twitter


தமிழீழ விடுதலை புலிகளுடனான யுத்தத்தில் கிடைக்கப் பெற்ற வெற்றியானது ஒவ்வொரு ஆண்டும் விழா எடுத்து கொண்டாடப்படும் என அரசு அறிவித்துள்ளது. முதலாவது வருட வெற்றி நேற்று முன்தினம் வெகு விமர்சையாக கொண்டாப்பட்டது. ஆனால் இந்த இறுதி யுத்தத்தில் தமிழர்கள் எவ்வளவு மனிதப் பேரவலத்திளை சந்தித்தனர்.

  • அகதிகளாக வகை தொகையின்றி இடம் பெயர்ந்தனர்.
  • வீடுகள் சொத்துக்கள் சுகங்களை இழந்தனர்.
  • ஏராளமானோர் சொந்தங்களை பறி கொடுத்தனர்.
  • முட்கம்பி முகாமில் அடைக்கப்பட்டனர்.
  • புலிப்போராளிகள் என் சந்தேகத்தில் தடுப்பு காவலில் போடப்பட்டனர்.
  • கடத்தல்கள், காணாமல்போதல், கைதுகள், தடுத்து வைப்புக்கள் என்பன இடம் பெற்றன.
  • நீதிக்கு புறம்பான கொலைகள், குடியேற்றங்கள்
  • அப்பாவி பெண்கள் கற்பழிப்பு
  • அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் வீதிச் சோதனை சாவடிகள் என்பவற்றை அதிகரித்தனர்.
  • கடலில் சென்று மீன்பிடிப்பதற்கு தடை விதித்தனர்.
  • துணை ஆயுதக்குழுக்களின் அட்டகாசங்கள் ஓங்கி நின்றன.
  • அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தன.

யுத்தம் முடிந்து ஓராண்டு ஆகியும் தமிழர்களின் வாழ்க்கை இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்ப இல்லை. இவ்வாறான ஓர் நிலையில் இந்த வெற்றி விழா அவசியம்தானா என தமிழ் மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. உண்மையாகவே ஒரு தாய் நாட்டு மக்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுவது உண்மை எனின், தமிழ் மக்களது தேவைகளை பூர்த்தி செய்யாது, எப்படி இவ்வாறான வெற்றி விழா கொண்டாட முற்பட்டனர்? எனவும் தமிழ் மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் மக்களது அடிப்படைத் தேவைகள், கவலைகள், துன்பங்கள் அதை விட எழுத்துக்களால் வர்ணிக்க முடியாத கஸ்ரங்கள்; மக்களிடம் குவிந்து இருக்கும்போது அதற்கான முழுமையான தீர்வுவுகள் இன்னமும் வழங்கப்படாத நிலையில் தமிழ் மக்களை இழிவு படுத்துவது போல இந்த வெற்றி கொண்டாட்டமானது அமைந்துள்ளது.

வெற்றி கொண்டாட்டத்தினை பிரமாண்டமாக கொண்டாடுங்ள்;. ஆனால் அதற்கு முன்னர் இராணுவத்தினால் என்னென்ன தமிழ் மக்களது உடமைகள் அழிக்கப்பட்டதோ அவை அனைத்தினையும் திருப்பி கொடுக்க முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்.
எல்லாம் அரசினால் வழங்க முடியாது. ஏனெனில் எத்தனையோ தமிழ் மக்களின் உயிரினை இந்த அரசினால் வழங்க முடியாது. ஆகவே மக்களுக்கு வேண்டிய அடிப்படை தேவைகள் அனைத்தையும் அவர்கட்கு வழங்க வேண்டும் என்பது சர்வதேசத்தின் எதிர்பார்ப்பும் கூட.

மீளக்குடியேற்றினால் மட்டும் போதாது. அவர்கட்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்க வேண்டும். மீளக் குடியேறாத அனைத்து மக்களையும் மீள்குடியேற்றம் செய்து அவர்கட்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இதன் பின்னர் வெற்றிக் கொண்டாட்டங்களை தாராளமாக கொண்டாடலாம். .

தமிழ் கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்திக்கச் சென்ற போது,

பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் கூறினார், “வன்னி மக்களிடத்தில் நீங்கள் வழங்கிய மண்வெட்டிகள் சரியில்லை. அவை சீக்கிரத்தில் உடைகின்றன” என. அதற்கு ஜனாதிபதி, “பஷில் அந்த மண்வெட்டி யார் எமக்கு வழங்கியது?” என கேள்வி ஒன்றை வழங்கினார். அதற்கு பஷில் “அது இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டது” என கூறியதும், “நீங்கள் முறையிட வேண்டியது என்னிடம் இல்லை, இந்தியாவிடம்தான் என்றாராம் ஜனாதிபதி.

ஜனாதிபதியின் பொறுப்பான பதில்(?) பற்றி ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்!

2 comments:

  1. சோரம் போன ஒரு நாடு
    வெற்றி கொண்டாட்டத்திற்கு ......
    ஒரு நாடு
    ஒரு மக்கள்

    நன்றி பா.விஜய்

  1. ஜனாதிபதியின் பொறுப்பான பதில்(?) பற்றி ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்!//

    வாழ்நாள் பூராகவுமா?

Post a Comment