சேர்ந்து நேற்று கூட்டம் போட்டு கதைச்சு தொழில் மற்றும் தனிப்பட்ட விடயமா போறவங்க போகலாம் எண்டு பச்சைக் கொடி காட்டினாங்க. இதை முதல்லயே செய்திருக்கலாமே! நீங்க தமிழ்ல தடை செய்யலாம், அதுக்காக ஹிந்தில நடிக்க விடாம செய்யேலுமோ. இல்லைத் தானே! எதையும் பிளான் பண்ணி செய்யுங்கோ, இல்லாட்டி இப்படித் தான் ஆளாளுக்கு பந்தாடுவானுகள்.

அசின் யாழ்ப்பாணம் வந்தவாவெல்லோ, படங்களைப் பாருங்களன்.







நம்மளுக்கு உள்ள பிரச்சினையையே தீர்க்க காணல, இதில புதுசா வேற பிரச்சினை வந்தா?

எப்ப நம்ப 'மெயில்' பறிபோகும்... 'பேஸ்புக்' பறிபோகும்... 'புளொக்கர்' பறி போகும்... எண்டு யோசிக்கிறதிலையே அரைவாசி நேரம் போயிடுது.

'நெற்வேர்க் கனெக்ஸன்' பிரச்சினையால, 'மெயில் ஓப்பன்' பண்ணுறதில சிக்கல் வந்ததாலும், கொஞ்ச நேரத்தில மனசு பதறிடுது. அப்பிடி 'மெயில் ஹக்' பண்ணுப்பட்டாத் தான் என்ன? உயிரா போச்சுது? எண்டு நினைச்சு பதறாமலும் இருக்கேலாமல் கிடக்கு. எதைக் கொண்டு வந்தோம் அதை இழப்பதற்கு? என யோசிச்சாவது மனசை ஆசுவாசப்படுத்தலாமெண்டா, பாழாய்ப் போன அது கேக்குதில்லை.

எங்களைப் போல ஆக்களின்டை 'எக்கவுண்டுகளை ஹக்' பண்ணுறதால என்ன லாபம்? நாங்க என்ன பில்கேடஸ்ஸோட ஒண்ணு விட்ட சகோதரமா? அல்லது அம்பானியோட அக்கா பிள்ளைகளா? அட! அவ்வளவு ஏன், பொன்சேகாவோட சொந்தக்காரங்களா?

பின்ன ஏன் 'ஹக்' பண்ண வெளிக்கிடுறாங்க? "நீ எழுதக் கூடாது...!", அதுக்கேனய்யா முளையைக் கசக்கி 'ஹக்' பண்ணுவான். நானே எழுதாமப் போறனே! நீ சந்தோஷப்படு.

என்னோட நண்பர் ஒருத்தர் அடிக்கடி சொல்லுவார், "அட! நாசமாப்போன யாராவது என் புளொக்கரை ஹக் பண்ணுங்களண்டா... இதால எவ்வளவு தொல்லை. நீங்களும் ஹக் பண்ணுறீங்க இல்ல. நானும் எழுதுறதை நிறுத்திறன் இல்ல. ஏதாவது ஒண்டு நடந்தாக் கூட மற்றவன் பேசாமல் இருக்கலாம்".

இப்பிடி ஒவ்வொரு ஆட்களும் பலவிதம்.

இந்தியப் பதிவர் ஒருவரான சூர்யா கண்ணனின் வலைப்பதிவு 'ஹக்' பண்ணுப்பட்டதை அறிந்தேன்.
ஒட்டு மொத்தமாக அவரது பல கணக்குகள் பறிபோய் விட்டனவாம். எனவே பதிவர்கள் விழிப்பாகவும் உஷாராகவும் இருங்கள்.

என்னோட புளொக்கர் 'ஹக்' பண்ண முதல் சொல்லுங்க, நானே எழுதாமல் விடுறன். உங்களுக்கேன் வீண் சிரமம்.


