twitter

















“உங்களுடைய பொழுதுபோக்கு என்ன?” என யாரிடமாவது கேட்டால் உடனே கூறுவார்கள்… பத்திரிகை வாசித்தல், வானொலி கேட்டல், தொலைக்காட்சி பார்த்தல் என. நாங்கள் பொழுதுபோக்காக கருதும் இந்த ஊடகங்கள் உண்மையாகவே பொழுதுபோக்கான விடயங்கள் அல்ல. உலகத்தில் நடைபெறுகின்ற அனைத்து விடயங்களையும் உடனுக்குடன் தருவதுடன், அறிவ+ட்டல் சிந்தனையை தூண்டல், மகிழ்வ+ட்டல் போன்றவற்றை சேர்த்து கனத்துடன் தருவது தான் ஊடகங்கள்.

“என்ர பிள்ளை சாப்பிடும் போதும் சரி, நித்திரை கொள்ளும் போதும் சரி, என்னிடம் கதை சொல்லும் போதும் சரி, காதில் ஒரு செவிட்டு மிசினை கொழுவினபடியே இருப்பாள். அதை கழட்டி விட்டு சிறிது நேரம் இரு என்றால் இருக்க மாட்டாள். என்ன என்று கேட்டால் றேடியோ கேட்கின்றன் என்று சொல்லுவாள். தற்பொழுது கையடக்க தொலைபேசியிலேயே ஊடகங்கள் உலா வருகின்றன. அதிகளவான தொலைபேசியில் எஸ்.எம்.எஸ் செய்தி, தொலைகாட்சி, வானொலி என்பவற்றை நாம் பார்க்கவும் கேட்கவும் கூடியதாகவும் உள்ளது.

“ஊடகங்களை மக்கள் உற்று நோக்கும் போது ஊடகங்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் ஊடகங்களின் செயற்பாடுகள் மாறித்தான் இடம்பெறுகின்றன. தற்போது எல்லாமே பொழுது போக்காகத்தான் உள்ளது அறிவு சார்பான விடயங்களோ அல்லது சிந்தனையை தூண்டுவனவாகவோ நல்ல விடயங்களை கற்றுக் கொடுப்பதாகவோ இல்லை. ஒரே அரட்டையும், சிரிப்பும், ஆடைக்குறைப்புமாகத் தான் இருக்கிறது அதைவிட தேவை இல்லாத சொற் பிரயோகங்களும்தான் காணப்படுகிறது” என்பது பலரது கருத்து.

“அன்றைய காலங்களில் எமது ஒலிபரப்பினை கேட்டுத்தான் தமிழ் மொழியை கற்றனர் மக்கள். அன்று ஒலிபரப்பாளர்கள் தெளிவாக தமிழில் ஒலிபரப்பு செய்தார்கள். ஆனால் இன்று அவ்வாறு இல்லை” என்கிறார் ரர்ஐஸ்வரி சண்முகம். கடினப்பட்டு இந்திய பானியை உச்சரிக்கினறனர.; ஏன் அப்படி இந்திய உச்சரிப்பை இங்கு கொண்டுவர வேண்டும்? ஆங்கிலம் கலந்து பேசுவது ஒரு நாகரீகம் என எண்ணுகின்றனர.; ஆனால் தமிழ் மொழியை மட்டும் பேசப்படுவது வரவேற்கத்தக்கது














அச்சு ஊடகங்களும் தவறுகள் விடுகின்றன. தேவையில்லாத சொற்களைச் சேர்த்தல்,
எழுத்துப் பிழைகள் விடுதல், கருத்து பிழைகள் விடுதல், பெயர்களை மாற்றுதல் போன்ற தவறுகள் விடப்படுகின்றன. இலத்திரனியல் ஊடகங்களினை மக்கள் உறுறுநோக்கி கொண்டே இருக்கின்ற அதேவேளை அவர்கள் கூட இதேமாதிரியான தவறுகளை விடுகின்றனர். நாட்டில் நடைபெறுகின்ற விடயங்களை துல்லியமாக அறிந்த கொள்ள முடியாமல் உள்ளது. ஊடகங்களை நம்பி அவர்கள் தரும் தகவல்களை சரியானவை என நம்பி நடைமுறை விடயங்களை அறிந்து கொள்ள முடியாமல் உள்ளது

