twitter



இலங்கையை அடுத்த 6 வருடத்திற்கு ஆளப்போகும் ராஜாவைத் தேர்ந்தெடுப்பதற்கான ஜனாதிபதித்தேர்தல் 2010 நாளை இடம்பெறவுள்ளது. ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் நாட்டு மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மணித்துளிகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.


இம்முறை வேறெப்போதும் இல்லாத அளவிற்கு 22 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடுகின்றனர் அதில் முன்னிலையில் இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களும் (மஹிந்த ராஜபக்ஷவும் சரத்பொன்வேகரவும்) மக்களை தேர்தலில் பங்குபற்றுவதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார்கள்.

ஆனாலும் சிறுபான்மையின மக்கள் பலர் அதில் நாட்டம் கொள்ளவில்லை. ‘மக்களின் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் ராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?’ என எல்லாமே ஒன்றுதான் என எண்ணி வருகின்றனர். ஆனாலும் அவ்வாறு இல்லாமல் மக்கள் அனைவருக்கும் நம் நாட்டின் தலைவரை தெரிந்து எடுப்பது மக்களது கடமை ஆகும். இந்த உரிமையை மக்கள் தவற விடவும் கூடாது விட்டும் கொடுக்கவும் கூடாது.

யார் ஜனாதிபதியாக வந்தாலும் எந்த ஜனாதிபதி எமது நலனை பேணப்போகின்றார்கள்? என இருக்க கூடாது. சில மக்கள் இரு மன நிலையில் உள்ளனர் சரத்பொன்சேகராவிற்கு வாக்களிப்பதா? அல்லது மஹிந்தவிற்கு வாக்களிப்பதா? என்பதில் குழம்பியுள்ளனர். சட்ட விரோதமாக பல பதாதைகள் சுவரொட்டிகள் உள்ளதை காணக்கூடியதாக உள்ளது. அதனை மக்கள் கிழித்து எறிவதையும் சேறு பூசுவதையும் சுவரொட்டிகள் மீது வெற்றிலை துப்பல்களையும் நேரடியாக காணக்கூடியதாக உள்ளது.

வீதியில் இருந்து துண்டு பிரச்சாரங்கள் செய்யும்போது துண்டு பிரசுரங்iளை வேண்டி கொடுப்பவர்கள் முன்னே கிழித்து எறிந்து விட்டு செல்வதை காணக்கூடியதாக உள்ளது. சரத்பொன்சேகாவிற்கு வாக்கு அளிக்கும்படி இராணுவத்தினர் வெளிப்படையாகவே பிரச்சாரங்கள் செய்தனர். இவ்வாறு பிரச்சாரம் செய்த பலாலி படைமுகாம் அதிகரியான ஆர் டீ ஏ ரணவீரரை கைது செய்துள்ளனர். அது மட்டும் அல்லாது படையினர் தின் பண்டங்கள் வழங்குவதையும் காணக்கூடியதாக இருந்தது.

ஒரு சில மக்கள் மஹிந்த ஆட்சிக்கு வந்தால் மீள்குடியேற்றங்கள் செய்வார் என்றும் அதே நேரம் எதிரணி வேட்பாளர் அரச உத்தியோகத்தர்களிற்கு மாத வருமானத்தினை பத்து ஆயிரம் ருபாவால் அதிகரிப்பார் என்றும் நம்பியுள்ளனர்;. இவ்வாறான சூழ் நிலைகளில் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என திணறுகின்றனர். ஒரு சில மக்கள் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வேண்டும் என சரத்பொன்சேகரவிற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். சில வீட்டு முன் வாயில்களில மஹிந்தவின் உருவப்படமும் டக்ளஸ் தேவானந்தாவின் உருவப்படமும் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. ஈ.பி.டி.பி.யினர் பிரசாரங்களில் முன்னனியில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது. 20-01-2010 யாழில் முதல் முதலாக வன் முறைகள் பதிவாகியுள்ளது. எதிரணியினரின் பிரச்சாரத்திற்கு சென்று வந்த மக்கள் மீது கல்வீக்சு மேற்கொள்ளப்பட்டது. எது எவ்வாறு இருப்பினும் யார் ஆட்சி பீடத்தில் ஏறினாலும் மக்களுடைய நலனை பேணி நாட்டை பாதுகாப்பது கடமையாகும்.

0 comments:

Post a Comment