இலங்கையில் ஒரு வருடத்துக்கு முன்னர் பொலிஸாரின் ஆதிக்கமே கையோங்கி காணப்பட்டது. இவர்கள் என்ன செய்தாலும் அவர்களை திருப்பி கேள்வி கேட்க முடியாது. அது மட்டும் அல்ல எங்கள் கேள்விகளையும் கேட்கவும் முடியாது. பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் கைது செய்வதும், மக்களை பரிசோதனை செய்வதும், அடையாள அட்டைகளை பார்ப்பதும், பின்னர் அதனை வேண்டி வைத்து விட்டு பொலிஸ் நிலையத்திற்கு வரும்படி கூறுவதும், முன்னுக்கு பின் முரணான கேள்விகள் கேட்பதும், சந்தேகம் எனும் பெயரில் கைது செய்வதும் அவர்களது கடமைகளாக காணப்பட்டது.

இப்போது அவர்கள் என்ன செய்கின்றனர் என என் கண்ணால் தெரிந்ததையும் காதால் கேட்டவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவை யாவும் உங்கள் கண்ணுக்கும் புலப்பட்டு இருக்கும் என நம்புகிறேன்.

பொலிஸாரினால் இலங்கையின் பல பாகங்களிலும் போதைவஸ்துக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளினை தடை செய்வதை மிகவும் மும்முரமாக செயல்பட்டு வருவதனை நாம் ஊடகங்கள் மூலம் அவதானிக்க கூடியதாக உள்ளது. அதில் அவர்கள் வெற்றி பெற்று வருவதையும் காணக்கூடியதாக உள்ளது. பொலிஸின் இந்த நடவடிக்கைகளினால் போதைப் பொருட்களிற்கு மக்கள் அடிமைப்படுவதனை ஓரளவேனும் தடுக்கக் கூடியதாக உள்ளது. எனினும் சில மக்களின் அன்றாட பாவனைகளில் போதைப்பொருட்களும் பாவனையில் எடுப்பதை காணக்கூடியதாக உள்ளது.

அது மட்டும் அல்லாது அங்கீகாரம் பெறப்படாத கருச்சிதைவு மையங்கள் பல பொலிஸாரின் புலனாய்வுப் பிரிவால் கண்டு பிடிக்கப்பட்டு அவற்றிற்கு சீலும் வைக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்ககப்படாத எத்தனையோ கருச்சிதைவு மையங்களை நிறுவுவதனை தடுத்து நிறுத்துகின்றனர். (உ-ம்)(அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு முற்றுகை) அங்கீகரிக்கப்படாத கருச்சிதைவு நிலையங்கள் நிறுவுவதனால் முறையான சிகிச்சை முறை இல்லாது செய்யும் சிகிச்சை முறையினால பல உயிர்கள் இறக்க நேரிடுகின்றன. தகாத முறைகளில் உறவுகளினை வைத்திருப்பதற்கு துணிவுடன் இறங்கி விடுவார்கள்.. இவை எதுவும் நேர விடாமலும் கலாசார சீரழிவுகள் ஏற்படாமலும் நல்லொழுக்கங்களை கட்டி காப்பாற்றுவதிலும் கவனம் செலுத்தி அதனை வளரவிடாது அவற்றினை பொலிஸார் முற்றுகையிடுவது வரவேற்கப்பட வேண்டியவை.

ஆறுகள், கடல்கள் நிறைந்த இடங்களில் அனுமதி இல்லாது மண் அகழ்வுகளினை மேற்கொண்டு வருகின்றனர். இதனையும் பொலிஸ் தடுத்து நிறுத்துகின்றனர். ஆறுகளில் கடல்களில் மணல்களை அகழ்கின்;றார்கள் எனின் சுற்றிவர உள்ள மக்களிற்குத்தான் பாதிப்பு. அந்த பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் வளங்களை காப்பாற்றி வருகின்றனர். இவையும் வரவேற்கப்பட வேண்டியவைதான்.

நாட்டின் பல பாகங்களிலும் காதல் ஜோடிகளை கைது செய்கின்றார்கள். பொது இடத்தில் கட்டிப்பிடிப்பதோ, முத்தமிடுவதோ தவறு எனக் கூறுகிறார்கள். இன்னொரு பக்கத்தில் “எங்களுக்கு இதற்கு கூடச் சுதந்திரமில்லையா?” என காதலர்கள் புலம்புகின்றனர்.