ஊடகங்கள் சுதந்திரமாக இயங்க முடியாததற்கு இன்னுமொரு சக்தி ஊடகங்களுடன்
ஒன்றிப்போய் உள்ளது. அதுதான் அரசாங்கத்திடமிருந்து விதிக்கப்படும சில கட்டுப்பாடுகள் ஆகும். அரசாங்கம் சில விடயங்களிற்கு தணிக்கை செய்கிறது. ஊடகங்களினால் சொல்லப்படும் விடயங்கள் மக்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகளை தோற்று விக்ககூடியது என்பதால் அதனை சுயமாக இயங்க விடாது தடை செய்கிறது. இதனூடாக விளங்குவது ஊடகங்களின் வலிமையற்ற போக்கு.

ஊடகங்கள் நடைமுறையில் பொறுப்பற்றதாகவே நடந்து கொள்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மக்களின் விருப்பு வெறுப்புக்களை தெரிந்து கொள்ளாது தமக்கேற்ற வகையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றனர். இது தொகுப்பாளர்களிற்கும் நேயர்களுக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிககின்றது. மறுபுறம் அத்தோடு ஒன்றிப்போக வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. இதனால் மக்கள் தங்கள் இரசனையை மாற்றிக் கொள்கிறார்கள்.













யுத்தகாலத்தில அனைத்து செய்திகளையும் நான் முந்தி நீ முந்தி என ஊடகங்கள் முந்தி அடித்து தந்தன. அந்நேரம் பொறுப்புடனும் துரிதமாகவும இயங்கியது. அதுமட்டும் அல்லாது யுத்த களத்தில் நடைபெறுகின்ற விடயங்களை கூட சில ஊடகங்கள் ஒலிபரப்பி கொண்டு இருந்தது. இவ்வாறு காணப்பட்ட ஊடகங்கள் இன்று சில விட
யங்ளை மட்டும்தான் மக்களிற்கு பிரயோசனமாக வழங்குகின்றன. ஏனையவை ஏனோதானே என அரட்டையான நிகழ்ச்சியாகத்தான் உள்ளது. ஆரம்ப காலங்களில் கூறுவதுபோல அது ஒரு பொழுது போக்காகத்தான் அமைந்து காணப்படுகிறது.

தற்பொழுது ஊடகங்களின் நிகழ்ச்சிகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து நிதானமாக யோசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவ்வாறு இல்லையெனில் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மிகவும் சலிப்பானதாக காணப்படுகிறது. இவை அனைத்தையும் தாண்டி எளிமையாக மக்களுக்கு புரியக்கூடியதாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கல் வரவேற்கத்தக்கது.

அனைவரதும் ஒட்டு மொத்தப் பார்வையும் ஊடகங்கள் மீது குவிந்துள்ளமையால் ஊடகங்கள் தமக்குரிய பொறுப்புக்களை இனம் கண்டு அனைத்து விடயங்களையும் சரிவரச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றனர். காரணம் அவர்களை நம்பியே சமுகம் உள்ளது.


பி.கு : இலங்கை ஊடகங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடவில்லை. பத்திரிகைகள் - ஓ.கே, வானொலிகள் - பரவாயில்லை, தொலைக்காட்சிகள் - சுத்தம்…!





















போதைபொருள் பாவனை, கடத்தல், விற்பனை செய்தல் போன்ற போதைபொருள் பாவனையாளர்களால் ஏற்பட்டுள்ள சமூக பிரச்சினை என்பன இன்று நாட்டில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. போதைபொருளை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. போதைபொருள் கடத்தலுக்காக சில நாடுகள் மரதண்டனையை கூட சட்டமாக பிரயோகித்து வருகின்றன. இவ்வாறான நடவடிக்கை மேற்கொண்டு வந்துள்ள போதும் போதைப்பொருள் பாவனையானது சமூகத்தின் மத்தியில் குறைந்து விடவில்லை. போதைப்பொருள் பாவனையால் ஏற்படுகின்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் முகமாக ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் இலங்கையை பொறுத்த வரையில் குறைவாகவே காணப்படுகின்றது. போதை பொருளை பாவிப்பதனால் பாவிப்பவர்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு உள்ளாவதோடு பிறருக்கும் தீங்கு விளைவிப்பவர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர்.