இவ்வாறு நல்ல பக்கங்கள் இருந்தாலும் இவர்கட்கு இன்னொரு முகமும் உள்ளது. அதனையும் பார்த்து விடலாம். (அண்மையில் வெளிவந்த குற்றப்பிரிவு படம் போல்த்தான்)

வெள்ளவத்தையில் பொதுவாக சனநெருக்கடி அதிகம். இதனால் ரஃபிக் பொலிஸினை அதிகளவாக அங்கேதான் குவித்தும் உள்ளனர். இதற்குள் பொலிஸார் ஒரு மோட்டபைக்கை கொண்டு அங்கும் இங்கும் ஓடித்திரிவார்கள்.

நீண்டதூர பயண வாகனங்களை மட்டும் அல்லாது மோட்டபைக் மற்றும் சிலர் வீதி விதிகளை மாறி பயணித்தால் கூட நிறுத்தி லஞ்சம் வாங்குவதனை கண்கூடாக பார்க்கக்கூடியதாக உள்ளது. முன்னர் லஞ்சம் வாங்குவது லைசன்ஸ் புத்தகங்களிற்கு உள்ளே வைத்து கொடுப்பார்கள் ஆனால் தற்போது அப்படி ஒன்னும் இல்லை. நேரடியாகவே எல்லா மக்களும் பார்க்கக்கூடிய விதத்தில் பணத்தினை வாங்குகின்றனர்.

வாகன ஓட்டுனர்களும் சிறிது நேரம் பேரம் பேசி (சந்தையில் பேரம் பேசுவது போல) பின்னர் திருப்திப்படாமல் பணத்தினை வழங்கி விடுகின்றனர். அவர்களிடம் சென்று ஏன் இப்படி அநியாயமாக பணத்தினை வழங்குகிறீர்கள் என கேட்டால் “பொலிஸ் ஸ்ரேசனும் போஸ்ட் ஒபீசுமா அலைய வைப்பான்கள் வேலைக்கும் போக முடியாது இழுபட்டு கொண்டே இருக்க வேணும் அதைவிட அவன்கள் கேட்கும் பணத்தினை குடுத்திட்டம் எனின் ஓடுப்பட வேண்டிய அவசியமும் இல்லை வேறு பிரச்சினை வராது.” என்கின்றனர் பல பேர். மக்களின் இந்த அலட்சிய போக்கே நாட்டிலே லஞ்சம் வளர்வதற்கு அடிப்படை காரணமாக உள்ளது. மக்கள் உஷார் நிலையில் இருந்தார்கள் எனின் லஞ்சத்தினை ஒழிக்கலாம் பொலிஸ் எனின் லஞ்சம் என முத்திரை குத்துவதை விட அம் முத்திரையை உடைக்க வேண்டும் எனின் மக்களாகிய நாங்கள் தான் லஞ்சம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறான இடங்களில் மட்டும் அல்ல எந்தவொரு வேலையும் பொலிஸ் மூலம் நடைபெற வேண்டும் எனின் அதிகளவானோர் (98மூ) பணத்தினை கொடுத்துதான் காரியங்களை செய்கின்றனர். இதில் எந்த விதமான மாற்றமும் இல்லை. இதற்கு காரணம் (அதிகளவானோரின் கருத்துப்படி) “உடனே காரியம் ஆகவேண்டும் பணத்தினை வழங்கினால் உடனே செய்து முடித்து விடலாம். இழுபட்டுக் கொண்டு இருக்காது. பிரச்சினையும் வராது என எண்ணுகின்றனர்.” இவ்வாறு மக்களின் சிந்தனை சென்று கொண்டு இருந்தால், நாடு லஞ்சத்தினால் முன்னேறி விடும்.

பொலிஸ் என்ற தற்துணிவை பயன்படுத்தி எதுவும் சாதிக்கலாம் என எண்ணுகின்றனர். மருதமலை படம் எல்லோரும் பார்த்து இருப்பீர்கள் அதில் பிச்சைக்காரனுக்கு நிகராக வடிவேல் லஞ்சம் வாங்குவார். (அப்போது எல்லோரும் சிரித்து இருப்போம் ஆனால் நிஜத்தில் அவ்வாறு நடந்து இருக்கும் எனின்) லஞ்சம் வாங்கும் பொலிஸினை பிச்சைகாரனுடன் ஒப்பிடப்படுகின்றார்கள். அவ்வாறு எனின் பொலிஸ்காரர்கள் எல்லாம் அவர்களா?

இலங்கையிலே ஐந்து தொழில்கள் மிகவும் உன்னதமானது. அதிலே பொலிஸ் வேலையும் உள்ளடங்கலாக. மருத்துவர்கள், வக்கீல்கள்… இவர்கட்கு சமனானதுதான் பொலிஸ் தொழிலும். ஆனால் அத் தொழிலை பல பொலிஸ்காரர்களால் தவறான வழியில் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறான சில காரணங்களினால்தான் இத் தொழிலிற்கு மதிப்பு இல்லாமல் போகுது. வெளிநாடுகளில் பொலிஸ் வேலை எனின் நல்ல மதிப்பு. ஆனால் இலங்கையில்……..

இவ்வளவு காலமும் பொலிஸ் தொழில்தான் லஞ்சம் பெறுவதில் முதலிடம் வகித்து வந்தது. இப்போ அது கல்வியை முன்னுக்கு தள்ளி விட்டு தான் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது.



யாருக்கும் சவால் விடப் போறனோ எண்டு நினைச்சிடாதீங்க, இது எனக்கு அண்மைக்காலத்தில் மிகவும் பிடித்த பாட்டு.

மணிரத்னம் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த ராவணன் திரைப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவரே அனுபவித்துப் பாடிய பாடல்.

பொதுவாக முன்னைய காலங்களில் படங்களின் எழுத்தோட்டத்தை ஆரம்பத்திலேயே காட்டி விடுவார்கள். இப்பொழுது தமிழ் சினிமாவிலும், ஆங்கிலத் திரைப்படங்களைப் போல படம் முடிந்த பிறகு தான் படத்தின் தூண்களின் பெயர்களைக் காட்டுகிறார்கள். அதை யார் பார்க்கப் போகிறார்கள்.

ராவணன் இறுவட்டில் இல்லாத பாடலொன்று படத்தில் இடம்பெற்றுள்ளது. "நான் வருவேன்.. மீண்டும் வருவேன்.." அதற்காகவே தியேட்டரில் எழுத்தோட்டம் முடியும் வரை நின்று பார்த்தேன்.

இது இயக்குனரின் தந்திரமா?

என்ன செய்வது? நீங்களும் தியேட்டரில் பார்க்காத எழுத்தோட்டத்தை இங்கே பாடலுடன் பாருங்கள்.




வணக்கம் பதிவுலக நண்பர்களே!

இன்று உலகச் சுருங்கி விட்டது. அச்சு ஊடகங்களை விட இலத்திரனியல் ஊடகங்களும், இணையங்களும் மக்களை ஆட்டுவிக்கின்றன. குறிப்பாக இணைய எழுத்தாளர்கள். நம் சிந்தனையில் தோண்றும் எண்ணங்களை எழுத்து வடிவில் கொண்டு வந்து அதனை வாசகர்களின் கைகளில் வலைப்பதிவுகளாக விட்டு விடுகின்றோம். பிடித்தால் பாராட்டுக்களையும் பெற்றுக் கொள்கின்றோம். இல்லாவிட்டால் உடனடித் திட்டுக்களையும் பெற்றுக் கொள்கின்றோம்.

இணையத்தில் ஏதோ கிறுக்கத் தொடங்கியவர்களில் பலபேர் கைதேர்ந்த எழுத்தாளர்களாக இன்று மாறியதனையும் மறுக்க முடியாது. என்னதான் இணையத்தில் எம் எழுத்துக்களை வாசித்தாலும், எம் எழுத்துக்கள் கைகளில் நூல் வடிவில் தவளும் போது, அதை பார்ப்பதே தனிச் சந்தோஷம்.