நான் இங்கு போதைப்பொருள் பாவனை என்று கூற வந்தது குடிப்பழக்கத்தை அல்ல. குடு, கஞ்சா, அபின் போன்ற எம் செயற்பாடுகள் அனைத்தையும் கட்டிப்போடும் கொடிய போதைப்பொருட்களைத் தான். கொழும்பில் இதற்கென்று சில ஏரியாக்களும் சில இரகசிய முகவர்களும் இருக்கின்றார்கள். அவற்றோடு சம்பந்தப்பட்டவர்களே அவர்களை இனம் காணமுடியும். தங்களுக்குள் இரகசியக் குறியீடுகள் வைத்திருக்கின்றார்கள். பாடசாலை மாணவர்கள் தலைநகரில் போதைப்பொருட்கள் பாவிப்பது இன்று வேகமாகப் பரவிவருகின்றது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பற்றி உரிய கவனம் எடுக்காதபட்சத்தில் இனிவருங்காலம் அதாள பாதாளத்திற்குள் சென்றுவிடும். போதைப்பொருள் பாவனையாளர்களின் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட சிலரிடம் கருத்துக்கேட்ட போது “போதை பொருளை பாவிப்பவர்களினால் எங்களுடைய பிள்ளைகளும் இந்த பழக்கத்திற்கு உள்ளாகுபவர்களாக மாற வாய்ப்பு இருக்கின்றது. இவர்கள் போதைக்காக பயன்படுத்தும் கூடாரங்களும் எங்கள் வீடுகளின் அருகிலேயே காணப்படுகின்றது”, “இந்த குடுகாரர்கள் போதையில ரோட்டுல காட்டுக் கத்தல் கத்திக் கொண்டு திரிவதோடு தூஷனங்களும் சொல்லித் திரிகின்றனர்.”














இது இவ்வாறிருக்கையில் இன்று வர்த்தக ரீதியில் போதைப்பொருட்கள் சந்தைப் படுத்தப்படுகின்றன. அநேகமாக சட்ட விரோதமான கடத்தல் போன்ற வழிகளிலேயே இவ் வர்த்தகம் நடைபெறுகின்றது. மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் இத்தகைய நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்படுவதாலும் இதற்கு உடந்தையாக வருமானத்தை பெற்று கொள்ளும் நோக்கில் சில பெரும்புள்ளிகள் இருப்பதினாலும் இதனை இல்லாதொழிப்பது ஒரு கடினமான செயற்பாடாகவே மாறி வருகின்றது. போதைபொருள் பாவனையால் ஏற்படும் தீங்குகளும் பாதிப்புகளும் அழிவுகளும் குறித்து மக்களிடையே வழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜூன் 26 ஆம் திகதி சர்வதேச போதைபொருள் ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதும் சமுகத்தின் மத்தியில் ஏட்டுச் சுரைக்காயாகவே இதுபற்றிய விடயம் காணப்படுகின்றது.














சில சந்தர்ப்பங்களில் போதைபொருளானது கிராம மக்களிடத்தில் மருந்து பொருளாகவும் பாவிக்கப்பட்டது. இவ்வாறான மடமை செயற்பாடுகளும் மக்களிடத்தில் காணப்பட்டுள்ளது. இப் போதைப் பொருளானது தற்போது நவீன வடிவங்களிலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான போதைபொருட்கள் கடத்தவும் மிக இலகுவான முறையில் பாவனை செய்ய கூடியதாக காணப்படுகின்றது. இவைகள் பற்றி விளக்கம் வழங்கத் தக்க வகையில் 1988 ஆம் ஆண்டு ஜக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருளுக்கு எதிரான உலக மாநாடு நடைபெற்றமை குறிப்பிட தக்கது. அதாவது நாட்டின் உல்லாச பயணிகளின் வருகையால் இலங்கையில் நவீன போதைபொருட்களும் உருவெடுத்துள்ளது.