வலைப்பதிவு எழுத்தாளர்கள் பலர், பல ஊடகங்களில் எழுதிக் கொண்டு இருக்கின்றார்கள். அது மட்டுமல்லாது பல பதிவர்களது பதிவுகள் ஊடகங்களில் எடுக்கப்படுகின்றன. (களவாகவும்). ஆனால் வலைப்பதிவர்களின் பதிவுகளை திரட்டி ஒரு புத்தகமாகவோ அல்லது சஞ்சிகையாகவும் வெளிக் கொணர பலரும் முயற்சித்தாலும் (முயற்சித்து கொண்டிருந்தாலும்) அது பாரியளவில் கைகூடவில்லை.

நாங்கள் சிலர், நண்பர்களாக இணைந்து பதிவர்களின் வித்தியாசமான பதிவுகளைத் திரட்டி ஒரு சஞ்சிகை வடிவில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை வெளியிட முயற்சிகளை எடுத்து வருகின்றோம். பக்க வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் நாங்களே கையாளப்போகின்றோம். எனவே குறை நிறைகள் இருக்கும். ஆனாலும் உங்கள் கைகளில் கிடைக்கும் போது அது பூரணமான சஞ்சிகையாக இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் கூடியவரை மேற்கொள்வோம்.

இது எந்த அமைப்பையோ, நிறுவனத்தையோ சார்ந்ததாக அல்லாமல் பதிவர்களின் கூட்டு முயற்சியாக இருக்கும். தகுந்த பக்க பலங்கள் இணையும் போது சஞ்சிகையை இலவசமாக கொடுப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்.

எனவே அடுத்துவரும் 3 மாத காலப்பகுதிக்குள் ஒரு வலையுலக எழுத்தாளர்களின் சஞ்சிகை ஒன்றை எதிர்பாருங்கள். எல்லா பதிவர்களுடைய பதிவர்களையும் நாங்கள் மட்டும் கண்காணிப்பது என்பது இயலாத காரியம். எனவே நாங்கள் விசேடமாக குறிப்பிடும் காலப்பகுதியில் நீங்கள் வாசித்த, ஆக்க பூர்வமான பதிவுகளை நாங்கள் குறிப்பிடும் தொடர்பு முகவரிக்கு தெரியப்படுத்துங்கள்.

ஒற்றுமையுடன் கைகோர்ப்போம்.

நன்றி

பி.கு : இது இலங்கைப் பதிவர்களின் பதிவுகளுக்கு மட்டுமே!


வன்னியில் இடம் பெற்று வரும் மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராய இந்தியாவின் விஷேட நிபுணர் குழு ஒன்று இலங்கை வரவுள்ளது. எதிர் வரும் இரண்டு மாதத்திற்குள் முகாம்களில் எஞ்சியுள்ள 47ஆயிரம் மக்கள் அவர்களின் சொந்த இடங்களிலே மீள்குடியேற்றப்படுவார்கள் என்று மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இம் மீள்குடியேற்ற பணிகளுக்கு இந்திய அரசாங்கம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், யுனிசெப் உட்பட பல்வேறு சர்வதேச பொது அமைப்புக்களும் நிறுவனங்களும் பல வழிகளில் உதவிகளை வழங்கி உள்ளன.

மீள் குடியேற்றப்படும் அனைத்து மக்களுக்கும் தலா 75 ஆயிரம் ரூபாவும் ஆறு மாதத்திற்கு தேவையான பொருட்களும் பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்படுகிறது. அரசாங்கத்தினால் வழங்கப்படும் இந்த நிவாரணங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் பிரதேச செயலக அதிகரிகளிடம் தெரிவிக்கலாமென குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பகுதிகளில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் 75ஆயிரம் ரூபாய் என்பது அவர்களிடம் ஒழுங்காக சென்றடையவில்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தொகை வழங்கப்படுகிறது. பூரணமாக 75ஆயிரம் ரூபாயும் சென்றடைய வேண்டுமெனின் அதற்கு பொறுப்பான அமிகாரிகள் தான் கவனம் எடுக்க வேண்டும்.

யாழ்ப்பாண மக்களுக்கு சென்று சேரும் உதவிகளைப் போல் வவுனியா மற்றும் கிழக்கு பகுதி மக்களை சென்றடைய வில்லை என்ற கருத்தும் இருக்கின்றது. இதற்கான காரணம் பல்வேறு பட்ட தரப்பினரதும் நோக்கு யாழ்ப்பாணமாக இருக்கலாம். 75ஆயிரம் பணம் தான் சென்றடையவில்லை எனின் 6 மாதத்திற்கு தேவையான நிவாரணங்கள் கூட அவர்களிற்கு சென்றடையவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். கிளிநொச்சி நகர்புற மக்களுக்குத்தான் சிறியளவிலான நிவாரணங்கள் சென்று அடைந்துள்ளது. ஏனைய பகுதி மக்கள் நிவாரணத்திற்காக தவம் கிடப்பதாக அங்கிருந்து கிடைக்கும் உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடலில் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்பட்ட போதும் இதுவரைக்கும் கடலில் மீன்பிடிப்பதற்கு யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்கிறார் மீன்பிடி தொழிலாளியான ஜொனிற்றன். அவர்களுடைய தொழிலுக்கு ஏற்ற உபகரணங்கள் எதுவுமே வழங்கப்பட இல்லை. அது மட்டும் அல்ல “எனக்கு கொஞ்சம் சிங்களம் தெரியும். அதனால பிரதேச செயலாளர் மூலம் போய் கதைத்து பொமிஷன் எடுக்கப்போறன்" எனவும் கூறியுள்ளார். இவ்வாறான நிலையில் தான் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் உள்ளனர்.

காடுகளுக்கு சென்று விறகுகளை வெட்டவும் விவசாயம் செய்யவும் அனுமதி பெறுவதில் எவ்வித தடைகளும் கிடையாது. மீள்குடியமர்த்தப்படும் மக்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய நிரந்தர வீடுகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் இந்திய அரசாங்கம் 50ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு நிதி வழங்க முன்வந்துள்ளது. அதை விட மேலும் 1லட்சத்து 70ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றன என பிரதியமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் மீள்குடியேற்றப்படுவார்களென தெரிவித்திருக்கும் நிலையில் அவர்களுக்கான வாழ்வாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவது எப்போது?


இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர் குழு ஒன்றினை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர்களை பான் கீ மூன் நியமித்துள்ளார்.

இந்தோனேசியாவின் மர்சுகி டாருஸ்மன் தலைமையிலான இந்தக் குழுவில் தென் ஆபிரிக்காவின் யஸ்மின் சூக்கா மற்றும் அமெரிக்காவின் ஸ்டீவன் ரட்னர் ஆகியோர்; இடம் பெற்றுள்ளனர். இந்த நிபுணர் குழு 2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனுக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கூட்டு அறிக்கையில் உள்ள மனித உரிமைகள் தொடர்பில் ஆராயவுள்ளது. இலங்கையில் இடம் பெற்ற வன்முறைகள் தொடர்பிலான விசாரணைகளின்போது சர்வதேச சட்டங்கள் பின்பற்றப்பட்டனவா? என்பது தொடர்பாகவும் இந்தக்குழு ஆராயவுள்ளது.

வெட்ட வெளிச்சமாக தெரியும் சூரியனை கண்டு பிடிப்பதற்கு எதற்கு கொள்ளிக்கட்டை? மனித உரிமைகள் மீறப்பட்டவையா? அல்லது மீறப்படவில்லையா? என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். எனினும் அதனை சட்ட மூலம் நிறுவ வேண்டும் அல்லவா? அதற்குத்தானாம் இந்த ஏற்பாடு.

இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட முனையும் இந்தக்குழு அதன் பணிகளை 4 மாதங்களுக்குள் நிறைவு செய்து கொள்ளும் தேவை ஏற்படின் இந்தக்குழுவின் காலம் நீடிக்கப்படும் எனறு நெசிர்சி குறிப்பிட்டுள்ளார். “தேவை ஏற்படின்” என அவர் குறிப்பிடும்போதே புரிந்து கொள்ள வேணும் இதற்கான தீர்வு இப்போதைக்கு கிடையாது என. எனினும் பரவாயில்லை உலக நாடுகளுக்கு இலங்கை செல்வதாக காட்டி கொள்ள வேண்டும் தானே!.