போதை ஒழிப்பை மேற்கொள்ள ஒவ்வொருபவரும் ஒத்துழைக்க வேண்டும். மேலும் போதை பொருள் ஒழிப்புக்கு பல சட்டங்கள் மட்டும் இருந்தால் போதுமானது அல்ல சகலரின் ஒத்துழைப்பும் அவசியம். இதன் மூலமே போதை பொருள் ஒழிப்பை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும். போதைக்கு அடிபணிபவர்களை அதிலிருந்து மீட்பதற்கும் இளச் சந்ததினரை அதிலிருந்து பாதுகாப்தற்கும் அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்ற போதிலும் பல சமூக நாச சக்திகளா சமூகத்தின் மத்தியில் பல சீர்கேடுகள் இன்னமும் நிகழ்கின்றன.











சிங்களவர்கள் தமிழ் பேசமாட்டர்கள். அது அவர்களுக்கு தேவையும் இல்லை. வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து வருபவர்கள் தாங்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அந்தரப்படும் வரையில் சிங்களம் படிக்க மாட்டார்கள். இன்று தலை நகரில் வந்து பெரிய பெரிய இடங்களில் எல்லாம் உத்தியோகம் பார்ப்பவர்கள் யார்? மூன்று மொழிகளையும் சரளமாகப் பேசக்கூடியவர்களாக வளர்ந்து வருபவர்கள் யார்? இதே போல் பெரும்பான்மையாக தலைநகரில் எங்கும் கூலிவேலைகளுக்கும் இதர வேலைகளுக்காகவும் அமர்த்தப்படுபவர்கள் யார்? ஒரு கணம் சிந்தித்தீர்களா? எல்லாம் மலையகப்பகுதியினர் தான். ஏன் இந்த வேறுபட்ட இரண்டு நிலை? அந்தக் காலத்தில் மலையக கல்விநிலை வீழ்ச்சியை அடைந்திருந்தன. இன்றும் ஏன் வீழ்ச்சி அடைகின்றது. குறித்த ஒரு பிரிவினர் மட்டும் தொடர்ந்து படித்து முன்னேறும் போதும் பலர் மலையகத்திலும் தலைநகரிலும் கூலி வேலையாட்களாக இருக்கக் காரணம் என்ன?










எங்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை எனது வேலை சரியாக நடந்தால் போதும், என்று நினைக்கும் அரசியல் தலைவர்கள் சிலராலும் தங்கள் ஆதாயத்திற்காக தொழில்பார்க்கும் சில அதிகாரிகளாலும் தான். இன்றைய மலையக சிறுவர்களின் கல்வி நிலைகுலைந்து காணப்படுவதற்கும் இவர்கள் தான் காரணம். சிறுவர்களுக்கான உரிமைகள் அவர்களுக்கான சட்டங்கள் என்பவை பலரும் அறிந்த விடயமே. அவர்கள் கல்வி கற்கும் உரிமையானது மறுக்கமுடியாத ஒன்று. அதனைக்கிடைக்க சரியானமுறையில் வழிவகைகள் செய்கின்றோமா? பல்வேறுபட்ட காரணங்களுக்காக சிறுவர்கள் இன்றும் வேலைக்கமர்த்தப் பட்டுக்கொண்டிருக்கிறர்கள். குடும்பத்தைக் காப்பாற்ற படிப்பை விடுத்து கனவுகளுடனும் கைநிறைய சம்பாதிக்கும் எண்ணத்துடனும் தலைநகர், வெளிநாடு என கையிலுள்ள காசைக்கூட கரைத்து சீரழிகிறார்கள். அவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுவர்களைப் பற்றி அவர்களின் பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ சிந்திப்பதில்லை. இவ்வளவு ஏன் அந்த பிள்ளைகளை வேலைக்கமர்த்தும் முதலாளிகள் கூட சிந்திப்பதில்லை. தங்கள் பிள்ளைகளை மட்டும் அவர்கள் சர்வதேச பாடசாலைகளில் சேர்ப்பார்கள். இவ்வாறான நிலமைகளினால் பிள்ளைகள் தொடர்ந்தும் மிகுந்த மன உலைச்சல்களுக்கு ஆளாகின்றார்கள்.