தமது அறிக்கையின் எந்த விடயங்களை பொது மக்களுக்கு வெளியிடுவது? எந்த விடயங்களை செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு தெரிவிப்பது என்பது தொடர்பாக இந்தக் குழுவே தீர்மாகிக்கும் என பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


பிறகென்ன உண்மைகள் வெளிவந்த மாதிரித் தான்! வந்து ஆராய்ந்து உடனே தீர்வு கண்டு விட்டுத்தான போவார்கள் போல இருக்கு. நல்ல தீர்வு வரும் எனஇ இக்குழுவை நம்பி இருக்கலாம். இந்தக் குழு இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட விரும்புகிறது. இந்நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்யும் நோக்கம் அதற்கு இல்லை என நெசிர்கி குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் என்ன நடைபெற்றது என்பது தொடர்பாக விசாரணை செய்ய வேண்டியது இலங்கையின் பொறுப்பு என்பதே பான் கீ மூனின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவத்துள்ளார். அப்படி எனின் முழுப் பொறுப்பையும் இலங்கை அதிகாரிகளிடம்; கொடுத்து விட்டு அவர்களுடைய நாட்டினிலேயே தங்கப்போகின்றனரா? அவ்வாறு எனின் 4 மாதங்கள் தேவை இல்லையே! பத்து நாட்களே போதுமானது. உடனே தீர்;வினை முன்வைத்து விடுவார்களே இலங்கை அரச தரப்புக்கள்.

இவ்வாறான எண்ணத்துடன் இவர்கள் இலங்கைக்கு வருவார்கள் எனின் இவர்கள் இலங்கை வருவதே பிரயோசனம் இல்லை என மக்களின்; கருத்து இருக்கின்றது. அவ்வாறு இவர்கள் இங்கு வந்தாலும் ஒழுங்கான முடிவு நமக்கு கிடைக்காது என்பதுதான். நாங்கள் எதிர்பார்க்கக்கூடிய தீர்வு. இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமை சட்டங்கள மீறப்படவில்லை மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள மீறப்படவில்லை என்பதுதான் முடிவாக இருக்கும். இல்லை எனின் இது பல வருடங்களுக்கு இழுத்து அடிக்கப்படும்.

கடந்த மே மாதம் இலங்கைக்கு வருகை தந்த போது முட்கம்பிக்குள் அடைபட்ட மகளை தனக்காக பாடல் பாடச் சொல்லி கேட்டவர்தானே பான் கீ மூன். இவ்வாறு உணர்வு கொண்ட பான் கீ; மூனை நம்பி எவ்வாறு பொறுப்பான பதவியை வழங்கலாமா என்ற கேள்வி எழுகிறது?

பொறுப்பாளிகள் பதில் சொல்வதில் தான் இருக்கிறது அதற்கான தீர்வு. அழுத்தங்கள் காரணமாக நாட்டுக்கு நாடு பயணம் செய்வது காரியமில்லை. உண்மையைக் கண்டறியப் போகிறோமா என்பதில் தான் இருக்கிறது உறுதியான தீர்வு.

கிளிப்பிள்ளை மாதிரி சொன்னபடி கேட்டால் வெளி உலகிற்கு பதில் சொல்வது கடினமானதே!


தமிழீழ விடுதலை புலிகளுடனான யுத்தத்தில் கிடைக்கப் பெற்ற வெற்றியானது ஒவ்வொரு ஆண்டும் விழா எடுத்து கொண்டாடப்படும் என அரசு அறிவித்துள்ளது. முதலாவது வருட வெற்றி நேற்று முன்தினம் வெகு விமர்சையாக கொண்டாப்பட்டது. ஆனால் இந்த இறுதி யுத்தத்தில் தமிழர்கள் எவ்வளவு மனிதப் பேரவலத்திளை சந்தித்தனர்.