“நாங்க என்னா செய்றது? நாங்க பிறந்து வளந்த சூழ்நிழை அப்பிடி என்ன பண்றது மழைக்கு கூட ஸ்கூல்ல ஒதுங்கவிட்டது இல்ல. வறுமை எங்கள ஆட்டிப்படைச்சிருச்சி. நாங்க படிக்காத நிலையில என்ன வேலை செய்றது? எங்க போனாலும் என்ன படிச்சிருக்கிங்கனுதா கேக்குறாங்க அப்பிடி இருக்கையில வீட்டு வேலைதான் சரியாப் படுது” என்று என்று அங்கலாய்க்கிறார்கள் இன்றைய மலையக பெரும்பாலான பெண்கள். இப்படியான சந்ததியினருக்கு சரியான வழிகாட்டல் இல்லாமையே காரணம்.










பிள்ளையின் படிப்புக்கு மாதம் ஐயாயிரம் செலவு செய்யும் முதலாளிமார் ஒவ்வொருவரது வீட்டிலும் ஒரு சிறுவர் தொழிலாளி வீதம் இருக்கின்றார்கள். அவர்களது செலவில் ஒரு பகுதியையாவது இவர்களுக்கென செலவு செய்யலாமே என்ற எண்ணம் வந்தால் எப்படி இருக்கும்? உலகலாவிய ரீதியில் இலங்கை கல்வி நிலை முன்னேற்றம் கண்டுள்ளது. படித்தவர்களின் எண்ணிக்கை 92 சதவிகிதத்திலும் உயர்வாக உள்ளது. தற்போது இலவசக் கல்வி, சீருடை, பாடப்புத்தகம், என்பவற்றோடு காலை உணவு வழங்கும் திட்டமும் நடைமுறையிலுள்ளது. அனேகமாக அனைத்து அரச பாடசாலைகளிலும் இவை வழங்கப்படுகிற நிலையில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதது யாருடைய தவறு….?


மலையகத்தில் ஆண்பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் கல்வியில் முன்னிற்கிறார்கள். இருப்பினும் பொருளாதார பிரச்சினை ஏற்படும் போது பெண் பிள்ளைகளின் கல்வியே பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஏனெனில் மற்றவர்களின் சுகயீனம், தாய்மார்களின் பிள்ளைப்பேறு, விருந்தினர் வருகை, திருவிழாக்களின் போது சம்மந்தப்பட்டவர்களை கவனிப்பதற்காக பாடசாலை செல்ல அவர்கள் தடை
செய்யப்படுகின்றனர். வீட்டு வேலைகள் அனைத்தையும் தாயாரோடு பகிர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தப்படுவதால் வீட்டில் படிக்க நேரமில்லாமல் இருக்கின்றது. குறிப்பாக பெண்பிள்ளைகள் பருவமடைந்ததும் சடங்கு சம்ரதாயம் என்ற பேரில் மூன்று நான்கு மாதங்கள் வீட்டில் நிறுத்தி விடுவார்கள். இவ்வாறு மூன்று மாதத்திற்கு மேல் வீட்டில் நிறுத்தி வைக்குமிடத்து அவர்கள் பாடசாலையை விட்டு இடைநிறுத்தப்படுகின்றனர். பருவமடைந்ததற்குப் பிறகு ஏனைய ஆண் பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க விடமாட்டார்கள். இது போன்ற விடயங்களாலும் கல்வி புறக்கணிக்கப்படுகிறது.