  • அகதிகளாக வகை தொகையின்றி இடம் பெயர்ந்தனர்.
  • வீடுகள் சொத்துக்கள் சுகங்களை இழந்தனர்.
  • ஏராளமானோர் சொந்தங்களை பறி கொடுத்தனர்.
  • முட்கம்பி முகாமில் அடைக்கப்பட்டனர்.
  • புலிப்போராளிகள் என் சந்தேகத்தில் தடுப்பு காவலில் போடப்பட்டனர்.
  • கடத்தல்கள், காணாமல்போதல், கைதுகள், தடுத்து வைப்புக்கள் என்பன இடம் பெற்றன.
  • நீதிக்கு புறம்பான கொலைகள், குடியேற்றங்கள்
  • அப்பாவி பெண்கள் கற்பழிப்பு
  • அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் வீதிச் சோதனை சாவடிகள் என்பவற்றை அதிகரித்தனர்.
  • கடலில் சென்று மீன்பிடிப்பதற்கு தடை விதித்தனர்.
  • துணை ஆயுதக்குழுக்களின் அட்டகாசங்கள் ஓங்கி நின்றன.
  • அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தன.

யுத்தம் முடிந்து ஓராண்டு ஆகியும் தமிழர்களின் வாழ்க்கை இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்ப இல்லை. இவ்வாறான ஓர் நிலையில் இந்த வெற்றி விழா அவசியம்தானா என தமிழ் மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. உண்மையாகவே ஒரு தாய் நாட்டு மக்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுவது உண்மை எனின், தமிழ் மக்களது தேவைகளை பூர்த்தி செய்யாது, எப்படி இவ்வாறான வெற்றி விழா கொண்டாட முற்பட்டனர்? எனவும் தமிழ் மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் மக்களது அடிப்படைத் தேவைகள், கவலைகள், துன்பங்கள் அதை விட எழுத்துக்களால் வர்ணிக்க முடியாத கஸ்ரங்கள்; மக்களிடம் குவிந்து இருக்கும்போது அதற்கான முழுமையான தீர்வுவுகள் இன்னமும் வழங்கப்படாத நிலையில் தமிழ் மக்களை இழிவு படுத்துவது போல இந்த வெற்றி கொண்டாட்டமானது அமைந்துள்ளது.

வெற்றி கொண்டாட்டத்தினை பிரமாண்டமாக கொண்டாடுங்ள்;. ஆனால் அதற்கு முன்னர் இராணுவத்தினால் என்னென்ன தமிழ் மக்களது உடமைகள் அழிக்கப்பட்டதோ அவை அனைத்தினையும் திருப்பி கொடுக்க முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்.
எல்லாம் அரசினால் வழங்க முடியாது. ஏனெனில் எத்தனையோ தமிழ் மக்களின் உயிரினை இந்த அரசினால் வழங்க முடியாது. ஆகவே மக்களுக்கு வேண்டிய அடிப்படை தேவைகள் அனைத்தையும் அவர்கட்கு வழங்க வேண்டும் என்பது சர்வதேசத்தின் எதிர்பார்ப்பும் கூட.

மீளக்குடியேற்றினால் மட்டும் போதாது. அவர்கட்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்க வேண்டும். மீளக் குடியேறாத அனைத்து மக்களையும் மீள்குடியேற்றம் செய்து அவர்கட்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இதன் பின்னர் வெற்றிக் கொண்டாட்டங்களை தாராளமாக கொண்டாடலாம். .

தமிழ் கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்திக்கச் சென்ற போது,

பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் கூறினார், “வன்னி மக்களிடத்தில் நீங்கள் வழங்கிய மண்வெட்டிகள் சரியில்லை. அவை சீக்கிரத்தில் உடைகின்றன” என. அதற்கு ஜனாதிபதி, “பஷில் அந்த மண்வெட்டி யார் எமக்கு வழங்கியது?” என கேள்வி ஒன்றை வழங்கினார். அதற்கு பஷில் “அது இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டது” என கூறியதும், “நீங்கள் முறையிட வேண்டியது என்னிடம் இல்லை, இந்தியாவிடம்தான் என்றாராம் ஜனாதிபதி.

ஜனாதிபதியின் பொறுப்பான பதில்(?) பற்றி ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்!