ஒரு சிலர் இவ்வாறான சம்பிரதாயங்களை தேவையற்றதாக கருதுகின்றார்கள்.
இவர்களுக்கு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவுகின்றன. சில கருத்தரங்குகளையும் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளது. இருப்பினும் இவ்வாறான உதவிகள் ஒரு சிலரை அல்லது ஒரு பிரதேசத்தையே சென்றடைகிறது. மக்கள் மத்தியில் இவ்வாறான சம்பிரதாயங்கள் ஊறிக்கிடந்தாலும் காலப்போக்கில் அவை மாறுபடக்கூடியவை தான். பிள்ளைகளுக்கான கல்வி எந்தளவு முக்கியம் என்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தவரை படித்த சமூகம் அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சிக்க வேண்டும்.


சிறுவர்களை பாதுகாக்க வேண்டியதும், அவர்களுக்கு குடும்பத்தை தவிர்ந்த இன்னுமொறு உலகம் இருப்பதை உணர்த்துவதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொறுப்பானவர்கள் எல்லோருடைய கடமையுமாகும். அவர்களது உரிமை சரியான முறையில் வழங்கப்பட வேண்டும். சற்று சிந்தியுங்கள்.. அவர்களுக்கே உரித்தான கல்வியை வழங்குவதற்கு முழு சமூகமும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

தகவல் மூலம் - மெகி













அண்மைக்காலத்தில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகளால் சுமார் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான வட பகுதி மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் ஏறக்குறைய ஆறுமாதகாலமாக அங்கு சொல்லொனாத் துயரங்களை அனுபவித்தனர். பின்னர் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் சமூகசேவைகள் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா ஆகியோரின் துரித முயற்சியில் கட்டம் கட்டமாக அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டனர். தடுப்புக்காவலில் வைத்திருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள், சந்தேக நபர்களும் விடுவிக்கப்பட்டனர். இன்னமும் ஒன்றரை இலட்சத்திற்கும் குறைவானவர்களே மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்காக வழங்கப்பட்ட சலுகையா? அல்லது தேர்தல் முடிந்தபின்னும் அந்த நடவடிக்கைகள் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.








மீள்குடியேற்றம் என்பது நம்; நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தக் கூடியதாகும். இடம்பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படும் போது இழந்த அவர்களது வாழ்வாதாரத்துடன் சரிந்த தேசத்தின் பொருளாதாரமும் மேம்பாடடையும். வடபகுதி பிரதேசங்களைப் பொறுத்த வரையில் வளம் மிகுந்த மண்ணைக் கொண்டது, நீர்ப்பாசனத் திட்டங்களைக் கொண்டது. விவசாயத்துக்கு ஏற்ற பிரதேசம். பயிர்ச் செய்கையில் புகழ் பெற்ற வடபகுதியின் பெரும்பாலான இடங்கள் இன்று வெற்று நிலமாகவே காணப்படுகின்றது.









இதுமாத்திரமல்லாமல் மீன்பிடியிலும் வடபகுதி சிறந்து காணப்படுகின்றது. நன்னீர், உவர்நீர் இந்த இரண்டு மீன்பிடியில் மக்கள் ஈடுபடுகின்றனர். தளர்த்தப்பட்டிருக்கும் மீன்பிடிக்கட்டுப்பாடுகளுடன் மீனவர்களுக்குத் தேவையான உரிய வசதியையும் இந்த அரசு செய்து கொடுக்கட்டும். இவ்; வெற்று நில பயிர்ச்செய்கைகளையும் மீன் பிடியினையும் மீண்டும் மேம்படுத்த மனித வளம் மிக அவசியமானதே! மீள்குடியேற்றப்படும் மக்கள் உற்பத்திகளை மேம்படுத்தும் போது அவை உரிய முறையில் சந்தைப் படுத்தப்பட்டு வருவாயினைப்பெற்றுக் கொள்ள முடியும்.
பொருளாதார நெருக்கடியானது உலக நாடுகளைப் போல நமது நாட்டிலும் அதிகரித்து வருகின்றதுடன் அரசாங்கமும் பெருமலவிலான கடன்களை பெற்றுள்ளது. இதற்கு மாற்றீடாக நம் நாட்டின் உற்பத்திகளை அதிகரிக்கச் செய்கினற போது பொருளாதார வீழ்ச்சிகளை ஓரளவாவது குறைக்க முடியும்.


தேர்தல் காலங்களில் வடபகுதி மக்களுக்கு வழங்கி வந்த சலுகைகள் தொடர வேண்டும். புதிய அரசாங்கம் நாட்டினதும் நாட்டு மக்களினதும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.








இலங்கையில் பத்திரிகையில் இடம்பெறும் தவறுகள் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் முறைப்பாடு சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள் பல ஆண்டுகளாக இருந்ததில்லை. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு இலங்கைப்பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கைப்பத்திரிகை வெளியீட்டு அமைப்பும் இலங்கை சுதந்திர ஊடக அமைப்புமாக இணைந்து 2003ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் திகதி "இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு" வை உருவாக்கியது. இதில் அரச மற்றும் தனியார் ஊடகங்கள் உள்ளடங்குகின்றன. தெற்காசியாவிலேயே முதலாவதாக இம்மாதிரியான ஆணைக்குழு இலங்கையிலேயே உருவாக்கப்பட்டது.






1998 இல் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றின் முடிவில் ஊடகங்களுக்கு சுயகட்டுப்பாடு அவசியம்;, தான்தோண்றித்தனமாகச் செயற்பட முடியாது. அத்துடன் ஏனைய நெருக்குவாரங்களின்றி ஊடகங்கள் இயங்க வேண்டும் போன்ற
காரணத்தால் இந்த பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. இங்கிலாந்துப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவை முன்னுதாரணமாகக் கொண்டு 1995ம் ஆண்டு 11ம் இலக்க "பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் சட்டம்" மூலம் செய்தி ஆசிரியர்களுக்கான தொழில் நடைமுறைக்காக ஓர் ஒழுக்கக் கோவை தயாரிக்கப்பட்டது.

இந்த ஒழுக்கக் கோவையில் 9 தலைப்புகளின் கீழ் ஒழுக்க நெறிமுறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமான சில

1. சரியான செய்திகளை வெளியிட வேண்டும். திரிவுபடுத்தல், பக்கம் சாராமை போன்ற பல்வேறு விடயம் பற்றி கவனமெடுத்தல் வேண்டும்.


2. தவறுகள் ஏற்படும் பட்சத்தில் அதனைத் திருத்தம் செய்து வெளியிட வேண்டும். அல்லது அச் செய்தி தொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது அவரது கருத்துக்களை பத்திரிகையில் வெளியிட வேண்டும்.


3. ஒவ்வொரு ஊடகவியலாளரும் அவரின் தொழிலின் கொளரவத்தைப் பேண வேண்டும்.

4. தனிப்பட்ட நபர் வாழ்க்கை நம்பந்தமான செய்திகளை வெளியிடும் போது அவர்களின் அனுமதியுடன் வெளியிட வேண்டும்.













இந்த நடைமுறைகளைப் பத்திரிகை ஆசிரியர்கள் மீறும் போது ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடலாம். இதனால் அது ஊடக சுதந்திரத்தைப் பாதிக்கும். பாதிக்கப்பட்ட நபர்கள் செய்தி வெளியாகி 2 வருடங்களுக்குள் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறையிட வேண்டும். இதற்காக 11 பேர் உள்ளடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 14 நாட்களுக்குள் தீர்வினை பெற்றுத்தர தவறுமிடத்து அவர்கள் நீதிமன்றத்தில் முறையிடலாம்.
பாதிக்கப்பட்ட நபர் சார்பாக நீதி மன்றத்திற்கு முறையிட பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிற்கு அதிகாரமில்லை.


இவ் ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 5 வருடங்களுக்குள் 600 இற்கு மேற்பட் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அதில் 90மூ ஆன முறைப்பாடுகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னுமொரு முக்கிய விடயம் இவ் ஆணைக்குழு
வின் மூலம் தொலைக்காட்சி வானொலிகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு
தீர்வைப் பெறமுடியாது.